Posts

Showing posts from June, 2014

தளிர் சென்ரியு கவிதைகள்! 4

Image
சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’.  சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும். ‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள். தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழ

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 62

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 62 அன்பான வாசக பெருமக்களே! வணக்கம்! சென்ற பகுதியில் சாரியைகள் குறித்து படித்தோம். இந்த வாரம் நாம் படிக்க கற்க இருப்பது இலக்கணத்தில் முதல் பகுதியான எழுத்திலக்கணத்தின் முதலெழுத்தும் சுட்டெழுத்தும் ஆகும்.   முதல் எழுத்துக்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம். மொழியில் பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ள எழுத்துக்கள் முதலெழுத்துக்கள் எனப்படும்.    தமிழில் முதல் எழுத்துக்கள் இருவகைப்படும். அவை உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள். உயிரெழுத்துக்கள், அ,ஆ,இ,ஈ,உ,ஊ, எ, ஏ,ஐ, ஒ, ஓ, ஔ என்பனவாகும். மெய்யெழுத்துக்கள், க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்பனவாகும். உயிரெழுத்துக்களில் அ,இ,உ,எ,ஒ என்பன குறுகிய ஓசைதரும் குறில் எழுத்துக்கள் ஆகும்.    ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நீண்ட ஓசை தரும் நெடில் எழுத்துக்களாகும்.    இனி பார்க்கப்போவது சுட்டெழுத்து என்பதாகும். இதை பலர் வாக்கியமாக படித்தும் கேட்டும் இருந்தாலும் இன்னதென அறிந்திருக்க மாட்டீர்கள

ராஜா மோதிரம்! பாப்பா மலர்!

Image
ராஜா மோதிரம்! அவந்தி புரத்து ராஜா அனந்த வர்மா ஒரு நாள் ஆத்துல மந்திரிகளோட சேர்ந்து குளிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு விரல்ல இருந்த ராஜாவோட முத்திரை மோதிரம் நழுவி ஆத்துக்குள்ள விழுந்துருச்சு.       குளிச்சு கரையேறுன பின்னாடிதான் தெரிஞ்சது ராஜாவுக்கு தன்னோட முத்திரை மோதிரம் காணாம போன விஷயம். ஆத்துக்குள்ளதான் விழுந்திருக்கும்னு சொல்லி சேவகர்களை ஆத்துல மூழ்கித் தேடச்சொன்னாரு.     அவங்களும் ஆத்துல மூழ்கி பல மணி நேரம் தேடிப்பார்த்தும் மோதிரம்கிடைக்கவே இல்லை. ராஜா உங்க மோதிரம் கிடைக்கவே இல்லை! மணலுக்குள்ள எங்காவது சிக்கிக்கினு இருக்கலாம். அதனால வேற மோதிரம் செஞ்சுக்கங்கன்னு சொல்லிட்டாரு மந்திரி.     ராஜாவுக்கு அந்த மோதிரம்னா உசுரு! ராசியான மோதிரமாச்சே! இப்படி காணாம போயிருச்சே! இனிமே என்ன நடக்குமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சாரு. அந்த கவலையிலேயே அரசவைக்கு கூட போகாம அப்படியே படுத்த படுக்கை ஆயிட்டாரு ராஜா.     மந்திரிமாருங்க எவ்வளவோ சொல்லியும் ராஜா கேட்கலை! ராஜா இளைச்ச விசயம் எதிரி நாட்டுக்கு தெரிஞ்சது. இதுதான் சமயம். இப்ப அவந்திபுரம் மீது படையெடுத்து வந்தா ஈசியா ஜெயிச்சுப்புடலாம்ன

மனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்!

Image
   மனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்! மனக் கஷ்டம் இல்லாத மனிதர்கள் இல்லை! மனக் கவலைக்கு மருந்து இல்லை என்ற பழமொழியும் உண்டு. ஆனால் பக்தர்களின் மனக்கஷ்டங்களை அவர்களது மனதினுள் நுழைந்து ஆறுதலும் தீர்வும் தருகிறார் மாசிலாமணீஸ்வரர். சென்னை ஆவடி அருகே அமைந்துள்ளது வட திருமுல்லைவாயில் எனப்படும் திருமுல்லைவாயில். சென்னையில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள சிறப்பான தலம்.  சென்னையில் மூன்று அம்மன்களை ஒரேநாளில் அதாவது பவுர்ணமி அன்று தரிசனம் செய்தால் நன்மை என்றொரு நம்பிக்கை உள்ளது.இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற முப்பெரும் சக்திகளாக திகழும் அம்பிகைகள் அதில் முதலாவது அம்பிகை வடிவுடை நாயகி, திருவொற்றியூர் ஞானத்தை வழங்குபவள். அடுத்து  மணலி அருகே மேலூரில் உள்ள திருவுடைநாயகி,இச்சா சக்தியை அதாவது விரும்பியதை தருபவள். அடுத்த அம்பிகை இந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருக்கும் கொடியிடை நாயகி. கிரியா சக்தி வடிவானவள். நம்முடைய செயல்களுக்கு துணை நிற்பவள். செயல்களை திருத்துபவள். தல வரலாறு: பல  ஆண்டுகளுக்கு முன்னர் வனாந்திரமாக இருந்த இந்த பகுதியில் வாணன், ஓணன் என்ற அ

தொடரும் மின்வெட்டும்! மோடியின் அதிர்வேட்டும்! கதம்ப சோறு பகுதி 41

Image
கதம்ப சோறு! பகுதி 41 மீண்டும் ராகிங் கொடுமைகள்!    மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு ராகிங் கொடுமையால் உயிரிழந்த பிறகு சட்டங்கள் கடுமையாக்கப் பட்டு கல்லூரிக்குள் ராகிங் கொடுமைக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் அங்கங்கே அவ்வப்போது ஒன்றிரண்டு ராகிங் கொடுமைகள் நடந்து அது வெளியே வராமலும் சென்று கொண்டிருந்தது. இதோ இன்று மீண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு காரணம் மூன்றாம் ஆண்டு மாணவி கோட்டீஸ்வரி என்று தன்னுடைய டைரியிலும் எழுதி வைத்துள்ளார். யோக லட்சுமி என்ற அந்த மாணவி மிகவும் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து மருத்துவம் பயில வந்து அந்த குடும்பத்தின் கனவை கனவாகவே விட்டுச்சென்றுவிட்டார். விளையாட்டாக செய்யப்படும் செயல்கள் விபரீதமாகி இன்று ஒரு மாணவியின் உயிரையே பறித்து அந்த குடும்பத்தின் கனவைக் கலைத்துவிட்டது. யோகலட்சுமியை பாத்ரூம் கூட செல்லவிடாமல் கொடுமை செய்துள்ளனர் சீனியர் மாணவிகள். பாலியல் ரீதியாகவும் சித்ரவதை செய்துள்ளனர். சக மாணவியை இப்படி பெண்களே கேலி செய்து பலி வாங்கிவிட்டது கொடுமையான விஷயம். வ

“இரண்டு ரூபாய்!”

Image
 “ இரண்டு ரூபாய்!” நான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து ஏதோ பெட்டிக்கடைகள் முளைத்திருக்க வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர் என்னோடு இன்னும் சிலர்.    நான் பேருந்தில் பயணித்து ஏறக்குறைய நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தொலை தூரம் என்றால் பேருந்து பயணமே தவிர அருகில் உள்ள இடங்களுக்கு இருசக்கரவாகனத்தில்தான் பயணம். ஒருகாலத்தில் பேருந்திலேயே பயணித்தபோது பேருந்து கட்டணங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நடத்துனர் கேட்கும் முன்னரே சரியான சில்லரையைக்கொடுத்து டிக்கெட் வாங்குவேன். நடத்துனர்கள் எல்லோரும்  “நீங்கதான் சரியான சில்லரை கொடுத்து எங்க டென்சனை குறைக்கறீங்க!” என்று பாராட்டுவர். இப்போது டூ வீலர் வாங்கிவிடவே பேருந்து பயணம் குறைந்து போனது. பஸ் கட்டணங்களும் மறந்து போனது.     இன்று திடீரென்று பஸ் பயணம் செல்ல வேண்டியதாகிவிட்டது. டூ வீலரை சர்வீஸ் விட்டுவிட்டு அருகில் உள்ள நகரில் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம். சர்வீஸ்

அரசுப் பள்ளி என்றால் கேவலமா? காசு கொடுத்து படிப்பதுதான் கவுரவமா?

Image
அரசுப் பள்ளி என்றால் கேவலமா? காசு கொடுத்து படிப்பதுதான் கவுரவமா? இரண்டு வாரங்கள் முன்னதாகவே இந்த கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். ஆனால் ஏனோ பல வேலை நெருக்கடிகளால் முடியவில்லை! இன்று தமிழ் இந்துவில் சமஸ் எழுதிய ஒரு கட்டுரையை படித்ததும் இந்த கட்டுரையை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். சமஸ் எழுதிய கட்டுரையை படிக்க இங்கு: அரசுப் பள்ளிகளின் படுகொலைக்கு யார் காரணம்?     திருமணம் ஆவதற்கு முன்பே என் நண்பர் குழாமில் ஒரு சபதம் எடுத்து இருந்தோம். தனியார் பள்ளிகள் வரவால் அரசுப்பள்ளிகள் அழிந்து வருகின்றன. தனியார்பள்ளிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. கல்யாணமாகி பிள்ளை பிறந்தால் அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பது என்று ஒரு சபதம் அது. அப்போது நண்பர்களுக்குள் ஒரு சங்கம் இருந்தது. அதன் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தந்தனர்.     காலம் உருண்டோட சங்கம் கலைந்தது. பல நண்பர்கள் திருமணமாகி பிள்ளைப் பெற்று மனைவி, சுற்றம் என்று சாக்குபோக்கு சொல்லி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட்டனர். இப்போது என் முறை! நான் என் பெண்ணை அரசுப்பள்ளியில்தான் சேர்ப்பது என்று உறுதியாக இருந்தேன். என் பெற