Posts

Showing posts from January, 2014

ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை!

Image
ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை!  சென்னை செங்குன்றத்தில் இருந்து கல்கத்தா செல்லும்  ஜி.என்.டி சாலையில் பதினைந்து கி.மீ சென்றால் பஞ்ஜேஷ்டி என்ற ஊரை அடையலாம். அகத்திய மாமுனிவர் ஐந்து யாகங்கள் செய்த தலம் பஞ்ஜேஷ்டி. இஷ்டி என்றால் யாகம் பஞ்சம் என்றால் ஐந்து. பஞ்ச இஷ்டி பஞ்ஜேஷ்டி எனப்பெயர் பெற்றது. இந்த ஊரில் இருந்து மேற்கே பிரியும் மண் சாலையில் மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகிய வயல்கள் நிறைந்த நத்தம் கிராமம். இந்த கிராமத்தில்  தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம்.      நத்தம் என்று இப்போது வழங்கப்படும் இந்த கிராமத்தின் பழைய பெயர் எகணப்பாக்கம். இது இந்த ஊர் போரியம்மன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.இராஜராஜ சோழ பெருவளத்தான் காலத்திய கல்வெட்டு அது. இதன் மூலம் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்டது என்று அறிய முடிகிறது.       எகணன் என்றால் பிரம்மா. பாக்கம் என்பது கடற்கரை அருகே உள்ள கிராமங்களை குறிக்கும். கடற்கரை அருகே உள்ள பட்டினப்பாக்கம் இதற்கு உதாரணம் ஆகும். இந்த ஊரில் இருந்

சசிக்குமாரை “மாமா”ன்னு கூப்பிடும் நடிகை! கதம்பசோறு! பகுதி 20

Image
கதம்ப சோறு பகுதி 20     கெஜ்ரிவால் கூத்துக்கள்!       அர்விந்த் கெஜ்ரிவால்! அன்னா-ஹசாரே போராட்டங்களில் உறுதுணையாக இருந்து பின்னர் கட்சி துவக்கி ஒருவழியாக டெல்லி முதலமைச்சராகவும் மாறிவிட்டார். ஷங்கரின் முதல்வன் பட ஹீரோ போல காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார் இவர். இவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! தினமும் மக்களை சந்தித்து மனுக்களை வாங்குவேன் என்றார். முதல்நாளே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு பாதுகாப்பு குளறுபடி என்று குழப்பங்கள். இனி இப்படி பட்ட நிகழ்ச்சி கிடையாது என்று பல்டி அடித்தார். அடுத்து டெல்லி போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்று ஒரு முற்றுகைப் போராட்டம் அறிவித்து அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒருமாதம் அவகாசம் கேட்டார் டெல்லியை சீர்த்திருத்த. இதோ முடிந்துவிட்டது. டெல்லி ஒன்றும் மாறியதாக தெரியவில்லை! கெஜ்ரிவால்தான் தேர்ந்தெடுத்த அரசியல்வாதியாக மாறிவிட்டார். அரசியல் அவ்வளவு பலம் வாய்ந்தது! என்ன செய்ய? கலைஞர்-அழகிரி கலாட்டா!    இதைப்பற்றி நேற்றே ஒரு பதிவிட்டேன். இன்றும் கொஞ்சம் கொசுறு. திருவிளையாடல் காலத்தில் இருந்தே பிள்ளைகளுக்குள் தகறா

அழகுடன் சேர்ந்து ஆபத்தும் எப்படி வரும்? ஜோக்ஸ்!

Image
ஜோக்ஸ்! என்ன டாக்டர் இது உங்க கன்ஸல்டிங்க் பீஸை நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்துறீங்க?     என்ன பண்றது! பணத்தோட மதிப்பு குறைஞ்சிகிட்டே வருதே?                         அம்பை தேவா. என்ன இது சொத்து மதிப்பை குறைச்சு காட்டியிருக்கீங்க?     ரூபாயோட மதிப்பு குறைஞ்சிருச்சு! அதுக்கு நான் என்ன பண்றது?                       கோபாலன். எனக்கு ஆபரேசன் கேஸ் மட்டும் மாசத்துக்கு ஐம்பதுக்கு மேல குவியது! பார்த்துங்க டாக்டர்! சொத்துக்குவிப்பு வழக்குல உள்ளே தள்ளிட போறாங்க!                     கே. தண்டபாணி. தலைவர் எதுக்கு தீடிர்னு ஜோசியர் கிட்ட போயிருக்கார்!     கட்சி தாவலுக்கு நல்ல நேரம் குறிச்சு வாங்கத்தான்!                        பெ. பாண்டியன். அவரு போலி டாக்டருன்னு எதை வச்சி சொல்றீங்க?     மெமரி லாஸ் அதிகமா இருக்குதுன்னு போன எனக்கு  4 ஜி.பி மெமரிகார்ட்  எழுதி கொடுத்திருக்கார்னா  பாரேன்!                       யுவகிருஷ்ணா. தலைவரே! நேத்து மீட்டிங்ல அந்த கட்சி தலைவரை உப்புமாத் தலையான்னு திட்டினீங்களா? ஆமா! அதுக்கென்ன இப்போ?  உங்க மேல  “ரவ”தூறு  வழ

அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி!

Image
அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி! ஊடகங்கள் எந்த பரபரப்பு செய்தியும் கிடைக்காமல் மந்தமாக இயங்கிக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் வழக்கமாக தானே கேள்வி தானே பதில் என்னும் அறிக்கை விடும் தாத்தா கலைஞர் அவர்கள் தன் திருவாயை மலர்ந்து அழகிரி குறித்து விடுத்த தகவல்கள் பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கும் போது சொல்லாத புதிய காரணம் நேற்று சொன்னார் தமிழினத்தலைவர். இதன் மூலம் அவர் வீட்டுக்குள் நடக்கும் குடும்பச்சண்டையை வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டார். ஒரு மூத்த அரசியல் ராஜ தந்திரி என்று வர்ணிக்கப்படும் கலைஞர் தேமுதிக கூட்டணிக்காக இந்த அளவுக்கு இறங்கிவருவார் என்று நினைத்தும் பார்க்கவில்லை நான்.      அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது தமிழறிவு, எழுத்தாற்றலை வியப்பவன் நான். நேற்று அவர் அளித்த பேட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் எழுதிய நாடகமாய் தோன்றியது.       ஒரு குடும்பத்தில் அண்ணன் –தம்பிகள் இருந்தால் எப்படியும் தகறாரு ஏற்பட செய்யும்தான். வார்த்தை வேகத்தில் சில வார்த்தைகளை கொட்டிவிடக்கூடும்தான். அப்பட

விருந்தோம்பல்!

Image
விருந்தோம்பல்! அந்த அதிகாலை வேளையில் சென்னை விரைவு போக்குவரத்துக்கழக பேரூந்து கரூர் பேருந்து நிலையத்தில் எங்களை உதிர்த்துவிட்டு புகையை கக்கியபடி கிளம்பியது. அப்போது மணி அதிகாலை 3.30 என அந்த பேருந்து நிலையத்தில் இருந்த மணிகூண்டு காட்டியது.     அதிகாலை நேரம் என்றாலும் பேருந்து நிறுத்தத்தில் நாலாபுறமும் இயங்கிக் கொண்டிருந்த கடைகளில் நடமாட்டம் இருந்துகொண்டுதான் இருந்தது. மார்கழிப்பனிக் காற்று “ஜில்”லென்று காதைத்துளைத்தது. இடுப்பில் மூன்று வயது குழந்தை கையில் ஒரு டிராவல் பேக் கோடு நிதானமாக நடந்தேன். ஆறுமாத கைக்குழந்தையோடு பின் தொடர்ந்தாள் மனைவி.       அருகில் இருந்த கட்டணக் கழிப்பிடம் நோக்கி தன்னிச்சையாக கால்கள் நடந்தன. ஏறக்குறைய பத்துமணி நேர பயணம் எங்கள் அடிவயிற்றை முட்டிக் கொண்டு இருந்தது. முதலில் மனைவி சென்று வர குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு நான் கழிப்பிடத்தினுள் நுழைந்தேன். அந்த அதிகாலை வேளையிலும் அனைத்தும் நிரம்பியிருந்தது. உள்ளே இருந்து ஒரே புகை மண்டலம். அவற்றுடன் மூத்திர நாற்றமும் கலந்து ஒரு மாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. கட்டணம் வாங்குகிறார்களே தவிர பராமரிப்பு என்பதும

புகைப்பட ஹைக்கூ 66

Image
புகைப்பட ஹைக்கூ 66 சோறூட்ட பூட்டப்பட்டது ஏர்! ஓடை திறந்ததும் கூட்டப்பட்டது சேடை! உழவுக்கு உழைத்தன காளைகள்! சேற்றுவயல் ஊட்டுகிறது ஊற்றுப்பசி! பண்பட்டதும் பரிசு தந்தது நிலம்! கழி பேசியதும் களைப்பை மறந்தன காளைகள்! புதைபட்ட வாழ்வு மீட்டெடுத்தது உழவு! தடம் மாறிய உழவை நேர் செய்தன ஏர்மாடுகள்! கூட்ட கூட்ட குறைந்தது பாரம்! ஏர்! உழவு செய்கையில் உவப்பு கொள்கிறது நிலம்! விளைநிலமாக விதைக்கப்படுகிறது உழவு! தேரோடும் வீதிகளை தேர்வுசெய்ய புறப்பட்டது ஏர்! சேறும் ஏரும் ஜோராய் தந்தது சோறு! ஏர்பிடிக்கையில் வேர்பிடித்தது உழவு! விலைநிலங்களுக்கு மத்தியில் ஒரு விளைநிலம்! களம் புகுந்த கலப்பை! களிப்படைந்தது நிலம்!   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 40.

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 40. அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்! இந்த வலைப்பூவில் நான் எழுதிவரும் பகுதிகளில் இந்த பகுதி எனக்கு பிடித்த ஒன்று. ஆத்மார்த்தமாகவும் இதை எழுதிவருகிறேன். தமிழாசிரியர்கள் சிலரும் இந்த பகுதியை படித்து சிறப்பாக இருப்பதாக சொன்னார்கள். அதே போல் நண்பர்களும் சிறந்த பகுதி என்று சொல்லிவருகிறார்கள். இது போன்ற கருத்துக்கள் இந்தத் தொடரினை மேலும் சிறப்பாக எழுத வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தேனி போல நல்ல இலக்கண நூல்களை நாடி கற்று வருகிறேன். இந்த பகுதியை தொடங்கும் போது இலக்கணம் குறித்து எழுதுவதாக இல்லை. தமிழ் நூல்கள் குறித்தும் அதை எழுதியவர்கள் குறித்துமான ஒரு வினாவிடை போன்று ஆரம்பித்தேன். பின்னர் இலக்கணத்தில் நுழைந்து அத்துடன் இலக்கியமும் சேர்ந்து இப்போது வளர்ந்து நிற்கிறது. அதனால் இலக்கணம் முதலில் இருந்து இல்லாமல் அவ்வப்போது சிலவற்றை தந்துவருகிறேன். இன்று நாம் கற்க இருப்பது தொழில் பெயர் பற்றி. பெயர்ச்சொல் ஆறுவகைப்படும். அதை பிறகு பார்க்கலாம். பெயரை குறிப்பது பெயர்ச்சொல் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே போல் வினையை அதாவது செயலை குறித்த