Posts

Showing posts from September, 2013

புகைப்பட ஹைக்கூ 51

Image
 புகைப்பட ஹைக்கூ 51   வரவில்லை தண்ணீர்   வந்தது   கண்ணீர்!   மது ஓடும் நாட்டில்   மனிதனுக்கு இல்லை   தண்ணீர்!   புனிதநீர் ஆனது   கழிவு நீர்!   இல்லை தண்ணீர்!    தாகம் அறியவில்லை    தண்ணீரின்    குணம்!    குணம் கெட்டதும்     குடிநீரானது   கழிவு நீர்!   விலை போன தண்ணீர்   வீதியில் திரிவோருக்கு   கழிவு நீர்!   திக்கெட்டும் அம்மாவாட்டர்!   திக்கற்றவர்களுக்கு   டிரைனேஜ் வாட்டர்!   தணியாத தாகம்!   தரம் அறியா   சோகம்!   கழிக்கப்பட்டவர்கள்   நாடுகிறார்கள்   கழிவை!   வீதிக்கு வீதி டாஸ்மாக்!   தொலைந்துபோனது தெருக்குழாய்!   ஆட்சிக்கு இல்லை பாஸ்மார்க்!    மிளிரும் தமிழகத்தின்    ஒளிந்த    பக்கங்கள்!          தெருவோர மக்களின்      தீர்த்தமானது      சாக்கடை!    விலை போன குடிநீர்    வீழ்ந்து போன மனிதம்!    உயர்ந்தது கழிவுநீர்!     சித்தம் கலங்கியதால்     நித்தம் அருந்துகிறார்கள்     கழிவுநீர்!     காட்சி எடுத்தவர்க்கு     உள்ளதோ     மனசாட்சி!    கலங்க வைத்த காட்சி!    ய

ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்

Image
பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி டீச்சர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது பழையார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைகூட இந்த ஆண்டு தனியார் பள்ளிக்கு பைக்கட்டு தூக்கவில்லை. பள்ளிக்குப் போக வேண்டிய அத்தனை பிள்ளைகளும் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆனந்தமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒன்றாம் வகுப்பில் பாடம் சொல்லித்தரும் ஜெயலட்சுமி டீச்சர். ''மிகப்பெரிய மீனவ கிராமமான இந்த பழையாரில் மக்களுக்கு படிப்பு மேல் ஆர்வமே கிடையாது. ஆணும் பெண்ணும் கடலுக்கு போயிருவாங்க. கடலுக்கு போக ஆளு வேணுமேங்கிறதுக்காக நிறைய புள்ளைங்கள பெத்துக்குவாங்க. ஆனா, படிக்க வைக்கமாட்டாங்க. பிழைப்புத்தான் அவர்களுக்கு பிரதானம். படிப்பு ரெண்டாம்பட்சம்தான். போன வருஷம் வரைக்கும் இதுதான் நிலைமை. ஆனா, இந்த வருஷம் ஒன்றாம் வகுப்பில் சாரை சாரையாய் பிள்ளைகளைக் கொண்டுவந்து சேர்த்தி ருக்கிறார்கள். காரணம் படிப்பு மீது அவர்களுக்கு வந்திருக்கும் ஆர்வம். அதற்கு காரணம் எங்க ஜெய

நர்ஸுக்கு லவ்லெட்டர் கொடுக்கும் போது பண்ணக்கூடாத தப்பு! எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்!

Image
எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் பகுதி 2 1.       நம்ம மாநிலத்துல அச்சடிச்ச கள்ளநோட்டுன்னு எப்படி சொல்ற? அதுல ரிசர்வ் பேங்க் ஆப் தமிழ்நாடுன்னு போட்டிருக்கே! 2.       என் மூளைக்கு இரத்தம் மத்தவங்களை விட வேகமா போகுதாம்! இதுல என்னடா ஆச்சர்யம்? திரவப்பொருட்கள் எப்பவும் வெற்றிடத்தை நோக்கித்தானே போகும்! 3.       டார்லிங்! நாளைக்கு நம்ம வெட்டிங்க் டே! இதுவரைக்கும் நான் போகாத இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா? வாடி! செல்லம்! கிச்சனுக்கு போகலாம்! 4.       பசங்களா நீங்க எல்லோரும் நல்லா படிச்சு நம்ம நாட்டுக்கு நல்லப்பேரு வாங்கித்தரனும்! ஏன் இந்தியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு! 5.       தரகரே பொண்ணு குயில் மாதிரி பாடுவான்னு சொன்னீங்க ஆனா நாங்க பாடச்சொன்னதும் கொல்லைப்பக்கம் ஓடிட்டாளே! இருங்க! அவசரப்பட்டா எப்படி? கொல்லையில போயி மரத்துல ஏறி உட்கார்ந்துட்டு பாடுவா! 6.       எதிரிகள் வெட்டிய குழியில் மன்னர் எப்படி சிக்கினார்? படுக்கை வசதிகளுடன் கூடிய அழகிய பதுங்குக் குழின்னு போர்டு வச்சிருந்துதாம்! 7.       அமெரிக்கன்: நாங்க இ-மெயில்ல லவ் பண்ணுவோம்!     இந்தியன்: நாங

மனைவிக்கு பயந்த ஓபாமா! கதம்ப சோறு! பகுதி 6

Image
கதம்ப சோறு பகுதி 6 மொள்ளமாரி அரசியல்வாதிகளுக்கு முகம் இழக்கும் சட்டம்:        தண்டணை பெறும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சுப்ரீம் கோர்ட் ஓர் உத்தரவை பிறப்பித்தது. கிரிமினல் வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டு தண்டணை விதிக்கப்பட்ட எம்.பிக்கள் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படவேண்டும். தண்டணை அறிவிக்கப்பட்டதுமே அவர்களின் பதவியை பறிக்கலாம். குற்றப்பின்னணி உடையவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்பிரிவு8, துணைப்பிரிவு 4 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பொறுக்குமா நம்ம மொள்ள மாரிகளுக்கு! இந்த உத்தரவு அவர்களின் அடிவயிற்றை கலக்க இந்த உத்தரவை செல்லாதது ஆக்க துரிதமாக பணிகள் நடந்தன. இதனால் குற்ற பின்னணி உள்ள அரசியல்வாதிகளை காப்பாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டத்தை தயாரித்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தது. அவர்களும் ஒப்புதல் அளித்துவிட்டார்கள் எல்லோரும் கூட்டு களவாணி பயலுவதானே! இப்போது இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் தந்த

தல தோனியின் வித விதமான தலை அலங்காரம்!

Image
தல தோனியின் வித விதமான தலை அலங்காரம்! மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட்டில் அடிஎடுத்து வைத்தபின் அவரது வித்தியாசமான கிரிக்கெட் ஷாட்டுக்கள் போல அவரது வித்தியாசமான தலை அலங்காரங்களும் பேசப்படுகின்றன.    கூல் கேப்டன் தோனியின் தலை அலங்காரங்கள் அவருக்கு அழகுதான் சேர்க்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்த புதிதில் நீண்ட கூந்தலுடன் விக்கெட் பின்புறம் நின்று அவர் கீப்பிங் செய்த விதமும் அடிக்கடி கிளவுஸை கழட்டி மாட்டி ஹெலிக்காப்டர் ஷாட் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்ததும் கொள்ளை அழகு. இவரது ஸ்டைலை அவரது தீவிர ரசிகர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.    கொஞ்சம் வளர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ஆனபோது தனது நீண்ட கூந்தலுக்கு விடை கொடுத்தார் தோனி. கொஞ்சம் ஒட்ட வெட்டிய கிராப் வைத்தார்.  அப்புறம் செண்ட்ரல் ஸ்பைக்கோ என்னமோ வைத்தார்.  அவர் ஒவ்வொரு முறை முடி அலங்காரம் செய்ய ராஞ்சியில் உள்ள முடி திருத்தகம் செல்லும் போதும் கூட்டம் அலை மோதுமாம். அவரது ஸ்டைலை நிறைய பேர் ரசித்தார்கள் விரும்பினார்கள்.    உலக கோப்பை ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்டைலில் இருந்தவர். வென்றதும் மொட்டை அடித்து அ

துரத்தும் நிழல்! பகுதி 1

Image
துரத்தும் நிழல்!   பகுதி 1 அன்று தை கிருத்திகை தினம்! ஆண்டார்குப்பம் முருகர் ஆலயத்தில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. அந்த பகுதியில் அது பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டுத்தலம். சுற்றுவட்டார மக்களின் கவலைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார் அந்த பால முருகன்.     வைத்தியநாத குருக்கள் வரும் சேவார்த்திகளின் தேங்காய் பழத்தட்டுக்களை வாங்கி அர்ச்சணை செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை! 30ஐ கூடத்தொடாத வயது. குள்ளமான உருவம் ஒல்லியான தேகம். பிராமணர்களில் சற்று வித்தியாசமாக கருப்பு தேகம்! மந்திரம் மட்டும் கணீர் என ஒலித்தது அவரது வாயிலிருந்து. அந்த கோவிலில் கிருத்திகை தோறும் சென்று பணியாற்றுவதால் மக்கள் அவரிடம் நல்ல அபிமானம் வைத்திருந்தனர்.     மற்ற குருக்கள்கள் இருந்த போதும் அவரிடம் தேடிவந்து அர்ச்சனை செய்துகொண்டு போயினர். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் முடிந்து இருந்தது. இளம் மனைவி கைக்குழந்தையோடு வீட்டில் காத்திருப்பாள் இரவாகிவிட்டது. வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உதித்த போது மணி இரவு 9ஐ கடந்து விட்டிருந்தது

புகைப்பட ஹைக்கூ 50

Image
புகைப்பட ஹைக்கூ 50 உடைபட்டது உழைப்பு! கடலில் பிள்ளையார்! விருந்து கொடுத்து விரட்டி அடித்தனர் கடலில் பிள்ளையார்! பிடித்து வைத்து உடைத்து எறிந்தனர்! கடலில் பிள்ளையார்! குளிப்பதற்கு ஊர்வலம் போனார் பிள்ளையார்! பக்தியில் கரைந்து போனார் பிள்ளையார்! உடைத்து போட்டாலும் உயிர்த்து வந்தார் கடலில் பிள்ளையார்! தீர்த்த யாத்திரை கிளம்பினார்    தெருப்பிள்ளையார்! மண்ணிலே தோன்றி மனதினிலே ஊன்றி நீரிலே கரைந்தார் பிள்ளையார்! வீதிவீதியாய் சுற்றிவந்தவர்    வீசப்பட்டார் கடலில்! உற்சாக ஊர்வலத்தில் உடைக்கப்பட்டார் கடலில் பிள்ளையார்! மகிழ்வோடு இறுதி ஊர்வலம்! கடலில் பிள்ளையார்! கரைந்து போனாலும் நிறைந்து நின்றார் மனதில் பிள்ளையார்! அன்பில் திளைத்து ஆழியில் மிதந்தார் பிள்ளையார்! ஒரு வாரம் பூசனை ஒரு நாள் ஊர்வலம்!  ஒரு மணியில் கரைந்தார் பிள்ளையார்! விருந்தும் மருந்தும் மூன்றுநாள் விளக்கமாய் நிருபித்தார் கடலில் பிள்ளையார்! கடல் கொண்டு போனாலும் திடம் கொண்டு எழுகின்றார் அட

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27 சென்ற வாரம் இந்த பகுதியை நிறுத்திவிடலாமா என்று கேட்டமைக்கு முரளிதரன், மற்றும் திண்டுக்கல் தனபாலன், மற்றும் சிலர் நிறுத்த வேண்டாம் தொடருங்கள் என்று சொல்லியிருந்தனர். எனக்கும் இதை நிறுத்த வேண்டாம் அவ்வப்போது சிறு இடைவெளி விட்டுத் தொடரலாம் என்றே எண்ணம்.     இந்த தொடர் ஆரம்பித்த புதிதில் சில ஆங்கில கலைச்சொற்களுக்கு தமிழ் சொற்கள், பிறமொழி சொற்களுக்கு தமிழ் சொற்கள் என்று பார்த்தோம். பின்னர் இலக்கணம், இலக்கியம் என்று கொஞ்சம் ஆழமாக சென்று விட்டோம். இன்று மீண்டும் கொஞ்சம் பின்னே வந்து ஆங்கில கலைச்சொற்களுக்கு தமிழ் சொற்களை கற்க இருக்கிறோம். சரி பகுதிக்குள் நுழைவோம். ஆங்கிலச் சொல்                     தமிழ் கலைச்சொல் 1.international law                      அனைத்து நாட்டுச் சட்டம் 2.constitutional law                      அரசியல் அமைப்புச் சட்டம் 3. supreme court                       உச்சநீதிமன்றம் 4.High court                           உயர்நீதிமன்றம் 5.Writs                               சட்ட ஆவணங்கள் 6.sustantive Laws