Posts

Showing posts from February, 2014

"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி? ஜோக்ஸ்!

Image
ஜோக்ஸ்! 1.பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு 100 போலீஸ் வேணும்னு கேட்டிருக்கீங்களே எதுக்குத் தலைவரே? போலீஸ்காரங்களாவது கூட்டமா இருக்கட்டுமேன்னுதான்!             சீர்காழி வி. வெங்கட் 2.உங்க பையன் படிச்சு முடிச்சதும் என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க? பாஸாகணும்னு!               கொளக்குடி சரவணன். 3.கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? நிறைய பொய் சொல்லிட்டேன் போதும் எசமான்!              பர்வீன் யூனுஸ் 4.என்னய்யா… டி.வி சர்வீஸுக்கு வந்தவன், வாரண்ட்டை பத்தி கேக்கிறான். எதையாவது உளறி வெச்சுடாதீங்க தலைவரெ, அவன் வாரண்டி கார்டு கேக்கிறான்!                  அ.ரியாஸ். 5.எனக்கு உலகமே என் மனைவிதான்! மெதுவாப் பேசுங்க தலைவரே! இரண்டாம் உலகம் வந்துட்டு இருக்கு!                    சிக்ஸ் முகம். 6.வேட்பாளரோட செலவுக்கணக்கை ஒப்படைச்சுதுக்காக நம்ம தலைவரை இனிமேல் தேர்தல்லயே நிக்க தேர்தல் கமிஷன் தடைவிதிச்சுட்டாங்களா? ஏன்? வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததையும் செலவுக்கணக்குகல காட்டியிருந்தாராம்!              சீர்காழி. வி. வெங்கட். 7.நம்ம தலைவர் 7 மணி பொதுக்கூட்டத்திற

சிவாய நம என்று ஓதுவோம்!

Image
சிவாய நம என்று ஓதுவோம்! பிறப்புக்களிலே சிறந்த படைப்பாக கூறப்படுகிறது இந்த மானுடப்பிறவி. மற்ற எல்லாப் பிறப்புக்களில் உயர்ந்ததாக கூறப்பட்டாலும் இந்தப் பிறப்பில் மனிதன் அனுபவிக்கும் இன்பங்களை விட துன்பங்கள் ஏராளம். பொய், பொறாமை, சூது, வஞ்சகம் என்று எத்தனையோ தீவினைகள். இந்த தீவினைகள் அகலவும் நன்மைகள் நம்மை வந்து அடையவும் முன்னோர்கள் வகுத்ததே விரதங்கள் வழிபாடுகள். அத்தகைய வழிபாடுகளில் மனம் லயித்து ஈடுபடும் போது நம்முடைய துன்பங்கள் கரைந்து போகின்றது.     மாசி மாதம் இறைவழிபாட்டிற்கு உகந்ததாக குறிப்பிடப்பட்டாலும் வீட்டில் சுபகாரியங்களுக்கு அவ்வளவு உகந்ததாக கூறப்படுவது இல்லை. அதிலும் புதுமனை புகுதல் போன்றவற்றிற்கு உகந்தவை அல்ல என்று கூறப்படுகிறது. இந்த மாசி மாதத்தில்தான் சிவன் விஷம் உட்கொண்டார். திருநீலகண்டன் ஆனார். ஆதலால் இந்த மாதம் புதுமனை புகுவிழா செய்வது உசிதமல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.     அதே சமயம் இந்த மாதம் சிவன் விஷம் உண்ட நாளான சிவராத்திரியன்று விரதம் இருந்து ஈசனை துதித்து வழிபாடு செய்தால் நன்மைகள் ஏராளம் என்று புராணங்கள் கூறுகின்றன.    சிவன் எப்போது விஷம்

அம்மா தியேட்டர்கள் அவசியமா? கதம்ப சோறு பகுதி 24

Image
கதம்ப சோறு பகுதி 24 அம்மா தியேட்டர்கள்! அவசியமா? சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தியாவில் வேறேங்கும் இல்லாத திட்டமாக மலிவுக் கட்டண திரையரங்குகளை நிறுவி மாநகராட்சி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்மா வாட்டர், அம்மா உணவகம் போன்றவற்றை அரசு நடத்தி வருகையில் கேளிக்கைகளுக்காக ஒரு தொழிலை அரசு நடத்த வேண்டியது அவசியமில்லை!. மக்களின் அன்றாடத்தேவைகளை கவனிப்பதில் அரசு கவனத்தில் கொள்ளுமானால் பாராட்டலாம். அவனைக் கெடுப்பதில் அக்கறை காட்டுவதாக இந்த அரசுகள் அமைவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. டாஸ்மாக்கில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலாக அரசு ஏற்று நடத்த ஆரம்பித்து வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகங்களை பாராட்டலாம். பல ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்று அம்மா உணவகங்கள். ஆனால் திரையரங்குகள் அப்படியா? பொழுது போக்கு கேளிக்கை சார்ந்த இந்த திரையரங்குகள் நடத்துவது என்பது அரசுக்கு தேவையில்லாத ஒன்று. இதையெல்லாம் சொன்னாலும் கேட்பதற்கு அம்மா பக்தர்கள் தயாராக இருக்கப்போவதில்லை! இந்த திட்டங்கள் அடுத்த அரசால் கலைக்கப்படும். அல்லது மாற்றப்படும். இதை வேடிக்கைப்பார்த்து

உபகாரி!

Image
உபகாரி! “ஐயோ! என் குழந்தைக்கு ஒடம்பு நெருப்பா சுடுதே!” கையில ஒத்த பைசா இல்லையே! நான் என்ன செய்வேன்! என்ற குரல் சத்தமாக ஒலித்தது. மகாவின் காதிலும் இந்த அழுகுரல் விழுந்தது.     மகா, அந்தக்குரலைக் கேட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். அவள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல ஒரு பில்டிங்க் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்யும் குடும்பம் ஒன்று அங்கு டெண்ட் அடித்து தங்கியிருந்தது அங்கிருந்துதான் அந்த குரல் கேட்டது.     மகா பெரிய பரோபகாரி! யார் வீட்டில் எது நடந்தால் என்ன என்றெல்லாம் சும்மா இருக்க மாட்டாள். வலிய சென்று இழுத்துப்போட்டு உதவுவாள். சில சமயம் நல்ல பேர் எடுத்தாலும் பல சமயம் கெட்ட பெயர்தான் பரிசாக கிடைக்கும். இன்றைக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் இளிச்ச வாயர்களாகத்தானே கருதுகிறார்கள். இயல்பிலேயே இரக்க சுபாவம் கொண்ட மனது மகாவிற்கு. மீண்டும் அந்த டெண்டில் இருந்து அழுகுரல் பலமாக கேட்க அங்கே சென்று பார்க்க முடிவு செய்தாள்.     அவள் கணவன் குமார் வேறு ஆபிஸில் இருந்து வரும் நேரம். இந்த நேரத்தில் வீட்டை பூட்டிச் சென்றால் கத்துவான். இவள் போல அவனுக்கு இரக்க குணமே கிடையாது. ய