மாற்றான் தோட்டத்து மல்லிகை!



   முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன்! அப்போது கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான படங்களும் செய்திகளும் கீழே! உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!( நன்றி! சொர்கமே என்றாலும் நம்மூரைபோல வருமா முகநூல் பக்கம்)

 ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி

இராமநாத புரம் சேதுபதி மகாராஜா

 கீழ்வாலை கிராமத்தில்(விழுப்புரம்) கண்டறியப்பட்ட அரிய குகை ஓவியங்கள்!

 கல்லில் பின்னப்பட்ட சிற்பம்


ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"
இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலு வாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"
ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத் தூக்கிக் குனிய வைத்து
 முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒரு தட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"
சார் நீங்க டாக்டருங்களா?''
"
இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித் தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? '' :-)))))))))

ஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே உள்ள இரண்டு வித்தியாசமான ஊர்கள்

சீனாபுரம்
காங்கிரஸம் புதூர்

திருச்சி அருகே உள்ள இரண்டு வித்தியாசமான சாலை களின் பெயர்கள்

சாலை ரோடு (சாலை யின் ஆங்கில பெயர் ரோடு )
வெள்ளிகிழமை சாலை

#மூளை இல்லாத அதிசய குழந்தை மூன்று வருடத்திற்குப் பின் திடீர் மரணம்.

இந்தியால பிறந்திருந்தா உயிரை காப்பற்றி பிரதமர் ஆக்கிருப்போம்.
 தஞ்சை பீரங்கி மேடை

 பொன்னியின் செல்வனில் கல்கி விவரிக்கும் கோடியக்கரை கலங்கரை விளக்கம்


தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அவை 

1.
பாலன் - 1 வயது முதல் 7 வயது
2.
மீளி - 8 வயது முதல் 10 வயது
3.
மறவோன் - 11 வயது முதல் 14 வயது
4.
திறலோன் - 15 வயது
 தஞ்சை அரண்மனை மராட்டிய தர்பார்
5. விடலை - 16 வயது
6.
காளை - 17 வயது முதல் 30 வயது
7.
முதுமகன் - 30- வயதுக்கு மேல்

இந்த ஏழு பருவத்தை

1.
பிள்ளை - குழந்தைப் பருவம்
2.
சிறுவன் - பால பருவம்
3.
பையன் - பள்ளிப்பருவம்
4.
காளை - காதற்பருவம்
5.
தலைவன் - குடும்பப் பருவம்
6.
முதியோன் - தளர்ச்சிப் பருவம்
7.
கிழவன் - மூப்புப் பருவம்



இதில் நீங்க எந்த பருவம்???

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மிக்சர் பொட்டலம் ! சரக்கு சுவையாக இருந்தது! பருவப் பெயர்கள் அறிந்தமை மகிழ்ச்சி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அரிய படங்கள்...

    எங்கே தட்டினால் காசு விழும் - ரசித்தேன்... சிரித்தேன்...

    நான் குழந்தைப் பருவம்.... ஹிஹி...

    ReplyDelete
  3. அருமையான பதிவு
    காணக் கிடைக்கா அருமையான புகைப் படங்கள்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அத்தனையும் அத்தனையுமே சுவாரஸ்யம் சுரேஷ்.

    ReplyDelete
  5. காசி-ராமேஸ்வ்ரம் தொடர் என்னா ஆச்சு ????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!