Posts

Showing posts from October, 2013

“சயின்ஸ்”ல வீக்கா இருக்க பெண்ணை நயன் தாரா கிட்ட டியுசன் அனுப்புவது ஏன்? ஜோக்ஸ்!

Image
ஜோக்ஸ்! 1.       எடுத்துகிட்டு இருக்கற படத்துக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு!        அப்புறம்?      ஒரே குழப்பமா இருக்குன்னு பேர் வைச்சிட்டோம்!                          -யாக்கோப்    2. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம்..!       ஆமா… வெங்காய வியாபாரியா இருக்காராம்!                           நா.கி.பிரசாத்.  3. நடிகை ரூபஸ்ரீ இருக்காங்களான்னு கேட்டதுக்கு எதுக்கு    அந்தம்மா கோவிச்சுட்டு போறாங்க? அவங்கதான் நடிகை ரூபஸ்ரீ மேக்கப் இல்லாம இருந்திருக்காங்க!                  கி.ரவிக்குமார். 4.       தலைவர் எப்படி கிரானைட் ஊழலிலே மாட்டினார்? கிரானைட் உடைக்கிற உளியின் ஓசையை ரிங்டோனா வச்சிருந்தாராம்!                       திரிபுரசுந்தரி. 5.       யாருக்குமே பயிர்க்கடன் தராத மேனேஜர் எப்படி அண்ணா உனக்கு தந்தார்? நான் கடன் கேட்டது வெங்காயம் பயிர் செய்ய                          சுரேஷ். 6.       தங்களுடைய வாள் தூக்க முடியாத அளவுக்கு மிக கனமாக இருக்குமாமே மன்னா? அட தங்களுக்கு யார் சொன்னது அமைச்சரே! பேரிச்சம்பழ கடைக்காரன் தான் மன்னா!      

ஒரு ரூபாய் தோசையும் புலவர் செய்த புதுமையும்! கதம்ப சோறு பகுதி 11

Image
கதம்ப சோறு பகுதி 11 மின்மிகை மாநிலமாகுமாம் தமிழ்நாடு       இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலம் ஆகிவிடும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். இப்போது வீட்டு மின்சாரத்தில் மின்வெட்டு அறவே இல்லை எனவும், ஆனாலும் பகிர்மானத்தில் குளறுபடிகளை தவிர்க்க மின்வெட்டு அறிவித்து விட்டு மின்விநியோகம் ஒழுங்காக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு இல்லை! அப்படி இருந்தாலும் ஒரு மணி அரைமணி நேர மின்வெட்டே உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதுவும் சீர் செய்யப்பட்டுவிடும் என்று கூறியுள்ள அவர் வழக்கம் போல தமது ஆட்சிக்காலத்தில் தான் மின் திட்டங்களில் இந்த இந்த செயல்பாடுகள் செய்யப்பட்டன என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டுள்ளார். அவர் மின்வெட்டு இல்லை என்று அறிவித்த மறுநாளே எங்கள் ஊரில் மூன்று மணிநேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை மின்சாரம் தடைபட்டு இன்று வரை தொடர்ந்து வருகிறது. நல்லா காட்டுறாங்கப்பா ஷோ! அலோ மிஸ்டர் ராங் நம்பர்!      ஒன்றரை வருடங்களில் 723 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதாங்க 100ம் நெம்பருக்கு போன் செய்து பெண் காவலர்களிடம் ஒழு

புகைப்பட ஹைக்கூ 56

Image
புகைப்பட ஹைக்கூ 56 1.சிலருக்கு குப்பை சிலருக்கு நிறையுது தொப்பை! 2.இருப்போருக்கு குப்பை இல்லாதாருக்கு இதுவாகும் அகப்பை! 3.வீசி எறியும் முன் யோசித்தால் வறியோர்க்கு தீரும் ஒருவேளை பசி! 4.உணவுத் தேடலில் தொலைந்தது சுகாதாரம்! 5.அமுதசுரபிகளாய் அவதாரமெடுத்தது குப்பைத்தொட்டிகள்! 6.எச்சிலுக்கும் இடம்கொடுத்தது பசி! 7.தீராத துயரம் தெருவோர அவலம் உயராத சமூகம்! 8.வளர்ச்சி வந்தது தொட்டிக்குள் உணவு ஏழ்மை! 9.எறிந்த உணவு அணைத்தது ஏழையின் பசி! 10.தேடிக்கொண்டே  தொலைக்கிறார்கள்  நலவாழ்வு! 11, வளர்ந்து கொண்டே    போகிறது    வறுமைக் கோடு! 12. குப்பையில் சோறு    பாதையில் படுக்கை!    விளிம்புநிலை மனிதர்கள்! 13. விளைநிலமானது    வீணானவை நிறைக்கும்    குப்பைத் தொட்டி! 14.           தேடி சலித்ததில் தேறியது     உணவு. 15.           இறைத்தவை இறைவனானது     இல்லாதவனுக்கு!  16. பசி அழைக்க      பந்திபறிமாறியது      குப்பைத்தொட்டி! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்

ஒளி காட்டும் வழி!

Image
ஒளி காட்டும் வழி! அகிலத்தின் இருளதனை அகற்றிடுமே ஆதவனின் தீபஒளி! அடிமை இருளதனை அகற்றியதும் சுதந்திர தாகமெனும் சுடரொளி! உள்ளத்தின் இருளதனை தள்ளிடுமே சான்றோரின் ஞானஒளி! அறியாமை இருளதனை வறியதாக்கிடுமே கல்வியெனும் அறிவொளி! இல்லாமை இருளதனை இல்லாதாக்கிடுமே இயந்திரங்களின் பேரொளி! இல்லத்தின் இருளதனை நில்லாதுவிரட்டிடுமே நிறைவான தீபஒளி சாதிமத இருளதனை சாய்த்திடுமே சமத்துவம் என்னும் ஒளி! இன்னும் எத்தனையோ இருள்களை மண்ணிலிருந்து விரட்ட உன்னுள்ளே உதிக்கவேண்டும் உயர்வான ஆன்ம ஒளி! ஒளிந்துகொண்ட இருளெல்லாம் ஓடிடவே உள்ளத்தில் பெருகவேண்டும் தூயஒளி இருளதனை விரட்டி அருளதனை தந்திடுமே தீபஒளி எனும் தீபாவளி! ஒளிகாட்டும் நல்வழி! வலியில்லா நல்லவழி! வழிதொடர்ந்தால் சிறக்குமே நம் வாழ்க்கைவழி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! (பதிவர் திரு ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டு பதிவிடப்படுகிறது)

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 31

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 31 இந்த பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக சந்திப்பிழையின்றி எழுதுவது பற்றி படித்தோம். இந்த வாரமும் அது தொடர்பான ஒரு பகுதிதான் ஒலிமயக்கம் என்னும் மயங்கொலிப் பிழைகளை பற்றி இந்த பகுதியில் பார்க்க உள்ளோம். தமிழில் எழுதும் போது சின்ன ‘லா’வா பெரிய ‘ளா’ வா என்றும் சின்ன ‘னா’ வா பெரிய ‘ணா’வா என்றும் குழம்பி மாற்றிப் போட்டுவிடுவோம். ஆங்கிலத்திலும் இந்த ஒலி மயக்கம் உண்டு. ஆங்கிலத்தில் B-P, C-G-J,D-T,G-K, V-W, என பல்வேறு ஒலிமயக்கங்கள் உண்டு. ஆனால் தமிழில் மூன்றே மூன்று இனங்களில் தான் இந்த ஒலிமயக்கம் ஏற்படும்.   அவை 1.       ர-ற  2. ந-ன-ண, 3. ல-ள-ழ இந்த மூன்று இன எழுத்துக்களும் உச்சரிப்பது எப்படி என்று அறிந்துகொண்டால் பிழையே வராது. பேச்சுத்தமிழிலேயே இப்போதெல்லாம் பிழையாக பேசுவதால் எழுத்து தமிழும் பிழையாகிப் போகின்றது. வெளிநாட்டு பாதிரியார் ஒருவர் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டார். அவருக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை! மீன் வாங்கி வந்துவிட்டார். சமையல்கார அம்மாளுக்கு மீன் குழம்பு வைக்க தெரியுமா என்று அவருக்கு சந்தேகம்.அந்த சமையல்கா

பட்டாசு விளையாட்டு! பாப்பாமலர்!

Image
பட்டாசு விளையாட்டு! பாப்பாமலர்!    தீபாவளி தினம் ராஜேஷ் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தான். காம்பவுண்ட் வாசலில் நின்றுகொண்டு சாலையில் யாராவது போகிறார்களா என்று பார்த்தான். வயதான பெரியவர் ஒருவர் அந்த தெருவழியே வருவதை கவனித்தான்.     உடனே அவனது முகம் பிரகாசமானது வேகமாக உள்ளே வந்த அவன் கையில் தற்போது ஒரு மிளகாய் வெடி இருந்தது. மற்றொரு கையில் ஒரு ஊதுவத்தி, மீண்டும் வாசலுக்கு வந்து அந்த பெரியவர் இந்த பக்கமாக வருகிறாரா? என்று பார்த்தான். அவர் மெதுவாக ராஜேஷ் வீட்டு வாசலை கடக்கும் சமயமாக கையில் இருந்த மிளகாய் வெடியை கொளுத்திப் போட்டான். அந்த வெடி அவரது அருகில் விழுந்து  ‘டமால்’ என வெடித்து சிதற அந்த பெரியவர் திடுக்கிட்டு போனார். அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் கண்ணில் படாதவாறு ஒளிந்து கொண்டான் ராஜேஷ்.     சுற்றிலும் யாரும் இல்லை என்று தெரிந்து அவர் பாட்டுக்கு எதையோ முணுமுணுத்து சென்றுவிட்டார் அந்த பெரியவர். ராஜேஷ் அடுத்த இரைக்காக காத்திருந்தான். இப்போது வந்தது ஒரு சின்னவயது பையன் அவன் அருகில் வரும்போது மறைந்திருந்து கொளுத்திப் போட அவன் அலறி அடித்து ஓட வாய்விட்டு

இரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்!

Image
இரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்! வைகுண்ட வாசன் ஏழுமலையான் பூலோகத்தில் பக்தர்களுக்கு தமது அருளினை அள்ளித்தர ஆங்காங்கே ஆலயங்களில் குடிகொண்டு அருள்பாலிப்பது வழக்கம். கருணை வடிவான எழுமலையான் ஆலயங்கள் எத்தனையோ பூமியில் அத்தனைக்கும் ஏதாகினும் ஒரு வரலாறு இருக்கும்.    இது எங்கள் ஊர் அருகில் உள்ள எர்ணவாக்கம் எனும் இரண்யவாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர் பற்றிய பதிவு.     எங்கள் வீட்டில் இருந்து பார்த்தாலே இந்த எர்ணவாக்கம் ஊர் தெரியும் மிகச்சிறிய ஊர். சுமார் முப்பது வீடுகள் தான் இருக்கும். ஏழைக் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் ஊர். இந்த ஊரில்தான் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீ லஷ்மி நாராயணர்.    மஹாலஷ்மியை தனது இடதுபுறத்தில் தொடையில் அமர்த்தி வைத்தபடி அணைத்தபடி சங்கு சக்கரத்துடன் அபயவரத முத்திரையுடன் காட்சி தருகிறார் இந்த பெருமாள்.    சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை கொண்டது இந்த ஊர் என்று ஊருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.ஊரும் சிறியது ஆலயமும் சிறியதாக இருந்தாலும் இந்த ஆலயத்தின் வரலாறு பெரியது. இது செவிவழிக் கதையாக கூறப்பட்டுவருவது ஆகும்.     தன்னுடைய பக்தன் பிரகலா

மசாலா டைரக்டர் ஏன் மசாலா படம் எடுப்பதில்லை? ஜோக்ஸ்

Image
1.       என்னப்பா சொல்றே? நம்ம தலைவர் கூட தெருவிளக்குல படிச்சி முன்னேறினவரா? ஆச்சர்யமா இருக்கே?     ஆமா நைட் லேம்ப்  போஸ்ட்ல  ஏறி பல்பை கழட்டி வித்துட்டு அந்த ரூபாயில் புக் வாங்கி படிச்சாரு!                          புதுவண்டி ரவீந்திரன். 2.தாம்பூலப் பை இவ்ளோ பெரிசா இருக்கே/    மாப்பிள்ளைக்கு தர்பூசணி தோட்டம் நிறைய இருக்காம்!                          கோவி.கோவன். 3.நாவலுடன் இஞ்சிமராப்பா இலவசமா?   கதையை படிச்சி ஜீரணிக்கறதுக்காக தராங்கலாம்!                      வாசுதேவன். 4. தரகரே பெண் பார்க்க வர்ற பிள்ளை வீட்டுக்காரங்க எல்லோரும் கையோட ஆளுக்கொரு பேப்பர் நாப்கின் கொண்டுவந்திருக்காங்களே ஏன்?    பெண் முடிவாகாம அவங்க இந்த அஞ்சு வருசமா எங்கேயும் கையை நனைச்சதே இல்லையாம்!                           வெ.சீதாராமன். 5.நம்ம தலைவருக்கு ’மாலைக்கண்’    அப்படியா எப்போதிலிருந்து? அவர் தலைவர் ஆனதிலிருந்துதான் தனக்கு யார் யார் எவ்வளவு பெரிய மாலை போடறாங்கன்றதுலே ‘கண்’ணா இருக்காரே!                    வெ.சீதாராமன். 6. சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல் ஒண்ணு