கட்ஜுவின் குற்றச்சாட்டும்! சொஜ்ஜி கேக்கும்! கதம்ப சோறு! பகுதி 45

கதம்ப சோறு பகுதி 45

கட்ஜூ கிளப்பிய பிரச்சனை!


பிரஸ் கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கிளப்பிய விவகாரம் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் இரண்டு நாட்களாக புயலைக் கிளப்பி வருகிறது. 2004ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக  அவர் இருந்தபோது பல ஊழல் புகார்களில் சிக்கிய ஒரு நீதிபதியின் பதவி உயர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த பிரதான அரசியல் கட்சி அன்றைய மத்திய அரசிடம் பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய நீதிபதி மீது உளவுத்துறை அளித்த அறிக்கைப்படி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெ. நீதித்துறை விவகாரங்களில் தலையிட்டதே இல்லை என்றும் கூறியுள்ளார். ஒரு முன்னாள் நீதிபதி தன்னுடைய நீதித்துறை குறித்தே இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சியான திமுக வை குறிவைத்து இந்த குற்றச்சாட்டு எழுந்தமையால் அந்த கட்சி உறுப்பினர்கள் ரகளை செய்தனர். கட்ஜுவின் புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன் கூறியதால் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. அவை கூடுவதே சில குறிப்பிட்ட நாட்கள்தான். அந்த தினங்களில் மக்களின் பிரச்சனை குறித்து விவாதித்து அதற்கு நல்ல தீர்வை காண்பதை விட்டு இப்படி உதவாத ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு அதில் குளிர்காய்ந்துகொண்டு மக்களை திசை திருப்பிவிடுகின்றன கட்சிகள். பத்து ஆண்டுகள் கழித்து இந்த மாதிரி ஒரு புகாரை கட்ஜு ஏன் கூறுகிறார் என்று கலைஞர் கேட்கிறார். உங்கள் மீது குற்றம் இல்லையெனில் நிருபியுங்கள்! அதைவிட்டு காலம் கடந்த புகார் என்று மழுப்பாதீர்கள் கலைஞரே! நாட்டில் ஜனநாயகத்தை பண நாயகமாக மாற்றியமைத்ததில் தங்களின் பங்கும் உண்டு என்பதை நாங்கள் அறிவோம்! வேறு வழி இல்லை என்று உங்கள் இரண்டுபேரையே திரும்ப திரும்ப சகித்துக் கொண்டு வாழ்கின்றோம்! அதை உணருங்கள் திராவிட கட்சிகளே!

பாலியல் வன்கொடுமைகள்!

   இதைப்பற்றி அடிக்கடி நம் தளத்தில் விவாதிக்க வேண்டிய நிலைமைக்கு ஆனது துர்பாக்கியமான ஒன்று. ஐந்து வயது பிஞ்சுக் குழந்தையை பாலியல் தொந்திரவு செய்துள்ளான் ஒரு போக்கிரி. அவனை ஆசிரியர் என்று நியமித்துள்ளது ஒரு பள்ளி. அந்த பள்ளி ஒன்றும் சாதாரண அரசுப் பள்ளி அல்ல! பல்வேறு மில்லியனர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கான்வெண்ட் பள்ளி. அந்த மோசக்கார பயிற்றுநர் ஏற்கனவே இந்த மாதிரி புகாரில் சிக்கி வெளிவந்தவன். அவனை எந்த அடிப்படையில் அந்த பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள் தெரியவில்லை. முன்பெல்லாம் காமம் என்பது எங்கோ ஒளிந்து கொண்டிருந்த ஒரு லிமிடெட் வஸ்துவாக இருந்தது. இன்று அது அன்லிமிடெட் உணவாக நம் கைகளிலேயே வந்து தவழ்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி! அந்நிய கலாசார மோகம்! பெற்றோர்களின் கவனிப்பின்மை! இணையங்களின் அசுர வளர்ச்சி இதெல்லாம் சேர்ந்து காமத்தை திணித்துக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் போன்களால் பத்து வயது சிறுவன் கூட அண்டிரெஸ் கேர்ள் கேம்ஸ் விளையாட முடிகிறது.  அன்று எங்கோ ஒளிந்து கொண்டிருந்த இந்த ஆபாசங்கள் இன்று வெளியே வந்து நடனமாடத் துவங்கியதின் விளைவுதான் இத்தனை மோசமான பாலியல் வன்கொடுமைகள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஆபாச இணையதளங்கள், ஆபாசபடங்கள், புத்தகங்கள், போன்றவை தடை செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அரபு நாடுகள் போன்று நடுத்தெருவில் கட்டி சுட்டு வீழ்த்த வேண்டும். அந்த மரண பயம் அளிக்கும் தண்டனைகள் வந்தால் கட்டுக்குள் வரும் இந்த மாதிரி கோர நிகழ்வுகள்.


மாணவர்களை தாக்கும் ஆந்திர ஆசிரியர்கள்:

   ஆந்திராவில் இப்போது ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதாக பெரும் போராட்டமே வெடித்து வருகிறது. இப்படி ஆசிரியர் அடித்ததில் ஒரு மாணவனின் கண்பார்வையே போய்விட்டதாம். பார்வையற்ற மாணவர்களை அடிக்கும் பார்வையற்ற ஆசிரியர்கள் குறித்த ஒர் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. பதிலுக்கு திரண்ட மக்கள் அந்த பார்வையற்ற ஆசிரியர்களை போட்டு தாக்கிவிட்டு அதையும் வீடியோ எடுத்து போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் பார்க்க கொடுமையாக இருக்கிறது. மாணவர்களை இப்படி ஆசிரியர்கள் அடிப்பதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று அரசு சொல்கிறது. தமிழகத்தில் அந்த மாதிரி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு இன்று ஆசிரியர்கள் கையில் பிரம்பை எடுப்பதே இல்லை! ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு மதிப்பே இல்லை! இந்த நிலைபோல் இல்லாமல் முள்ளில்மேல் போட்ட சேலைபோல இருதரப்பிற்கும் சேதம் வராமல் ஒரு திட்டம் அமைந்தால் தேவலை.

லார்ட்ஸ் வெற்றி!

   28 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் ஒன்றும் நமது பாரம்பரிய விளையாட்டு இல்லை என்றாலும் மக்களோடு ஒன்று கலந்துவிட்ட ஓர் விளையாட்டாகிவிட்டது. எங்கு இந்திய அணி விளையாடினாலும் அதை ரசிக்க ஓர் கூட்டம் உண்டு. உலக கோப்பை வெற்றிக்குப்பின் கடந்த மூன்று வருடங்களாக வெளிநாட்டில் அடிமேல் அடிவாங்கிய இந்திய அணி இந்த முறை இங்கிலாந்து தொடரில் புது முகங்களோடு களம் இறங்கியது. முதல் டெஸ்டில் கோட்டை விட்டாலும் தோல்வியைத் தவிர்த்துவிட்டது. இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இஷாந்த் சர்மா போட்ட பவுன்சர்கள் இங்கிலாந்தை திணறச்செய்து தோல்விக்கு அழைத்துச்சென்றுவிட்டது. புதிய முகங்கள் மீது ஓர் நம்பிக்கை ஒளி தென்பட ஆரம்பித்துள்ளது. புவனேஷ் குமாரும் சிறப்பாக பந்து வீசுவதுடன் மட்டைவீச்சிலும் கலக்குகிறார். கோலியின் ஆட்டம் மட்டுமே கடுப்பு ஏற்றுகிறது. தவானும் சொதப்புகிறார். கம்பீருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். எப்படியோ வென்று காட்டிய  இந்திய அணிக்குப் பாராட்டுக்கள்!

புக்‌ஷெல்ப்!


 தலைவா வா!
 ஆசிரியர் : சுரேகா
 பக்கங்கள் 120 விலை ரூ 90
 வெளியீடு: மதி நிலையம், 2/3, 4வது தெரு
  கோபாலபுரம், சென்னை 86

திங்கள் அன்று மாலை பொழுது போகாமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போது கண்ணில் பட்டது இந்த புத்தகம். புத்தகச் சந்தையில் வாங்கியது. படிக்காமல் வைத்திருந்தேன். பொதுவாகவே சுய முன்னேற்ற நூல்கள், சாமியார்கள் எழுதும் நூல்கள் ஆகியவற்றை அவ்வளவாக படிக்க மாட்டேன். பதிவர் சந்திப்பின் போது இந்த நூலைப் பற்றி ஆகா! ஒகோ! என்று புகழ்ந்து பேசினர். அப்போது வாங்க நினைத்தது. புத்தகச் சந்தையில் வாங்கினேன். ஆனாலும் உடனே படிக்கத் தோன்றவில்லை! படிக்க ஆரம்பித்தவுடன் தான் இத்தனை நாள் இதை படிக்காமல் இருந்துவிட்டோமே என்று வருத்தம் தோன்றியது. குறைவான பக்கங்கள்தான் என்பதால் ஒரு இரண்டுமணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். சுய முன்னேற்ற நூலாக இருந்தாலும் கதை வடிவில் அளித்திருப்பது ஆசிரியரின் புதுமையான பாணி. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவனான விக்னேஷ், தொழிலில் ஏற்படும் சரிவு, அதை எப்படி நிவர்த்தி செய்து பெரிய பதவியை அடைகிறான் என்பதன் ஊடே வாழ்க்கையில் நாம் முன்னேறத் தேவையான வழிமுறைகளை பத்து அத்தியாயத்தில் கற்றுத் தருகிறார். கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை என்பது இந்த நூலின் சிறப்பு. முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஓர் நூல்.
நூலின் வடிவமைப்பும் பைண்டிங்கும் மிகச்சிறப்பு என்பது கூடுதல் மகிழ்ச்சி.

கிச்சன் கார்னர்:


சொஜ்ஜி கேக்
தேவையான பொருள்கள்: ரவை 200 கிராம், நெய், 200 கிராம், ஏலக்காய் 5 சர்க்கரை ¾ கிலோ பால் 1.1/2 லி

செய்முறை: ரவையை பொன்னிறமாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் விட்டு கொதித்ததும் பால் மற்றும் சர்க்கரையைப் போட்டு கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த ரவை மாவை கொட்டிக் கிளறவும். ரவை வெந்ததும் நெய், ஏலக்காய் சேர்த்து பாகு பதத்தில் கிளறி இறக்கவும். தட்டில் நெய் தடவி அதில் பரப்பி ஆறவிடவும். பிறகு கேக் வடிவில் கட் செய்யவும். அனைவருக்கும் பறிமாறவும்.


டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


  கறிவேப்பிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகப்பருவும் அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

ரொட்டியில் பஜ்ஜி செய்யும்போது ரொட்டியின் இருபகுதிகளிலும் தயிரை பூசிவிட்டு பின் மாவில் முக்கி எண்ணெயில் போட்டு எடுத்தால் பஜ்ஜி அதிக எண்ணெய் குடிக்காது.

சட்டைகளில் பட்டன் தைக்கும் போது தைப்பதற்கு முன் நகபாலிஷை பட்டன் தைக்கும் இடத்தில் தடவி அதன் மீது பட்டனை வைத்து அழுத்தி பிறகு தைத்தால் பட்டன் சீக்கிரம் பிய்ந்து போகாது.

வீட்டின் நான்கு மூலைகளிலும் வேப்பிலைக் கிளைகளை பறித்து போட்டு வைத்தால் எலியோ பெருச்சாளியோ வரவே வராது.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலிக்கு மாங்கொட்டையை சுட்டு அதனுள் இருக்கும் பருப்பை சாப்பிட்டால் வலி நின்று போகும்.

ஒட்டடை  சுத்தமாக அடிக்க நீண்ட குச்சியின் நுனியில் ஈரத்துணியை சுற்றி எடுத்தால் ஒட்டடை அதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும்.

இவர்களை தெரிந்து கொள்வோம்!

மருத்துவ மனையில் சேவை செய்யும் இந்த மதுரை இளைஞர்களை அறிந்து கொள்வோம் இங்கு  மதுரை இளைஞர்களின் மனம் நிறைந்த தொண்டு

படிச்சதில் பிடிச்சது!

  வயசான பெரியவர் ஒருத்தர் மருத்துவமனைக்குச் சென்றார். அவர் மணி பார்ப்பதும் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்ப்பதுமாக இருந்தாரு. நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்துட்டு உள்ளே போனாரு. “என்ன பெரியவரெ! ஏதாவது அவசர வேலை இருக்கா? அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க?ன்னாரு டாக்டர்.
  “ஆமாம் டாக்டர்! என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு கொடுக்கணும்!”னாரு பெரியவர்.
   “ ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா?”ன்னு கேட்டாரு டாக்டர்.
    “ ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு ஞாபகமறதி வந்துவிட்டது. என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார்னு தெரிவதில்லை”
    “ கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே நீங்க உணவு கொடுக்கும் வேலை தொடருதா?”ன்னாரு டாக்டர்.
  “ ஆமா டாக்டர்! ஞாபக மறதி நோய் அவளுக்குத்தானே? “என்னை யார்னு அவளுக்கு தெரியாட்டியும் அவள் யார்னு எனக்கு நன்றாகத் தெரியும் அதனால கடைசிவரைக்கும் இந்த பணி தொடரும்”
   இதைக் கேட்ட டாக்டரின் கண்கள் கலங்கின.
இதுதான் உண்மையான பாசம்! “காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை”
(பாக்யா பதில்களில் படிச்சது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதம்ப சோறு நல்ல தகவல்கள்...கடைசியில் அந்த பெரியவர் மனச நெகிழ வைத்து விட்டார் !

    ReplyDelete
  2. சமூக அவலங்களை விளக்கியது அருமை. நண்பரே....

    ReplyDelete
  3. அஜ்மல் ஹுசைன், பிரசன்னாவின் சேவை போற்றத்தக்கது !
    கதம்பச் சோறை அள்ளி அள்ளி உண்டேன் நல்ல ருசி !

    ReplyDelete
  4. அஜ்மல் ஹுசைன், பிரசன்னாவின் சேவை போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  5. கலவையான தகவல்களோடு கதம்ப சோறு நன்றாக இருக்கிறது.
    வழக்கம் போல் டிப்ஸ் அருமை.

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை... மதுரை இளைஞர் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    டிப்ஸ்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

    வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    ReplyDelete
  8. அனைத்துமே அருமை சுரேஷ்! படித்ததில் ரசித்ததௌ அந்த பாகியா பதில் அருமை....காதல் என்றுமே அழியாது உண்மையாக இருந்தால்! அந்த இளைஞர்களின் சேவை அற்புதமானது!

    ReplyDelete
  9. சமூக அவலத்தை சாடியது முதல் சமையல் வரை அனைத்தும் அருமை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!