Posts

Showing posts from October, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 20 புதுப்படம் ரிலீஸுக்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு?     ஏன்?   வேலூர்ல இருந்தா புழல்ல இருந்தான்னு கேக்கறாரு! பையன் ரொம்ப ஊதாரித் தனமா செலவு பண்றான்னு சொல்றீங்களே சிகரெட், தண்ணின்னு … சேச்சே! அந்த பழக்கமெல்லாம் கிடையாது! நிறைய டீ காபி குடிப்பான்னு சொல்ல வந்தேன்!  ஆம்னி பஸ்ல என்ன கலாட்டா ? பால் விலையேத்தனாங்கன்னு கோவா போற பஸ்ஸுக்கு கூட டிக்கெட் விலையை ஏத்திட்டாங்களாம்! தலைவரை நினைச்சா சிரிப்பா இருக்கு!     ஏன்? கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்தது போல கட்சியில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும் வெளிக்கொண்டுவர நீதிமன்றம் உதவ வேண்டும்னு அறிக்கை வெளியிடறாரே! மன்னர் வாளை உறையில் வைப்பதே இல்லையாமே! உறையில் வைக்கையில் இசகு பிசகாகி ரத்தக்கறை படிந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் காரணம்! இந்த ஏரியாவிலேயே அவருக்குத்தான் இன்னிக்கு மதிப்பு அதிகம்!     ஏன்?    பால்வியாபாரம் பண்றாரே! எங்க தலைவர் கிட்டே சரக்கே இல்லைன்னு நீ சொன்னது தப்பாயிருச்சு!     எப்படி சொல்றே?   இப்பத்தான் டாஸ்ம

“கண்ணாமூச்சி”

Image
“கண்ணாமூச்சி”   மூலம் ருஸ்கின் பாண்ட்     தமிழில் “தளிர் சுரேஷ்” நான் அந்த ரயிலின் ‘ரொகானா’ கம்பார்ட்மெண்டில் அமர்ந்திருந்தபோது அந்த பெண் என்னுடைய பெட்டியில் ஏறினாள். அவளுடன் வந்த இருவர் அவளது பெற்றோராய் இருக்க வேண்டும் அவர்கள் மிகவும் கவலையாக இருந்தனர். அவளது அம்மா அவளது பொருட்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்றும் புதியவர்களிடம் பேச்சை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தாள்.   நான் பார்வையில்லாதவன் என்னால் அந்த பெண் எப்படி இருப்பாள் என்று சொல்ல முடியாது ஆனால்,அவள் பாதங்களிலிருந்து காலணிகளின் ஓசையைக் கொண்டு அவள் என்னருகேதான் அமர்ந்திருக்கிறாள் என்று நினைத்தேன். நான் அவள் குரலைக் கேட்க விரும்பினேன்.   ‘நீங்கள் டேராடூனுக்கு செல்கிறீர்களா?” நான் அந்த ரயில் கிளம்பியதும் கேட்டேன். நான் அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருந்ததால் என்கேள்வி அவளுக்கு அதிர்ச்சியை தந்திருக்க வேண்டும். எனவே வியப்புடன் ‘நான் உங்களை கவனிக்கவே இல்லை யாரும் இல்லை என்று நினைத்தேன்’ என்றாள்.   நான் அதில் வியப்பேதும் அடையவில்லை. ஏனேனில் பார்வையுள்ள மனிதனே தன் முன்னால் என்ன இரு

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வானம் அழுதது பூமி மகிழ்ந்தது மழை! பற்றியதும் வழுக்கியது பாசி! முடியும் வரை பயணம்! அலுக்கவில்லை! சருகுகள்! அடைத்து விற்கிறார்கள்! நிறையவே இல்லை! சிப்ஸ்! அனுமதியின்றி ஆக்ரமிப்பு வீட்டினுள் புகுந்தது ஒட்டடை! தேயத் தேய பிறந்தது வழி! பாதை! மேகப்படையெடுப்பு சமாதானத் தூது! வானில் கொக்குகள்! தேடிக்கொண்டே இருக்கின்றன! தொலைந்து போகின்றன எறும்புகள்! சிறைபட்ட கைதி! சிக்கியும் தப்பினான்! ஜன்னல் காட்சி! துடைத்து எடுத்தாலும் சேர்ந்து கொண்டே இருக்கிறது! அழுக்கு! கருவூன்ற வெட்டப்பட்டன கன்றுகள்! வாழை! ரசிக்கவில்லை ருசித்தது! மாக்கோலத்தில் அணில்! குளிர்ந்ததும் குளிர்ந்தார்கள் மக்கள்! மாலைச் சூரியன்  தவழ்கையில்  ஈரமானது தரை!  குழந்தை!  மலர் மேடை!   ஜதிபோட்டன! வண்ணத்துப்பூச்சிகள்!  ஒளிந்து கொண்ட மரங்கள்! வெளிச்சம் போட்டன  மின்மினி!  கொள்ளை அடித்தாலும்  திருடனாவதில்லை!   குழந்தைகள்!   வீடெல்லாம் அலங்கோலம்   அழகாய் இருந்தது   

தித்திக்கும் தமிழ்! பகுதி 2 கோட்டானை பெற்ற பார்வதி!

Image
தித்திக்கும் தமிழ்! ஏதோ பொழுது போக்காக சென்ற வாரம் இந்த பகுதியினை தொடங்கிவிட்டேன்! இணையத்தில் பல செய்யுள்களை தேடியும் படித்தும் பார்த்தேன். சில பொருள் விளங்கியது. சிலது நம் அறிவினுக்கு எட்டவில்லை. இந்த வாரமும் நாம் கவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்றினைப் பார்ப்போம். இரட்டைப்புலவர்கள், சவ்வாதுப்புலவர் போன்றவர்களின் பாடல்களையும் தேடி வருகின்றேன். அவ்வப்போது பகிர உத்தேசம். இந்த தொடர் குறித்து உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்.   நம் வீட்டு பிள்ளைகள் செய்யும் குறும்புகள் அதிகம். இந்த குறும்புகள் நம்மோடு போனால் பரவாயில்லை! அடுத்தவரை பாதித்தால் அவர்கள் ஏசுவார்கள். பிள்ளைகள் என்றால் குறும்புத்தனம் இருக்கத்தான் செய்யும். அவர்கள் குழந்தைகளும் குறும்பு செய்யத்தான் செய்யும். ஆனால் காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு! அவர்கள் பிள்ளைகள் எப்போதும் நல்லவர்களாகவே எல்லா பெற்றோர்களுக்கும் இருப்பார்கள். ஆனால் அடுத்தவன் பிள்ளை தவறு செய்துவிட்டாலோ அவ்வளவுதான் பிரித்து மேய்ந்து விடுவார்கள். பிள்ளையா பெத்து வைச்சிருக்கா? சரியான கோட்டானை பெத்து வெச்சிருக்கா?  என்று ஏசுவா

ஃபிளாஷ்பேக் தீபாவளி!

Image
ஃபிளாஷ்பேக் தீபாவளி!  கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் தீபாவளிக்கு தங்களுடைய பழைய தீபாவளி அனுபவங்களை எழுதி முடித்துவிட்டார்கள். நானும் வேறு எதையாவது எழுதலாம் என்று யோசித்தால் மூளை மக்கர் செய்கிறது. புதிதாக கதை, கவிதை ஏதும் தோன்றவில்லை. இரண்டுமாதமாகவே பதிவுகளும் சரியாக எழுதி வெளியிடவில்லை. இதற்குள் பரமு சிவசாமி போன்றவர்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்கள் கமெண்ட் போட்டால் பதில் சொல்ல மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டு மிரட்டுகிறார்கள்.    அதெல்லாம் போகட்டும். தீபாவளி சமாச்சாரத்துக்கு வருவோம். என்னுடைய பால்ய வயது தீபாவளிகள் என் அம்மாவின் அப்பா (தாத்தா) வீட்டில்தான் கழிந்தது. அது ஒரு குக்கிராமம். பழவேற்காடு கடற்கரைக்கு அருகில் அமைந்த ஊர். ஆசானபூதூர் என்ற அந்த ஊரிலே மொத்தமே முப்பது வீடுகள்தாம். பயந்த சுபாவம் உள்ள எனக்கு பட்டாசு அப்போது முதலே அலர்ஜிதான். விடிகாலையில் எழுப்பி பாட்டி, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள். பின்னர் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்துவோம். எனதுமாமா இரண்டுமூன்றுநாட்கள் முன்னரேசில பட்டாசுகளை வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி வைத்திருப்பார். அவரின் வழிகாட்டுதலோடு வ

பொய் முகம்! சிறுகதை

Image
பொய் முகம்!  சிறுகதை   விடிந்தால் தீபாவளி தெருவெங்கும் பட்டாசு சத்தங்கள் ஒரே ஆர்பாட்டங்கள் வளைகுடா போர் சத்தங்கள் போல பட்டாசுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. நானும் என் வீரத்தை காட்ட பட்டாசு கட்டுக்களோடு வெளியே வந்ததும் எதிர் வீட்டு வாசலில் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த அபிநயா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.   அபிநயா! இன்றைய சினிமா நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அழகில் இருந்தாள் நல்ல வேளை இன்னும் எந்த டைரக்டரும் அவளைப் பார்க்க வில்லை பார்த்திருந்தால் தமிழக ரசிகர்கள் அவளுக்கு இந்நேரம் கோயில் கட்டியிருப்பார்கள். புத்தம் புது ஆஷிகா சாரியில் தனது உடலின் அழகான பிரதேசங்களை மறைத்திருந்தாள் அபிநயா இருந்தும் அவை கண்ணாமூச்சி காட்டின. அந்த அரையிருட்டிலும் அவள் முகம் முழுநிலவாய் பிரகாசித்தது.அவளைக் கண்டதும் என் உற்சாகம் கரை புரண்டது. அவள் என் வருங்கால மணைவியாகப் போகிறவள். என் வர்ணணையில் மயங்கி அவளுக்கு அப்ளிகேஷன் போட நினைத்தவர்கள் என்னை திட்டாதீர்கள்.    அவள் எங்கள் எதிர் வீட்டில் இருப்பதால் எங்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வீட்டிற்கும் தெரிந்து விட்டது

தளிர் லிமரிக் கவிதைகள்!

Image
தளிர் லிமரிக் கவிதைகள்! அம்மா போனாங்க ஜெயிலு! ஆண்டவனுக்கு தொண்டனுங்க அடிச்சாங்க மெயிலு! அட்ராசக்கை கிடைச்சது பெயிலு! சாலையில் ஓடுது ஆறு! ஏரிகுளங்களில் இல்லையே நீரு! சட்டத்தை மீறியதால் இந்த ஊறு! ஹூத் ஹூத் புயலு! உடைச்சு போட்டுது ஆந்திரா! இயற்கைக்கு என்னா தில்லு! கடையில தொங்குது குட்கா! கவர்ந்து உன்னை இழுக்குது சோக்கா! காலி பண்ணுமே மக்கா! சீராய் சிந்தும் நீர்த்துளிகள்! தாகம் தீராத பூமி! அணிவகுத்த கான்கிரிட் சாலைகள்! மழையில் ஒலித்தது பாட்டு! தவளையாரு இசைக்கிறாரு கீதம்! மயங்கலை யாரும் கேட்டு! மாற்றி மாற்றி சுரண்டினார்கள்! மாறவே இல்லை தலையெழுத்து! மாற்றத்தை இன்னும் விரும்பினார்கள்! இறங்கிவந்தது மேகம்! இடி இடித்து பெய்தது மழை! தீருமோ தமிழ்நாட்டின் தாகம்! பாறை சுமந்த கோவில்கள்! பாவம் நிறைய சுமக்கின்றன! பகல்கொள்ளையாக தரிசன கட்டணங்கள்! கடை வீதி நெறஞ்சாச்சு! உடை மணிகள் வாங்கித் தள்ள உடையாளின் மனம் நிறைஞ்சாச்சு! கடைக்கோடி நாடுகளும் அள்ளுது பதக்கம்! கோடிகோடி மக்களிருந்தும் குறைந்திடவில்லை நம் ஏ

யானையை இழுத்த எலி! தித்திக்கும் தமிழ்! பகுதி 1

Image
உருவத்தில் பெரியதும் கரியதும், வலிமை மிகுந்ததுமான யானையை எங்காவது எலி இழுத்து போகுமா? எலி இழுத்துக்கொண்டு போகிறது என்கிறார் புலவர். எலி எதையெல்லாம் இழுத்துச் செல்லும். வீட்டில் ஏதாவது பழங்கள் தேங்காய், இல்லை மசால்வடை, பூரி  போன்ற ஏதாவது தின்பண்டங்கள் இருந்தால் எடுத்துச் செல்லும். அதுவும் இல்லாவிடில் ஏதாவது ரப்பர் சாதனங்கள் இருந்தால் அதன் வாசனை எலிக்கு மிகவும் பிடிக்கும். மோப்பம் பிடித்து இழுத்துச்செல்லும். அது உங்கள் குழந்தை விளையாடும் பார்பி பொம்மையாக கூட இருக்கலாம். அல்லது உங்கள் செருப்பாகவும் இருக்கலாம்.     இதையெல்லாம் இழுத்துச் சென்றால் எலிக்கு உபயோகம் இருக்கிறது. தின்பண்டமோ, பழமோ என்றால் அதற்கு உணவாகின்றது. ரப்பர் பொருளோ செருப்போ அல்லது ஏதாவது புத்தகமோ எனில் அதை வைத்து எலி ஒன்றும் சாதிக்க போவது இல்லை. உங்களின் கம்பராமாயண புத்தகத்தையோ, கல்கியின் பொன்னியின் செல்வனையோ அது படித்து ஒன்றும் பெரிதாக சாதிக்க போவதில்லை. அதேபோல ரப்பர் செருப்பை அதனால் போட்டுக்கொண்டு உலாவரவோ அல்லது பொம்மையை வைத்து விளையாடவோ எலிக்கு ஒன்றும் தெரியாது.     ஆனால் வீட்டில் உள்ள புத்தகம், மரச்சாமான்