ஆருத்ரா தரிசன கதை!


சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடராஜருக்கு பஞ்சசபைகள் உள்ளன. திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில் பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை ஆகியவற்றில் நடராஜர் திருநடனம் ஆடுகிறார். மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தின்று இவர் ஆருத்ரா தரிசன திருவிழா காண்கிறார். இந்த திருவிழாவை நடத்துவது, ஒரு பெண்மணியின் பதிபக்திக்காக என்பது உங்களுக்குத் தெரியுமா!
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன் பெரிய பணக்காரன். அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றான். நாடகத்தில் நடித்த நடிகையுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து பொருளைக் கறந்த நடிகை ஓடிவிட்டாள். தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களிடம் வியாபார நுட்பங்கள் குறித்து பேசினான். அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன் அவனை பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் புயலில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கி விட்டது. வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. சாதுவன் மட்டும் எப்படியோ தப்பித்து, பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டான். கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அதன் பலனாக, சாதுவன் கரை ஒதுங்கினான்சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கியதும் செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவன் இறந்துவிட்டான் என முடிவு செய்த ஆதிரை அழுது புலம்பினாள். தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும், என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் நெருப்பைச் சுட்டது. தனக்கு ஏதும் நேராததால் ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார், என்றது.
இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னார். அரசர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லைஅரசர் சாதுவனிடம்,நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?, என்று கேட்டார்.
 
சாதுவன் ஏற்கனவே மது, மாதுவிடம் சிக்கி வருந்தியவன் அல்லவாஅவன் அரசரிடம்,உயிர்களைக் கொல்லக்கூடாது. மாமிசம் உண்பது கூடாது. இலை, காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை நமக்காக வழங்கியுள்ளார். இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக் கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும், என்று எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார்சாதுவனை அவனது சொந்த ஊருக்கு ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய சாதுவன் மனைவியுடன் கூடி வாழ்ந்து மகிழ்ச்சி அடைந்தான்அவளது கற்புத்திறனை பாராட்டிய சிவன், அவளை வானமண்டலத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தார். அதை தனது நட்சத்திரமாகவும் ஏற்று, அந்த நாளில் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு பரவசமூட்டுகிறார்.               நன்றி } தினமலர்



Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!