Posts

Showing posts from 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 36 வணக்கம் வாசக அன்பர்களே! இடையில் இருவாரங்களாக இந்த தொடரை தொடர இயலாமல் போயிற்று. மாமியாரின் மறைவு மற்றும் என்னுடைய உடல்நலக் குறைவினால் இணையம் பக்கம் பத்து நாட்கள் வர இயலாது போயிற்று. கடைசியாக இந்த பகுதியில் வல்லினும் மிகும் மிகா இடங்கள் குறித்து சற்று விரிவாக பார்த்தோம். வல்லினம் மிகாத இடங்களை சென்ற பகுதியில் படித்தோம். இந்த முறை மிகும் இடங்கள் சிலவற்றை படிக்க உள்ளோம். வலிமிகும் இடங்கள். 1 இருபெயராட்டு பண்புத்தொகையில் வலி மிகும்.   மல்லிகைப்பூ, ஆடித் திங்கள், வரிப்பணம், பசிப்பிணி 2.உவமைத் தொகையில் வல்லொற்று மிகும்.   மலைத்தோள், குவளைக் கண், அம்புப்பார்வை 3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்.   ஓடாக்குதிரைகள், பாடாக்கவிஞன் 4.       ‘இகர’ ஈற்று வினையெச்சம் முன் வலி மிகும்.     அதுபற்றிப் பேச, பேசிக்கெடுத்தான், நோக்கிப்பாய்ந்தான். 5.என, ஆக, போய், ஆய், தவிர, ஏற்ப வினையெச்சங்களின் பின் வல்லொற்று மிகும்.     எனக்கூறினார், அதிகமாகக் கிடைக்கும், அதற்கேற்பப் பேசினார். 6.       அந்த, இந்த, எந்த, அங்கு, இங

குயிலின் ஆணவம்! பாப்பா மலர்!

Image
குயிலின் ஆணவம்! பாப்பா மலர்! ஓர் அடர்ந்து வளர்ந்த காட்டின் நடுவே மாமரம் ஒன்று தனது அழகிய கிளைகளை விரித்து படர்ந்து இருந்தது. அந்த மரத்தில் பொந்து ஒன்றில் குயில் ஒன்று வசித்து வந்தது. மாலை வேளைகளில் அந்த குயில் குரலெடுத்து பாடும். அதன் குரல்வளத்தின் மீது அதற்கு அலாதியான பெருமை. காட்டில் விறகு பொறுக்க வருபவர்களும், அந்த வழியாக செல்லும் வழிப்போக்கர்களும் குயிலின் குரலை பெருமையாக பேசிச் செல்வார்கள். அதனால் அந்த குயில் தனது குரலினிமையை பற்றி கர்வம் கொண்டது.    ஒரு நாள் அந்த மரத்தின் அடியில் மயில் ஒன்று வந்தது.இரைதேடி வந்த மயிலுக்கு மாமரத்தின் அடியில் நிறைய பூச்சிகளை கண்டதும் மகிழ்ச்சி அதிகமாகி விட்டது. அந்த மகிழ்ச்சியில் அது அகவத்தொடங்கியது. பார்க்க அழகாக காட்சி தரும் மயிலின் அகவலோ கர்ண கடூரமாக இருந்தது.    மரத்தின் மீதிருந்த குயிலுக்கோ இதைக் கேட்டு ஆத்திரமாகவும் வந்தது. அதே சமயம் சிரிப்பாகவும் இருந்தது.குயில் வாய்விட்டு சிரிப்பதை கண்ட மயில் குயிலாரே! ஏன் சிரிக்கிறீர்கள்? அப்படி என்ன நையாண்டித்தனம் நான் செய்துவிட்டேன்! என்று கேட்டது.   ஓய் மயிலாரே! நீ தனியாக நையாண்டி வேறு செய

அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!

Image
அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்! ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வசிக்கும் ஸ்ரீ ராமதூதன் அனுமன் அவதரித்த நாள் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆகும். இது ஸ்ரீ அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. வாயுதேவனுக்கும் அஞ்ஜனா தேவிக்கும் மகனாக உதித்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்பலி, மகாவீரர் என்ற பலபெயர்கள் உண்டு.     சீதையை வனத்தில் கண்ட செய்தியை இராமனுக்கு சமயோசிதமாக கண்டேன் சீதையை என்று சொல்லியதால் சொல்லின் செல்வன் என்ற பெயரும் அனுமனுக்கு உண்டு.ராமனுக்கு பணிவிடை செய்து இராமநாபஜெபம் செய்து தன்னடக்கத்துடன் வாழ்ந்தவர் அனுமன். எத்தனையோ பராக்கிரமங்கள் செய்யினும் அடக்கத்தின் திருவுருவாக திகழ்ந்தவர் அனுமன். அனுமன் கடலைதாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறார் அனுமா! நீ எப்படி கடலைத் தாண்டினாய்?   அனுமன் அடக்கத்துடன் பதில் அளித்தார். எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் தான்! என்று.இதைவிட அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு தேவையில்லை. ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவன், விபீஷணன், அங்கதன் முதலானோருக

எதிர் வீட்டு ஆண்ட்டியை புரிஞ்சுக்க முடியாதது ஏன்? ஜோக்ஸ்

Image
ஜோக்ஸ்! 1.       மருந்துலேயே சரிபண்ணிடலாம்னு சொன்ன டாக்டர் இப்ப ஆபரேஷன் பண்ணியே ஆகனுங்கிறாரே! ஏன் சிஸ்டர்? கார்பரேஷன்காரங்க சொத்துவரி, தொழில்வரி உடனே கட்டுங்க இல்லேன்னா தண்ணீர் கனெக்‌ஷன் கட்பண்ணிடுவோம்னு நோட்டீஸ் கொடுத்து இருக்காங்களே!                    கிணத்துக்கடவு ரவி 2.       கோர்ட்டுக்கு கைதி உடையிலேயே வந்திருக்கீயே ஏன்? என் வக்கீல் மேல மேல அவ்வளவு நம்பிக்கை எசமான்!                           ரியாஸ். 3.       எங்கள் அவமானத்துக்குரிய மன்னிக்கவும் எங்கள் அபிமானதுக்குரிய தலைவர் அவர்களே!                     வீ. விஷ்ணுகுமார். 4.       எதிர்கட்சித்தலைவரை பற்றி பேசினால் கேஸ் போடுகிறார்கள் என்பதால் நஸ்ரியாவை பற்றி நாலு வார்த்தைகள் பேசும்படி தலைவரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!                             முகமதுயூசுப். 5.       தலைவரே சி.பி.ஐ வந்திருக்கு! ஏன் ஃபேஸ் புக்ல ஸ்டேட்டஸ் போடாம வராங்க?                         பர்வீன் யூனுஸ் 6.       எதுக்கு ஜெயில் அட்ரஸ் கேட்கறீங்க? தலைவர் புது விசிட்டிங்க் கார்டு அடிக்க சொல்லி இருக்கார் சார்!    

ராஜாஜி என்ற ராஜரிஷி! தி இந்து கட்டுரை!

Image
பழைய சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் ஐந்து ரூபாய் மாத ஊதியத்தில் குடும்பம் நடத்திய சக்கரவர்த்தி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்த ராஜாஜி , சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தார் . சேலத்தில் ஒரு வழக்குக்கு 1,000 ரூபாய் ஊதியம் பெறும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம்வந்த ராஜாஜி , காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடுபட்டார் : “ ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது . அதை என்னால் மன்னிக்கவும் முடியும் . ஆனால் , தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது . இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன் ” என்றார் . தொண்டூழியம்                                         சின்னஞ்சிறு வயதிலேயே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அலர்மேலு மங்கம்மாள் ராஜாஜியின் மடியில் மரணித்த போது , ராஜாஜிக்கு 37 வயது . மனைவியிடம் அளவற்ற அன்பைப் பொழிந்தவர் மறுமணம் செய்துகொள்ளாம