ஆஃப்டே பர்மிசன் கேட்டா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்

ஜோக்ஸ்


  1. மன்னா எதிரி அரண்மனையை நெருங்கிவிட்டான்!
அப்புறம்?
மகாராணியின் முகத்தை பார்த்ததும் நொறுங்கிவிட்டான்!
                        பர்வீன்யூனுஸ்

2.எதற்காக நமது மன்னர் அரசவை புலவரை விளாசித்தள்ளுகிறார்?
பதுங்கு குழிக்குள் பாயும் புலியேன்னு வஞ்சப்புகழ்ச்சியா வர்ணிச்சிட்டாராம்!
                    அருண்பிரகாஷ்

3.நில அபகரிப்பு கேஸ்ல உள்ள போய் வந்தும் தலைவர் திருந்தலய்யா!
   ஏன் என்ன சொல்றாரு?
ஜெயிலுக்கு பக்கத்துல  ஏகப்பட்ட  காலி இடம் இருப்பது தெரியாம போச்சேங்கிறாரு!
                      அ.அரவப்பா

4. வாழ்த்த வயதில்லைன்னு தலைவர்கிட்டே சொன்னா…
   ஏன் என்ன சொன்னார்?
  ரெண்டு ரெண்டுபேரா சேர்ந்து வாழ்த்துங்களேன்றார்!
                         பர்வீன் யுனுஸ்

5.தலைவரை கைது பண்ணப்ப ஏதோ தெனாவட்டா சொன்னாராமே?
   எப்படியும் ஃபைலை தொலைக்கப்போறீங்க! அப்புறம் எதுக்கு பில்டப்புன்னு கேட்டிருக்காரு!
                        எஸ்.சடையப்பன்.

6.எங்க தலைவர் எல்லாத்துக்கும் முன்மாதிரியா இருப்பாரு!
  எங்க தலைவர் எப்பவும் ஒரு மாதிரியா இருப்பாரு!
                 பா. ஜெயக்குமார்

7.தலைவர் டீவி பார்த்து ரொம்ப கெட்டுப்போயிட்டாரு?
  எதைவச்சு அப்படி சொல்றே?
  நேத்து கோர்ட்டுல, ‘ஜட்ஜ் அய்யா எனக்கொரு டவுட்டு?ன்னு கத்தியிருக்காரு!
                      வி. சகிதா முருகன்.

8.முன்பெல்லாம் எங்கள் தலைவரை மருந்துக்கடை, நகைக்கடை, புடவைக்கடை திறக்க அழைத்தவர்கள் இன்று அவர் ஆட்சியில் இல்லாத ஒரே காரணத்துக்கா கட்டணக்கழிப்பிடம் திறக்க அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்!
                     பர்வீன் யூனுஸ்

9.ஜட்ஜ்: கடைசியாக எதையாவது சொல்ல விரும்புகிறாயா?
குற்றவாளி: அப்பப்ப டீவி ஷோக்களுக்கு ஜட்ஜா போய் கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க எஜமான்!
                  இரா.வசந்தராசன்.

10 கேள்வி கேட்டதுக்கு தலைவர் கோச்சுகிட்டாராமே ஏன்?
  பின்னே தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நீதிமன்றங்கள் இருக்குன்னு கேட்டா?
                         சிக்ஸ்முகம்

11. அப்பழுக்கு இல்லாத எங்கள் தலைவரின் ஆடை மீது   வீசிய செப்பலுக்குநீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
                      வீ. விஷ்ணுகுமார்

12. 2016ல் நாம ஆட்சி பீடத்துல ஏறலைன்னா என்னய்யா ஆகும்?
  போலீஸ் வேன்லயும் குற்றவாளி கூண்டுலயும் ஏறவேண்டியிருக்கும் தலைவரே!
                      பர்வீன் யூனுஸ்

13. சாப்பிட்டு மூணு நாளாச்சு! பால்குடிச்சு…
   புலவரே என்ன இது?
   பஞ்சப்பாட்டு மன்னா!
                லெ.நா.சிவக்குமார்

14. உங்களது குற்றப்பத்திரிக்கை மீது ஏதாவது ஆட்சேபனை உண்டா?
  பத்திரிக்கை சுதந்திரத்தில் நான் என்றுமே தலையிட்டதில்லை யுவர் ஆனர்.
             கோவை.நா.கி பிரசாத்.


15. மன்னா! மன்னா!
  சுற்றிவளைக்காமல் விஷயத்தை நேரடியாக சொல்!
   எதிரிப்படைகள் நம்மை நாலாபக்கமும் சுற்றி வளைத்துவிட்டனர் மன்னா!
                    வி.சுபஸ்ரீ
16. சட்டத்தில் இடமில்லைன்னு தெரிஞ்சுமா தலைவரை ஜெயில்ல போட்டுட்டாங்க!
  ஜெயில்ல இடம் இருக்காமே!
                  கிணத்துக்கடவு ரவி

17. தலைவர் கட்சி மாறப்போறார்னு எப்படி சொல்றே?
   தன்னோட பழைய காரை வித்துட்டாரே!
                    பி.நந்தகுமார்.

18.உண்ணாவிரத பந்தல்ல தலைவர் ஏன் கடுகடுன்னு இருக்கார்?
  யாரோ பந்தலுக்கு முன்னாடி பிரியாணி பட போஸ்டரை ஒட்டியிருக்காங்களாம்!
                       வி. சகிதா முருகன்.

19. தலைவர் ஏன் அவசர அவசரமா டிவிட்டர் பேஸ்புக்ல அக்கவுண்ட ஆரம்பிக்கணும்கிறார்?
  சமூகத்துல தனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் வேணும்னு நினைக்கிறார்!
                   அம்பை தேவா.

20.யூ டியுப்ல ஹிட் அடிச்சிட்டீங்க தலைவரே!
  என்னய்யா சொல்றே?
  உண்ணாவிரத பந்தலுக்கு பின்னாடி நீங்க பிரியாணி தின்னது யூ டியுப் ல வந்திருச்சு தலைவரே!
                   அம்பை தேவா.

21 மன்னா! ஒரு நற்செய்தி!
   என்ன?
உங்களின் பதுங்கு குழிக்கு ஐ.எஸ் ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது!
                    வீ.விஷ்ணுகுமார்.

22. சார்… ஆஃப்டே பெர்மிஷன் வேணும்!
   எதுக்கு?
  நான் கேட்டதுலேயே பதில் இருக்கு கண்டுபிடியுங்க!
                              அ.ரியாஸ்.

நன்றி: ஆனந்தவிகடன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


                    

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!