குழப்பத்தில் கேப்டனும்! காதலைச்சொல்லும் பிராவும்! கதம்பசோறு பகுதி 21

கதம்பசோறு பகுதி 21

கூட்டணிக் குழப்பத்தில் கேப்டன்!


தமிழகத்தில் கட்சிகளுக்கு பஞ்சமில்லை! பத்துவருடங்களுக்கு கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்களையும் மூக்கில் விரல்வைக்க வைத்தது அந்தக்கட்சியின் வளர்ச்சி, திமுக, அதிமுக, இரண்டையுமே எதிர்த்த அவர் அடுத்தடுத்த தோல்விகளால் கட்சியினரை கரைசேர்க்கவும் கட்சிக்கு பணம் சேர்க்கவும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அன்றே அவருக்கு இருந்த செல்வாக்கு ஓரளவு சரிய ஆரம்பித்தது. அப்போது கூட தன்னிச்சையாக ஜெ வேட்பாளர்களை அறிவிக்க கம்யூனிஸ்ட்களை கூட்டி கேப்டன் பேசவும் ஜெ இறங்கி வந்தார். ஆனால் அதன்பின் தான் கட்சி அதளபாதாளத்தில் விழ ஆரம்பித்துவிட்டது. சில எம்.எல்.ஏக்களை இழந்து எதிர்கட்சி தலைவர் பதவி ஊசல் ஆடினாலும் உளுந்தூர்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தி நானும் அரசியல் களத்தில் இருக்கிறேன் என்று நிருபித்து இருக்கிறார். பா.ஜ., காங்கிரஸ், திமுக என மூன்று கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்க இதில் எதில் இணைவது என்ற குழப்பத்தில் இருக்கிறார் போலிருக்கிறது கேப்டன். அண்ணியார் திமுக வேண்டாம் என்கிறார். காங்கிரஸுடன் சேர்ந்தால் கரையேர முடியாது. பாஜ பக்கம் சாயலாம் என்றால் சிறுபான்மை ஓட்டுக்கள் பாதிக்கும் தனித்து நின்றாலோ ஓட்டுக்களை பிரித்து மற்றவர்கள் ஜெயிக்கத்தான் உதவ முடியும். கேப்டன் இப்போது நட்டாற்றில் இருக்கிறார். கரை சேர சரியான முடிவு எடுக்கவேண்டியது அவசியம்.

அம்மாவின் பிரதமர் ஆசை!

     மாநிலம் ஆண்டது போதும் இனி நாட்டையே ஆளவேண்டும் என்ற அம்மாவின் ஆசைக்கு கம்யூனிஸ்ட்கள் பச்சைக்கொடி காட்டி கூட்டணியில் இணைந்துவிட்டனர். பாவம் அவர்களுக்கு வேறுவழியில்லை! மதசார்பற்ற அணி என்று காங்கிரஸ் பக்கம் போனால் ஒன்றிரண்டு சீட்களும் கோவிந்தா! திமுக பக்கம் சாய்வதை தமிழகத் தலைவர்கள் விரும்பவில்லை! தனித்துநிற்கும் தைரியம் இல்லை! ஒரேவழி அம்மாவிடம் சரணடைவது! என்று முடிவெடுத்து இவர்கள் கூட்டணி வெற்றிபெற்றால் அம்மாதான் பிரதமர் என்கின்றனர். அம்மாவும் அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார். 545 பேர் உறுப்பினர்கள் உள்ள பாராளுமன்ற அவைக்கு வெறும் 40 உறுப்பினர்கள் கொண்ட (அதிமுக அனைத்திலும் வென்றால்)தலைவராக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகம்தான். 40ல் பாதியாவது கிடைக்குமா? என்று தெரியாது. ஆனால் அம்மாதான் அடுத்த பிரதமர் என்று ரத்தத்தின் ரத்தங்கள் சூளூரைக்க அகமகிழ்ந்து போயுள்ளார் அம்மா! பார்க்கலாம்!

உயிருடன் விளையாடும் ரத்த பரிசோதனை நிலையங்கள்!


ரத்த வகையை கண்டறிவதில் அண்மைக்காலமாக ரத்த வங்கிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்த நிலையில் ரத்த வங்கிகள் இந்த விசயத்தில் அலட்சியம் காட்டுவது வேதனையான விசயம். இந்த விசயத்தில் முழுக்கவனத்தோடு செயல்பட வேண்டிய ரத்த பரிசோதனை நிலையங்கள் அசட்டையாக உள்ளன. திருச்சியைச் சேர்ந்த ஒருவர் பிரபலமான ரத்தவங்கியில் இருமுறை ரத்த தானம் செய்துள்ளார். அவருக்கு அந்த மையம் பி,பாஸிட்டிவ் என்று ஒருமுறையும், ஏ பாசிடிவ் என்று ஒருமுறையும் சான்றிதழ் வழங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவருக்கும் இதே மாதிரி நடந்துள்ளது. ஒருமுறை ஏ1பாசிடிவ், என்றும் மறுமுறை ஏ பாசிடிவ் என்று சான்றிதழ் வழங்கி உள்ளனர். உயிர்காக்கும் மையங்களாக செயல்படவேண்டிய இந்த மையங்கள் இப்படி உயிருடன் விளையாடும் போக்கை கடைபிடித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அப்பாடா! ஒருவழியா கோச்சடையான் ரிலிஸ்!

   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் பல்வேறு தடை தாமதங்களுக்கு பிறகு வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவது 6 ஆயிரம் தியேட்டர்களில் பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்தபடத்தின் கதாநாயகி தீபிகா படுகோன், இயக்கியிருப்பவர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இதுபற்றி சவுந்தர்யா கூறுகையில் சினிமா நூற்றாண்டு விழா முடிந்திருக்கும் இந்த வேளையில் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோச்சடையான் படம் அமைந்திருக்கும் என்றார். அவ்தார் போன்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட போட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபார்மென்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தில் முதன்முதலில் இந்திய சினிமாவில் இந்தபடத்தில் பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் காதலை வெளிப்படுத்தும்  ‘பிரா’
       ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ள நவீன பிரா பெண்களின் காதல் ரகசியங்களை உடனடியாக வெளிப்படுத்துகிறது. பெண்கள் தங்கள் மனம்கவர்ந்த ஆண்களைக் காணும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டால் பெண்களின் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் அவர்களின் காதலை எளிதாக அறியும் வகையில் இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன ஸ்மார்ட்போன் அப்ளிகேசன், ப்ளுடூத் உதவியுடன் இந்த பிரா செயல்படுகிறது. பெண்களின் இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது தானாக திறந்துகொள்ளும் வகையில் இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதை அணியும் பெண்கள் உடற்பயிற்சி செய்யும்போது நடைபயிற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் இதயத்துடிப்பால் திறந்துகொள்ளாது. அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் மாற்றத்தால் இதயத்துடிப்பு அதிகரிக்கும்போது மட்டுமே பிரா திறந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் இளம்பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

தாவரங்களின் நினைவாற்றல்!

   பொதுவாக விலங்குகள் மனிதர்களைப்போலவே கற்கும் திறன் படைத்தவை. இயற்கையாகவே கற்கும் செயல்களையும் மனிதர்கள் கற்றுக்கொடுக்கும் செயல்களையும் கூர்ந்து கவனித்து நினைவுகூர்ந்து செயலாற்றுகின்றன, இதேபோல் தாவரங்களுக்கும் நினைவாற்றல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாவரங்களுக்கு மூளை கிடையாது. எனினும் தாவரங்கள் இயற்கையால் தங்களுக்கு நேரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அதற்கேற்ப செயல்படுகின்றன. ஒரு தாவரத்தை ஒரு குறிப்பிட்ட கலனில் வைத்து நீரில் மூழ்கடித்தோம். நீரில் மூழ்குவதை தவிர்க்க அந்த தாவரம் இலைகளை சுருக்கிக்கொண்டது. நீரில் இருந்துவெளியே வந்ததும் அதன் இலைகள் பழைய நிலைமைக்கு வந்தது. இதேபோல் மீண்டும் மீண்டும் செய்தபோது ஒரு குறிப்பிட்ட முறைக்குமேல் தாவரம் தன் இலைகளை சுருக்கிக்கொள்ளவில்லை! முதல் முறை அந்த நிகழ்வு நடக்கும்போது ஆபத்து என்று இலைகளை சுருக்கிக்கொண்டது. பலமுறை அந்த நிகழ்வு நடந்த உடன் ஆபத்தில்லை என்று இலைகளை சுருக்கவில்லை. இதே போன்று பல சோதனைகள் மூலம் தாவரங்களின் நினைவாற்றல், கற்கும் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் ஆறும்.சளியும் முறியும்.

வடை,சிப்ஸ், பஜ்ஜி போன்றவற்றை எண்ணெயில் பொரித்தெடுக்கும்போது நான்கைந்து துளி எலுமிச்சை சாறை சேருங்கள். எண்ணெய் குறைவாக செலவாகும்.

தினமும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகிவந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

தவழும் குழந்தைகளுக்கு ஜட்டி போடுவதற்கு பதில் பிரிண்டட் காட்டன் துணியில்   பைஜாமா போல் தைத்து போட்டுவிட்டால் தவழும் சமயம் முழங்கால் கறுக்காது. மாலை நேர கொசுக்கடியில் இருந்தும் தப்பிக்கலாம்.

வயிற்றில் வாயில் புண் இருந்தால் தேங்காய்ப்பாலில் சிறிது தேன் விட்டு சாப்பிட சரியாகும்.

சிரத்தையான பக்தி!
  ஒரு முறை சிலர் கேதார் நாத் புனித யாத்திரை சென்றுகொண்டிருந்தனர். யாத்திரை மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ யாத்திரை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வையற்ற ஓர் அம்மா தடியை ஊன்றிக்கொண்டு தட்டுத் தடுமாறி மேலே ஏறிக் கொண்டிருந்தார்.
  அப்போது சுவாமிஜி ஒருவர் அவரிடம், ‘அம்மா, கஷ்டப்பட்டு மேலே போய் என்ன பார்க்க போகிறீர்கள்? இவ்வளவு சிரமம் ஏன்? என்று கேட்டார்.
   அந்த பெண்மணி அமைதியாக பதில் அளித்தாள். ஐயா! என்னால் இறைவனை பார்க்க முடியாதுதான்! ஆனால் இறைவனால் என்னை பார்க்க முடியும் அல்லவா? அவன் கருணைப்பார்வை என் மீது படத்தான் இந்த முயற்சி என்றாள்.
 அந்த பெண்மணியின் இந்த சிரத்தையான பதிலில் சுவாமிஜி வாயடைத்துப் போனார்.
                 (படித்ததில் பிடித்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
 


Comments

  1. சுரேஷ் அருமையா இருக்கு.தொடர்ந்து இதுபோலவே எழுதுங்க

    ReplyDelete
  2. ரத்த வங்கிகள் அலட்சியம் மிகவும் கொடுமையானது... விரைவில் மாற வேண்டும்... டிப்ஸ்கள் பயனுள்ளவை...

    அந்தப் பெண்மணி பொறுமையான முயற்சி யாருக்கும் இல்லை...

    நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைத்து தகவலும் புதிது..
    நன்றி

    ReplyDelete
  4. அந்த பெண்மணியின் பக்திக்கு தலைவணங்குகிறேன். நாம் கடவுளைப் பார்ப்பதை விட, கடவுள் நம்மை பார்ப்பதில் தான் இருக்கிறது சுட்சமமே என்பதை மிக அழகாக சொல்லிவிட்டார் அந்த பெண்மணி.
    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நல்ல கதம்பசோறு.....

    படித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!