தளிர் லிமரிக் கவிதைகள்! பகுதி 2

தளிர் லிமரிக் கவிதைகள்!

 லிமரைக்கூ 
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாகவேடிக்கைவினோதம்நகைச்சுவை முதலியஉணர்வோடு இயங்கக் கூடியது.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன்லிமரைக்கூவைப் படைத்துள்ளார்தமிழில்முதன்முதலாக ‘லிமரைக்கூவைப் படைத்த ஈரோடுதமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் /உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத்தொடையை 1 (முதல்மற்றும் 3 (இறுதிஅடிகளில்இணைத்துஜப்பானிய ‘ஹைக்கூவின் வடிவத்தையும்இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதியதமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார்.இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்துவிட்டது.


நிதியமைச்சர் போட்டாரு பட்ஜெட்டு!
புதுமை இல்லா விட்ஜெட்டு!
ஆளுங்கட்சி போட்டார்கள் கைதட்டு!

சர்தார் வல்லபாய் பட்டேலு!
இரும்பில் வடிக்கிறார்கள் சிலை!
இருநூறுகோடி விலை!

பெட்டி பெட்டியாய் எழுந்தது
பெய்தமழையில் விழுந்தது
பெட்டியில் முடங்கிப் போனது!

கண்ணாமூச்சி ஆடுது மத்திய அரசு!
கரைந்துபோகுது மீனவர் உசுரு!
விரைந்து கிடக்குமா நல்ல தீர்வு!

 ஏறிப்போச்சு விலைவாசி!
 ஏழைக்கு என்றுமே
 வயிறு  கால்வாசி!

 பசிக்குக் கிட்டாச் சோறு!
 பருவத்தில் எட்டாக் கல்வி!
 புவிக்கு விளைத்திடும் என்றும் ஊறு!


 உதைத்து ஆடினார்கள் கால்பந்து!
 உடைந்து போனது முதுகு!
 சிதைந்து போனது உலகப்பந்து!

 தினம் தினம் இருட்டு!
 பல்கியது திருட்டு!
 தீர வேண்டும் மின்வெட்டு!

 வரவே இல்லை மழை!
 வறண்டது பூமி!
 மரங்களை வெட்டியதால் பிழை!

  கை மாறியது கமிஷன்!
  கட்டிடத்தில் புதைந்தன உயிர்கள்!
  கண்ணைத் துடைக்க விசாரணை கமிஷன்!

  அட்சய திரிதியை!
  அலை மோதுது விற்பனை!
  காலியாகுது பணப்பை!

  விளை நிலங்களை போட்டார்கள் கூறு!
  விலை உயர்ந்தன எல்லாமே!
  வீங்கிப் போனது இந்தியப் பொருளாறு!

  வாசலில் அமைப்பது திண்ணை!
  வளர்ந்துநிக்குது பண்ணைவீட்டு தென்னை!
  வழிபட வேண்டும் பெண்ணை!

  வீதிக்கு வீதி சாக்கடை!
  வீசுது எங்கும் நாற்றம்!
  பூமியை ஆளுது மதுக்கடை!


  கள்ளை உண்டால் மயக்கம்!
  கலங்கரையை மறைக்கும் பழக்கம்!
  கைவிட்டால் கிடைக்கும் வணக்கம்!

   பையில் இருக்கணும் சில்லறை!
   பசங்க பண்ணுவாங்க அலப்பறை!
   படிப்பில் இருக்கணும் அக்கறை!

   குளம் குட்டையெல்லாம் வீடாச்சு!
   நிலம் நீச்செல்லாம் ப்ளாட்டு!
   நீராதாரத்திற்கு வேட்டு வெச்சாச்சு!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தொடர்புடைய இடுகை:

Comments

  1. "//ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். //" - என்னன்னமோ சொல்றீங்க சுரேஷ்.

    ஒவ்வொன்றும் அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  2. அனைத்து கவிகளும் சிந்திக்க தக்கதாய் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல உவமையான வார்த்தைகள் அருமையான பதிவு. நன்றி சுரேஸ்.

    ReplyDelete
  4. நாட்டு நடப்பையே கவிதையில் தந்த விதம் அருமை !

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் கவிதைகள்
    அருமை நண்பரே

    ReplyDelete
  6. கருத்துள்ள உண்மை வரிகள்...

    ReplyDelete
  7. சிந்திக்க வைத்த கவிதைகள்..... பாரட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  8. ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதைகள்...

    ReplyDelete
  9. "குளம் குட்டையெல்லாம் வீடாச்சு!
    நிலம் நீச்செல்லாம் ப்ளாட்டு!
    நீராதாரத்திற்கு வேட்டு வெச்சாச்சு!" என்ற
    கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
    இவ்வாறே உலகம் நகருகிறது

    ReplyDelete
  10. T.R.ஸ்டைல நாட்டுநடப்பை கிழித்து தொங்கவிட்டுடிடீர்கள்!!

    ReplyDelete
  11. சகோதரி கை கொடுங்கள்!...நாங்கள் வாசித்ததும்,...அட நம்ம T.R. ஸ்டைலு! என்று சொல்லி கமென்ட் போட வந்தால்....நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க!..ஹாஹஹா.....

    ReplyDelete
  12. சுரேஷ் சூப்பர் போங்க! நாங்களும் மதிலி சகோதரி சொன்னது போல வாசித்ததும் நம்ம டி,ஆர் ஸடைலு அப்படின்னுதான் சொல்லி கமென்ட் போட வந்தா நம்ம சகோதரி முந்திக்கிட்டாங்க....ஹாஹாஅஹா....சேம் தாட்......பின்னி எடுத்துட்டீங்க!!!! கவிதைல ரொம்ப அசத்தறீங்க....ஏன் ஒரு புத்தகம் வெளியிடக் கூடாது சுரேஷ்! ஆன்லைன்லயே போடலாமே...முயற்சி செய்யுங்கள்!

    இதே போன்று 85, 90 களில் நாங்கள் நிறைய எழுதி வைத்திருந்தோம். அப்போது இது லெமெரிக் கவிதைகள் என்ற பெயர் தெரியாது....ஆனால் புதுக் கவிதை வடிவம் என்று ஹைக்கூ ஸ்டைல் இந்த ஸ்டைல் எல்லாம் எழுதினோம்....பரண் மேல் இருக்கும்....பொடியாமல் இருந்தால்.....எடுத்து தூசி தட்டிப் பார்க்க வேண்டும்....பார்ப்போம்...முடிகின்றதா என்று.....

    நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி சார்! புத்தகம் வெளியிடும் ஆசை இருக்கிறது. கடவுள் அருள் இருப்பின் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது! நன்றி!

      Delete
  13. மிக நல்ல முயற்சி. எல்லாமே ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  14. ரசனையான கவிதைகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!