Posts

Showing posts from July, 2013

அனுமார் ஆன ஹர்ஷத் அலி! கதம்ப சோறு

Image
கதம்ப சோறு!  தெலுங்கானா உதயம்!           கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனி மாநில கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் செய்த தெலுங்கானா மக்களின் தனி மாநில கோரிக்கை நேற்று 30-5-2013 நிறைவேறியது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க நேற்று ஆளும் ஐக்கிய முன்னனி கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவும் காங்கிரஸ் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துவிட்டது. ஆந்திராவின் அடிலாபாத், மேடக், மெகபூப்நகர் ஐதராபாத் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை பிரித்து தனித் தெலுங்கான அமையப்போகிறது. இதற்கு ஒப்புதல் இப்போது கிடைத்தாலும் அதிகாரப்பூர்வமாக பிரித்து மாநிலம் அமைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். இதில் இன்னொரு பிரச்சனை ஐதராபாத் யாருக்கு? என்று ஒருபோட்டி காத்திருக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனையாக இருந்த தெலுங்கான உதயமானாலும் இன்னும் சில மாநிலங்களில்  விதர்பா, கூர்க்காலாந்து, போடோ லேண்ட், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் தங்களை தனி மாநிலமாக அறிவிக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை க

புகைப்பட ஹைக்கூ 44

Image
புகைப்பட ஹைக்கூ 44     1.வெளிப்பட்ட    மிருகத்திடம் அடிபட்டது    மனிதம்!   2. வலி தெரிந்தும்   வழி தெரியவில்லை!   பாவம் குதிரை!  3 மனிதம்   மரணிக்கையில் பிறக்கிறது   மிருகம்!  4.ஓடாய் தேய்ந்து   முடங்கிப் போனது   குதிரை!  5. பிழைக்க உழைத்ததில்   பிழை!   அடிபட்டது குதிரை!  6 காசு பிரதானமானதில்    மறைந்து போனது    காருண்யம்!  7 ஓடுங்கும் ஜீவனை    பிடுங்கும்    மிருகம்!  8 தடம் மாறியதால்    தடுமாறிப் போனது    குதிரையின் வாழ்வு!  9 வேடிக்கை பீடித்ததில்     வேதனை மறந்த மனிதர்கள்     பாவம் குதிரை!  10  இரக்கமில்லா அரக்கன்     இனி மீளுமா     குதிரை!  11   வீரம் மிகுகையில்       விரைந்து குறைகிறது       ஈரம்!  12  வாலிபனுக்கு       உறைக்கவில்லை!       வாயில்லா குதிரையின் வலி   13 லாபம் சுமந்தவன்      பாவம் சுமக்கிறான்      பாவம் பாறம் சுமந்த குதிரை!     14 காய்ந்தமையால் சாய்ந்தது       மேய்ச்சலில்லா       குதிரை!             15 நடுவீதியில் பாடம் கற்றது       நன்றி மறந்தவனை

புகைப்பட ஹைக்கூ 43

Image
புகைப்பட ஹைக்கூ 43   பேரணிக்கு அல்ல   ஊறுணிக்கு அணிவகுப்பு   கால்நடைகள்!  ஊர்வலம் வந்தன  உணவைத்தேடி!  மாடுகள்!  ஒரே கொள்கையில்   பேரணி! உணவைத்தேடி மாடுகள்! தீவனம் தேடி தீயில் ஊர்வலம் மாடுகள்! அடிதடி கலவரம் இல்லா அமைதி ஊர்வலம்! மாடுகள்! காடுகள் வீடுகளாகையில் மாடுகள் பெயர்ந்தன இரையைத்தேடி! தள்ளுமுள்ளு இல்லா ஊர்வலம் மாடுகள்! இரைதேடி நடைபயின்றன கால்நடைகள்! மேய்ச்சலைத்தேடி மேய்ந்தன கால்நடைகள்! ‘கா’வைத்தேடி கால்நடைப்பயணம் கால்நடைகள்! உடையாத கூட்டணி அமைத்தன கால்நடைகள்! தொலைந்தது இயற்கை தேடின கால்நடைகள்! நடை பயிற்சியில் கால்நடைகள்! நலியும் இயற்கை! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இலவசமாய் குடிநீர் வழங்கும் ஆட்டோ டிரைவர்!

Image
தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார். தண்ணி கிடைக்கல...: ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24  சென்ற வாரம் ஆகுபெயர்கள் குறித்து கொஞ்சம் அறிந்துகொண்டோம்! இந்த வாரம் இலக்கியவகைச்சொற்களை பார்க்க போகிறோம். அதற்கு முன் சொல் எத்தனைவகைப்படும் என்று அறிந்துகொள்வோமா?   சொல் நான்கு வகைப்படும் என்று  சின்ன வயதில் படித்திருப்போம்! நினைவுக்கு வருகிறதா?   1.பெயர்ச்சொல் 2. வினைச்சொல் 3.இடைச்சொல், 4. உரிச்சொல்.   இவை இலக்கண வகையால் பிரிவுபட்டன.   இலக்கியவகையால் சொற்கள் நால்வகைப்படும் அவை 1. இயற்சொல், 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வட சொல் என  நால்வகைப்படும்.  1.இயற்சொல் :  எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். உதாரணம் தீ, காடு, மரம், புத்தகம், அருவி   காற்று, நிலவு, ஞாயிறு, பலகை இந்த சொற்களும் எளிதில் பொருள் விளங்கக்கூடிய பெயர்சொற்கள். இவை பெயர் இயற்சொற்கள் எனப்படும். படித்தான், உறங்கினான், உண்டான், வந்தான் இவையும் எளிதில் விளங்க கூடிய வினைச்சொற்கள் இவை வினை இயற்சொற்கள் எனப்படும். 2.திரிசொல்: கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொற்கள் திரிசொல் எனப்படும்.    பீலி, உகிர்,ஆழி இந்த ச

நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!

Image
 நாலு காலு பட்ட மன்னா! பாப்பா மலர்!       வேளகாபுரம் என்ற அழகிய கிராமத்துல ஒருத்தர் தனது வளர்ப்புக் கிடாயை குளிப்பாட்ட கம்மாயிக்கு ஓட்டிக்கிட்டு போனாரு. அந்த கிடா நல்லா தீனி திண்ணு கொழுத்து கிடந்தது. தண்ணீய கண்டதும் அதுக்கு சந்தோசம் பிடிபடலை! கம்மாயில குதிச்சு கும்மாளம் போட ஆரம்பிச்சிடுச்சு!       ஆடு இந்த குதியாட்டம் போடறதை கரையோரமா வளைக்குள்ளயிருந்த நண்டு மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்துச்சு!  ஆடு சந்தோசமா  நாலுகாலும் எம்பி எம்பி குதிச்சு விளையாடிச்சு! அப்படி விளையாடறப்ப நண்டு வளையை மிதிச்சு நாசம் பண்ணிடுச்சு! நல்ல வேளை நண்டு அதன் காலிலே மிதிபடாம தப்பிருச்சு!      தன் வளையை நாசம் பண்ண ஆட்டின் மீது நண்டுக்கு கோபம்னா கோபம் அப்படி ஒரு கோபம் வந்துருச்சு! “ நாலு காலு பட்ட மன்னா! உனக்கு நாளைக்கு இந்நேரம் சாவு!” ன்னு கிடாயை பார்த்து எரிச்சலா கோபத்தோட சாபம் கொடுத்தது.   அடடா! இதென்ன வம்பா போயிருச்சே! சந்தோசமா கொஞ்ச நேரம் ஆட்டம் போட்டதுக்கு நண்டு இப்படி சாபம் கொடுக்குதேன்னு கிடாய்க்கு ரொம்ப பயமா போயிருச்சு! இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காம கெத்தா நண்டை பார்த்து கேட்டுச்சு!

ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!

Image
ஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்!    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்! இந்த மாதம் இது இரண்டாவது வெள்ளிக்கிழமை! இந்த வெள்ளிக்கிழமையில் ஆனந்த வல்லி என்ற பெயரில் அருள் பாலிக்கும் எங்கள் பக்கத்து சில அம்பிகைகளை தரிசனம் செய்யலாமா?     நத்தம் ஸ்ரீ ஆனந்தவல்லி!          இது எங்கள் ஊர் அம்மன்! வாலீஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு இடபாகத்தில் தென் திசை நோக்கி எழுந்தருளி உள்ள அம்பிகை! முக்கண் நாயகி! மேலிரு கரங்களில் பாச அங்குசத்துடன் கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை தாங்கி காலில் சதங்கையோடு நாட்டிய கோலத்தில் அழகுற அருள் பாலிக்கின்றாள் அன்னை ஆனந்தவல்லி!      நம் வாழ்க்கையில் நாம் அதிகம் எதிர்பார்ப்பது சந்தோஷம் ஆனந்தத்தை! ஆனந்தம் இல்லாத வாழ்வு கசக்கும்! நம்முடைய வாழ்க்கையில் என்றும் ஆனந்தத்தை தரக்கூடிய வல்லமை கொண்டவள் என்பதால் ஆனந்த வல்லி என்ற திருநாமம் அம்மனுக்கு ஏற்பட்டது. அன்னை வழிபாட்டைத் தவிர வேறு எந்த வழிபாடும் இத்தகைய ஆனந்தத்தை தருமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.      நத்தத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லியின் தல வரலாறு சுவையானது. ஆனந்த தாசன் என்பவன் அம்பிகை

எனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு!

Image
எனது முதல் கணிணி அனுபவம்! தொடர்பதிவு! ஒரு காலத்தில் இந்த தொடர் பதிவு சும்மா களை கட்டுச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க! அப்ப நான் வலையுலகில் இல்லை! வலையுலகு வந்தபிறகு ஆங்காங்கே ஒன்றிரண்டு இது போல படித்தாலும் நம்மை யாரும் தொடர்பதிவு எழுத அழைத்தது இல்லை! அதனால் அதன் இலக்கணங்கள் நமக்கு சுத்தமாய் நஹி!      சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பார்கள்! நம்ம ப்ளாக்கே இப்ப சொந்த கதை சோக கதையிலேதான் ஓடிக்கிட்டு இருக்க அட இது ஓவராயிடுச்சே என்று கொஞ்சம் மாத்தி யோசிச்சிகிட்டு இருக்கற வேளையில அண்ணன் குட்டன் திடீர்னு  இந்த தொடர் பதிவுல என்னை கோர்த்து விட்டுட்டாரு!          சரி! ஒரு காலத்துல இப்படி அழைப்புவருமான்னு ஏங்கி கிட்டு இருந்தோம்! இப்ப அழைப்பு வரும்போது தவிர்க்கலாமா? வேண்டாம்னுட்டுதான் இந்த பதிவு! இந்த பதிவுல வர்ற விசயங்களை ஏற்கனவே நான் ஒரு தனிபதிவுல சொல்லியிருக்கேன்! அதனால அந்த விசயத்தை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா இப்ப சொல்லப் போறேன்.     அது 1994ம் வருசம்  நான் டிகிரி முதல் வருசம் கரஸ்ல முடிச்சிகிட்டு (ரெண்டு அரியர் வச்சிருந்தேன் அப்பத்தானே டிகிரிபடிக்கிறதுக்கு அழகு) வெட

கண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு!

Image
 கண்ணதாசனுக்கு பிடித்த மதம்! கதம்ப சோறு! உமாசங்கரின் பிதற்றல்கள்!       ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் இப்போது கிறித்துவ மதத்தில் சேர்ந்து விட்டாராம். மத போதகர் ஆகி பிரச்சாரம் செய்கிறார். அவரின் பிதற்றல்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது. ஏசு வந்து உத்தரகண்ட்டில் இப்படி வெள்ளம் வரும்! ஆயிரக் கணக்கானோர் இறப்பார்கள் என்று சொன்னாராம். மக்கள் மதிக்காமையால்தான் இப்படி உயிரை இழக்க வேண்டியது ஆகிவிட்டதாம். இப்படி ஒரு பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை  எங்கோ உதிர்த்துவிட நமது பேஸ் புக் போராளிகள் கண்ணில் அந்த நியுஸ் பட்டு ஆளாளுக்கு வறுத்து எடுத்துவிட்டார்கள். இப்போது என் பங்கு. எந்த ஒரு மதத்தை பின்பற்றுவதும் அவர்களுடைய தனி விருப்பம். இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது எதுவும் இல்லை! சொல்லப்போனால் எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. இடையில் சிலர் தனது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக கருத்துக்களை திரித்து பரப்புவதால்தான் மதச்சண்டைகளே ஏற்படுகின்றன. இதே போன்று மதம் மாறும் ஆசாமிகள் இப்படி தாய் மதத்தை குறை கூறி பிதற்றுவதால் வீண் வம்பே விலையாக கிடைக்கும். கிறித்துவ மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் இ