பவுர்ணமியில் ஓர் அமாவாசை!

உலகின் அழகிய கடற்கறைகளுள் ஒன்றான மெரினாவில் சுண்டல்காரன் ஒருவனின் ‘தொணதொணப்பை’ பொருக்க மாட்டாமல் வாங்கிய சுண்டல் பொட்டலத்துடன் மணலில் அமர்ந்திருந்த என்னை அந்த குரல் கலைத்தது.

    “ஹாய் சத்யா எப்படி இருக்கே?”

பரிச்சயமான குரலைக்கேட்டு நிமிர்ந்த நான் “ஹலோ,நீ... நீங்க நிலா தானே? நீங்க எப்படி இங்கே?”

“சாட்சாத் நிலாவேதான்! சத்யா சவுக்கியமா?”

“நிலா நீ கல்யாணமாகி மும்பையில இல்ல இருந்தே இப்ப மாற்றல் ஆகி வந்திருக்கியா? இல்ல வெகெஷனா?”

“அதெல்லாம் பழயகதை சத்யா நான் இப்ப மெட்ராஸ்லதான் இருக்கேன் ஆறுமாசமாச்சு சென்னை வந்து” 

 “ஹஸ்பெண்ட் சவுக்கியமா?”

“அவர் போயி பத்து மாசமாச்சு” 

“என்ன சொல்றீங்க?”

“எஸ் சத்யா, என் புருஷன் இறந்து பத்து மாசமாகுது!”

 “ஆனா நீங்க?..”  

“பூவும் பொட்டுமா உன்கிட்ட பேசிட்டிருக்கேன் சந்தோஷமா!..”

“சந்தோஷமாகவா?..” அதிர்ந்தேன்.

 “எஸ்... பூவும் பொட்டும் எடுத்துட்டு வெள்ளை புடவையோட இருக்கிறதல்லாம் அந்தக்காலம் சத்யா! எல்லோரும் ஒருநாள் இறக்க போறோம் இன்னிக்கு அவர்னா நாளைக்கு நான்! இருக்கும் வரைக்கும் வாழ்க்கையை சந்தோஷமா வாழப் பழகனும் சத்யா” 

 நிலாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை.வியந்துபோனேன். 

ஆனாலும் இந்த சின்ன வயசுல உனக்கு இப்படி ஆகியிருக்க கூடாது நிலா” 

“எப்படி ஆச்சு?” 


“மாசிவ் அட்டாக் மடியில படுத்துண்டே போயிட்டார்”.

“வாட் எ பிட்டி ஐயம் ஸாரி நிலா!” 

 “இட்ஸ் ஓகே இதெல்லாம் வாழ்க்கையின் நிஜங்கள்.”

 “இப்ப எங்க இருக்கே நிலா?”

       “இப்ப நான் தனியாத்தான் இருக்கேன் அம்மா அப்பா எற்கனவே இல்ல இருந்த ஒரே அண்ணனும் அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்.அவர்போனப்புறம் நான் மெட்ராஸ் வந்துட்டேன் நாலு மாசமா தி.நகர்லதான் இருக்கேன்.பக்கத்துல ஒரு கான்வெண்ட்ல டீச்சரா ஒர்க் பண்றேன் பொழுது போகனும்ல”

     “ சரி என் சோக கதையையே கேட்டுண்டிருந்தா? உன் லைஃப்  எப்படி போகுது கல்யாணம் ஆயிடுச்சா? எத்தன பசங்க?”

   “ம்ம்.. ஆயிடுச்சு ஒரு பையன் இருக்கான்” 
“அப்ப குடும்பஸ்தனா மாறிட்ட எனக்கு பத்திரிக்கை கூட அனுப்பல நான் என்ன பாவியா?” 
“சேச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல ஒன்னோட அட்ரஸ் கிடைக்கல”

   “சரி நேரமாவுதுஇந்தா என் அட்ரஸ் ஒருநாள் ஒய்ஃபையும் பையனையும் கூட்டிட்டுவா பை!”

 கடற்கரை இருட்டத்தொடங்கிவிட்டது.நான்பழைய நினைவுகளை அசைபோடத்துவங்கினேன். நானும் நிலாவும் ஓரே காலேஜ்.என்னுடய நெருக்கமான தோழியாக நிலா விளங்கினாள். எனக்கு கடல் கடற்கரை மிகவும் பிடிக்கும். எத்தனயோ நாட்கள் நாங்களிருவரும் பீச்சிற்கு வந்திருக்கிறோம். கல்லூரி வட்டாரமே எங்களைப் பற்றித்தான் பேசியது. காதலர்கள் என்று சொன்னது. எனக்கும் அந்த ஆசைஉண்டு ஆனால் அதை சொல்லத் தயங்கினேன். ஒருநாள் அவளிடம் என் விருப்பத்தை சொல்ல முனைந்தபோது அவள் தன் கல்யாண அழைப்பிதழை நீட்டினாள். அதனால் என் காதலை சொல்லாமல் விட்டுவிட்டேன்.

        திருமணத்திற்கு சென்று வாழ்த்தினேன் பம்பாய் மாப்பிள்ளை என்னைவிட வசதி படைத்தவன் நன்றாக இருக்கட்டுமென வாழ்த்தினேன் ஆனால் இன்று நிலாவை விதவைக்கோலத்தில் பார்க்க முடியவில்லை. என்னால் காலத்தின் வேகத்தை புரிந்து கொள்ள முடிய வில்லை.

      ஒரு ஞாயிற்றுக் கிழமை நிலாவின் வீட்டிற்குச் சென்றேன். மலர்ந்த முகமாய் ”ஒய்ஃப் வரலியா சத்யா? ”என்றாள். 
“இல்ல நிலா வீட்ல நீ மட்டும்தான் இருக்கியா? குழந்தை எதுவும்?”

அவள் கண்கள் கலங்கிவிட்டது.அந்த பாக்கியம் எனக்கில்ல சத்யா என்றாள்.  “சாரி நிலா!”

நிலா குழந்தைகளை நேசிப்பவள் எங்கே குழ்ந்தைகளை கண்டாலும் தூக்கி கொஞ்சி முத்தமிட்டு எதாவது வாங்கித் தருவாள். அவளுக்கு ஒரு குழந்தையை கடவுள் கொடுக்கவில்லை என்ன கல்மணம் இந்த கடவுளுக்கு?

       ஒருநாள் என் வீட்டிற்கு நிறைய விளையாட்டு பொருள்களுடன் வந்து என் பிள்ளையோடு விளையாடினாள்.

    அன்று இரவு என் மனைவியிடம் அவளைப்பற்றி சொன்னபோது பாவங்க என்றாள். எனக்கும் பாவாமாகத்தான் இருந்தது.

     நிலா அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். பையனுடன் விளையாடி என்னுடன் அரட்டையடித்து மனைவியிடம் சமையல் பழகி என்று அவள் வருகை சகஜமாகிப்போன போது என் மனதில் சலனம் ஏற்பட்டது. இவள் நமக்கு மனைவியாக இருக்க வேண்டியவள் என்ற எண்ணம் மேலோங்க தொடங்கியது. அந்த எண்ணத்தை துடைக்க அவளுடன் பழகுவதை தவிர்க்க முடிவு செய்தேன்.

      அன்று அவள் வீட்டிற்கு சென்றேன். 
“நிலா உன்கிட்ட தனியா பேசனும்” “நாம தனியாத் தானெ இருக்கோம்.” 
அ... அது. ‘சொல்லுங்க’ “இனிமே நீ என் வீட்டுக்கு வராதே நிலா” 
“ஏன் ஏன் வரக்கூடாது உங்க ஒய்ஃப் ஏதாவது..” 
“சேச்சே அவ எதும் சொல்லலே ஆனா.. “என்ன ஆனா ஆவன்னானு சும்மா சொல்லுங்க!” நம்ம காலேஜ் டேஸ்ல நம்மள பத்தி காலேஜ் என்ன சொல்லுச்சு
லவ்வர்ஸ்னு ஆனா அது ஒரு ஜோக்கில்லியா?

 “அது ஜோக்கில்ல நிலா நான் உன்னை விரும்பினேன் ஆனா அதுக்குள்ள உனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு.”

நிலாவின் முகத்தில் ஒரு சின்ன மாறுதல். நான் தொடர்ந்தேன்.
  “நிலா பழசு உன்ன இப்ப பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வருதுநிலா உன்ன நான் விரும்பறேன் உன்ன மறக்க முடியில எங்கே என் மனைவிக்கு துரோகம் செஞ்சுடுவோனோன்னு பயமா இருக்குது.நீ இனிமே எங்க வீட்டிற்கு வராதே.” முழுமூச்சில் சொல்லி முடிக்க நிலா கை தட்டினாள்.

    என்னை தீர்க்க்மாய் பார்த்து   “சபாஷ் சத்யா நீங்க என்ன இப்பவும் விரும்பறீங்களா? ஆனா நான் எப்பவும் உங்களை விரும்பினது இல்ல ஒரு தோழனாத்தான் பழகி வர்ரேன் இப்ப மட்டுமில்ல எப்பவுமே ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய ஒரு குழந்தைக்கு அப்பாவான நீங்க இப்ப, கூட படிச்ச ஒரு பெண்ண பாத்ததும் காதல் வசப்பட்டு  ஏதேதோ கற்பனய வளர்துகிட்டு... ஒரு பொண்ணு ஆண்கள் கிட்ட சிரிச்சு பழகினாலே காதல்தானா?”

 “எப்படி எப்படி மனைவிக்கு துரோகம் செஞ்சுடுவொம்னு பயமா இருக்கா இப்ப மட்டும் என்ன செய்யறீங்க கட்டின பொண்டாட்டி உயிரோட இருக்கறப்ப அடுத்தவள நினைக்கறதுக்கு பேர் என்ன? கட்டின கணவன் இறந்து போனாலும் அவர தவிர வேற யாரயும் நான் மனசுல நினைச்சதில்ல ஆனா நீங்க ? போங்க சார்போங்க  உங்க மனசுல இருக்க அழுக்கை பிளிச்சிங் பவுடர் போட்டு கழுவுங்க மனசில அழுக்க வச்சிகிட்டு வெளியில ஜெண்டில் மேனா நடந்துக்குற உங்க அறியாமையை முதல்ல வெளியேத்துங்க! ”என்றாள்.

       பவுர்ணமி நிலா உதயமாகி வர அந்த நிலவொளியில்அவள் முகம் பிரகாசிக்க என் முகம் மட்டும் அமாவாசையாக இருண்டு கிடந்தது.   (முற்றும்)

(மீள்பதிவு)

டிஸ்கி} இந்த சிறுகதை எனது கையெழுத்துப்பத்திரிக்கையில் எழுதியது. பின்னர் வலைப்பூ ஆரம்பித்ததும் முதலில் வெளியிட்ட சிறுகதைகளுள் ஒன்று. அப்போது இதை படித்தவர்கள் சிலரே!
    எங்கள் பகுதியில் ஞாயிறன்று இரவு ஏற்பட்ட சூறைக்காற்றுடன் கூடிய மழையால் தடைபட்ட மின்சாரம் இப்போதுதான் திரும்பியது. மாலையில் பிரதோஷ பூஜை இருப்பதால் இந்த சிறுகதையை மீள்பதிவாக வெளியிடுகிறேன். இறைவன் சித்தமிருந்தால் நாளைமுதல் பதிவுகள் தடையில்லாமல் வெளிவரும். 


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான கதை ... இபோதுதான் படித்தேன் .. மின்தடை வாழ்க

    ReplyDelete
  2. அழுக்குப் படியத் தொடங்கும் நேரத்தில் மனதைச் சுத்தம் செய்யும் கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மிக அருமையான கதை சுரேஷ்! ஒரு சின்ன கருத்து சொன்னால் தவறாக நினைக்க மாட்டீர்கள்தானே சுரேஷ்!

    ஒன்றுமில்லை உரையாடலைப் பிரித்து அடுத்தடுத்து கொடுத்திருந்தால் சின்ன குழப்பம் வந்திருக்காது அவ்வ்ளவுதான் னண்பரே! உதாரணத்திற்கு...
    //“அதெல்லாம் பழயகதை சத்யா நான் இப்ப மெட்ராஸ்லதான் இருக்கேன் ஆறுமாசமாச்சு சென்னை வந்து” “ஹஸ்பெண்ட் சவுக்கியமா?”//

    இதில் “ஹஸ்பெண்ட் சவுக்கியமா?”/ என்ற உரையாடல் சத்யா கேட்பது இல்லையா? அதை அடுத்து கொடுத்திருந்தால்......சத்யா என்பது பெண்ணின் பெயராகவும் எடுத்துக் கொள்ளலாம் ஆதலால் முதலில் அது பெண் தோழி என்ற ஒரு அர்த்தமும் வருகின்றது!

    ஆனால் மிக நல்ல கதை! சுரேஷ்! பாராட்டுக்கள்! இன்னும் இது போன்று நிறைய எதிர்பார்க்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே சந்தேகம் முதலில் படிக்கும்போது ஏற்பட்டது. பிறகு மீண்டும் அதற்கு மேல உள்ள இரு வரிகளை படித்தபின் சந்தேகம் தீர்ந்தது.

      Delete
    2. இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை துளசிதரன் சார்!, தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்! அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும். இது ப்ளாக் எழுத ஆரம்பித்த புதிதில் எழுதிய கதை. இரண்டு நாளாய் மின்சாரம் இல்லை! பதிவு ஏதும் போடவில்லை! நேற்றும் மின்சாரம் வராது என்று நினைத்த நிலையில் திடீரென மின்சாரம் வந்தது. மாலையில் வேலை இருந்தமையால் பழைய கதையை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி பதிவிட்டு விட்டேன். அவசரத்தில் வெளியிட்டதால் பத்தி பிரிக்க வில்லை! உண்மையில் நீங்கள் சொன்ன குழப்பங்கள் எனக்கும் ஏற்பட்டது. உடனே திருத்தி உள்ளேன். இன்னும் திருத்தங்கள் இருப்பினும் தயங்காது கூறுங்கள்! சொக்கன் நீங்களும் குறை நிறைகளை தயங்காமல் தெரிவிக்கவும். வருத்தப்படமாட்டேன். திருந்த ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொள்வேன்.

      Delete
  4. அட.. போட வைத்தது கதை..

    ReplyDelete
  5. நல்ல கதை. நிலா, உண்மையில் நிலாவாக பிரகாசிக்கிறாள். வாழ்த்துக்கள் சுரேஷ்,

    ReplyDelete
  6. கணவன் இறந்துவிட்டாலே விதவை என்று பட்டம் கொடுத்து ஒதுக்கிவைக்கும் சமூகத்தில் அவன் நினைவை மனத்தில் சுமந்து உற்சாகமாய் வளையவரும் நிலா கேரக்டர் அற்புதம். தோழனாயிருந்தும் அவளுடைய நிலையைத் தனக்கு சாதகமாக்கிக்கொள்ளத் துணியும் சத்யாவைப் போன்ற ஆண்களுக்கு நல்ல பாடம். நல்லதொரு கதை. பாராட்டுகள் சுரேஷ். நண்பர்கள் குறிப்பிடுவது போல் பத்திகள் பிரித்து சரியான மேற்கோள்களுடன் பதிவிடப்பட்டிருந்தால் கதையோட்டத்தில் தடங்கல்கள் நேராது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! இப்போது பத்திகள் பிரித்துவிட்டேன்! தொடர்ந்து வந்து ஊக்கமளிக்கும் கருத்துக்கள் தெரிவிப்பதற்கு நன்றி!

      Delete
  7. நண்பா..மனதில் உள்ளதை ரொம்ப தாமதமாக சொல்லியது தான் அவன் குறை.. கதை நல்லா இருந்தது.. தொடர்ந்து பதிவுகள் வரட்டும்..

    ReplyDelete
  8. நல்ல கதை.

    தனக்கும் திருமணம் ஆகி குழந்தையுடன் இருக்கும் போது காதலைச் சொல்வது பிழை தான்! அதான் நன்றாக கேட்டுவிட்டாரே நிலா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!