அழகுடன் சேர்ந்து ஆபத்தும் எப்படி வரும்? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


  1. என்ன டாக்டர் இது உங்க கன்ஸல்டிங்க் பீஸை நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்துறீங்க?
    என்ன பண்றது! பணத்தோட மதிப்பு குறைஞ்சிகிட்டே வருதே?
                        அம்பை தேவா.

  1. என்ன இது சொத்து மதிப்பை குறைச்சு காட்டியிருக்கீங்க?
    ரூபாயோட மதிப்பு குறைஞ்சிருச்சு! அதுக்கு நான் என்ன பண்றது?
                      கோபாலன்.

  1. எனக்கு ஆபரேசன் கேஸ் மட்டும் மாசத்துக்கு ஐம்பதுக்கு மேல குவியது!
பார்த்துங்க டாக்டர்! சொத்துக்குவிப்பு வழக்குல உள்ளே தள்ளிட போறாங்க!
                    கே. தண்டபாணி.
  1. தலைவர் எதுக்கு தீடிர்னு ஜோசியர் கிட்ட போயிருக்கார்!
    கட்சி தாவலுக்கு நல்ல நேரம் குறிச்சு வாங்கத்தான்!
                       பெ. பாண்டியன்.

  1. அவரு போலி டாக்டருன்னு எதை வச்சி சொல்றீங்க?
    மெமரி லாஸ் அதிகமா இருக்குதுன்னு போன எனக்கு  4 ஜி.பி மெமரிகார்ட்  எழுதி கொடுத்திருக்கார்னா  பாரேன்!
                      யுவகிருஷ்ணா.

  1. தலைவரே! நேத்து மீட்டிங்ல அந்த கட்சி தலைவரை உப்புமாத் தலையான்னு திட்டினீங்களா?
ஆமா! அதுக்கென்ன இப்போ?
 உங்க மேல  “ரவ”தூறு  வழக்கு போட்டிருக்காங்க!
                        பர்வீன் யூனூஸ்


  1. அழகுடன் சேர்த்து ஆபத்தும் வரும் என்பது தங்கள் விஷயத்தில் உறுதியாகிவிட்டது மன்னா!
எப்படி?
எதிரியின் போர் ஓலையை அழகான இளம்பெண் கொண்டுவந்திருக்கிறாளே!
                      சரவணன்.

  1. ஆச்சர்யமா இருக்கே? தலைவர் மீட்டிங்க்லே இவ்வளவு  பெண்கள் கூட்டம்?
    வெங்காயம் இல்லாத சாம்பாரை அறிமுகப்படுத்தறதா சொல்லியிருக்காரே!

                        அம்பை தேவா.

  1. திடீர்னு எதுக்கு வெளிநாட்டுக்கு போய் திருடி பணம் அணுப்பறே கபாலி!
    ரூபாய் மதிப்பு இழக்கறதை தடுக்கத்தான் எஜமான்!
                         பெ. பாண்டியன்.

  1. ஆனாலும் தலைவரை ஜாமின்ல விடறப்போ இவ்வளவு கடுமையான நிபந்தனை விதிச்சிருக்க கூடாது!
    ஏன் என்னாச்சு?
    தினமும் தொகுதிக்கு போய் அவரோட பொண்டாட்டி எதிருல கையெழுத்து போடனுமாம்!
  

  1. பலவழக்குகளில் சிக்கி நம்ம தலைவர் குழம்பி போய் இருக்காருன்னு எப்படி சொல்றே?
    மனைவி காபி கொண்டுவந்து கொடுத்தாக் கூட இது பழிவாங்கும் நடவடிக்கைன்னு கத்தறாரே!

  1. தலைவர் ஏகப்பட்ட பேங்குகள்ல கடன் வாங்கிட்டு கட்டாம டபாய்க்க பார்க்கிறார்னு எப்படி சொல்றே?
பேங்குகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்போறதா சொல்றாரே!
                       எஸ்.ராமன்.


  1. அவரு பெட்ல படுத்துகிட்டு தலையை சொறிஞ்சிகிட்டு இருக்காரே! ஏன்?
அதுவா? அவருக்கு தூக்கத்துல தீபாவளி இனாம் கேட்கிற வியாதியாம்!
                   பர்வீன் யூனுஸ்

  1. தலைவர் மேல போடப்பட்டுள்ள வழக்கு அபாண்டமானதுன்னு எப்படி சொல்றே?
பின்னே லைசென்ஸ் வாங்காம தீபாவளி துப்பாக்கி வைச்சிருந்தார்ன்னு கேஸ் போட்டிருக்காங்களே!
                        பர்வீன் யூனுஸ்

  1. மன்னா! போரில் துரத்திய எதிரிகள் மீது மகாராணி செய்த தீபாவளி லட்டுகளை வீச வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீர்களா?
    ஏன்? என்னவாயிற்று?
  நீங்கள் போரில் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
                       வீ. விஷ்ணுகுமார்

  1. என்ன டாக்டர் இது! எனக்கு நீங்க ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பட்டாசு வெடிக்கிறாங்களே?
கம்முன்னு படுய்யா! இன்னிக்கு தீபாவளி!

  1. அந்த கவர்ச்சி நடிகை ஏன் கோபமா இருக்காங்க?
தீபாவளி அன்னிக்கு அவங்க புடவை எடுத்ததை டீவியில ப்ளாஷ் நியுஸா போடறாங்களாம்!
                       ராம் ஆதிநாராயணன்.

  1. தலைவர் கொஞ்ச நாளா கோர்ட் பக்கமா அலையறாரே ஏன்?
நீதிபதி கேட்கும் கேள்விகள் அவுட் ஆகுமான்னு பார்க்கிறார்!
                        அம்பை தேவா.


  1. தலைவருக்கு என்ன குழப்பம்?
கூடியிருந்த கூட்டத்தைவிட செருப்பு அதிகம் எப்படி வந்து விழுதுன்னு யோசிக்கிறார்.
                    நா.கி.பிரசாத்.

  1. காசிக்கு போற தலைவர் ஏன் சரக்கு ரயில்ல ஏறி போறார்?
ஏகப்பட்ட பாவமூட்டைகளை கொண்டு போறாரே!
                       சரவணன்.
21 ஆச்சர்யமாக இருக்கிறதே அமைச்சரே! இன்று அரண்மணையில் இத்தனை புலவர்கள் வரிசையாக நிற்கிறார்களே!
   தங்களை இகழ்ந்து பாடவேண்டும் என்று தவறுதலாக அறிவிப்பு செய்துவிட்டோம் மன்னா!
                     அ.ரியாஸ்.

நன்றி: குங்குமம் வார இதழ்.


 மேலும் சிரிக்க:


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


                  

Comments

  1. ஹா... ஹா... அனைத்தும்...

    தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. 15,21 மிகவும் அருமை

    நன்றி

    ReplyDelete
  3. அருமையான நகைச்சுவை துணுக்குகள். ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!