தளிர் ஹைக்கூ கவிதைகள்! 11



தளிர் ஹைக்கூ கவிதைகள்!

வயிற்றில் நெருப்போடு
எரியாமல் உலவுகிறது
மின்மினி.

வீடு சுத்தமானது
வீதிக்கு வந்தது
துடைப்பம்.

பகலில் வெளிச்சத்தை
தொலைத்தன
மின்விளக்குகள்.

எல்லோரும் கூடி
வெட்டினார்கள்
பிறந்தநாள் கேக்.

சேற்றிலே விளைகிறது
செம்பொன் மணி
நெற்கதிர்.

யார் துரத்த
வேகமாய் ஓடுகிறது
மேகக்கூட்டம்!

சிரித்தவுடன்
பறிக்கப்பட்டது
செடியில் பூக்கள்.

எரிபொருள் இல்லாத
ஏர்லைன்சுகள்
பறவைகள்.

சும்மா இருக்கையில்
படையெடுக்கிறது
வேண்டா நினைவுகள்!

வானத்திற்கு யார் கட்டியது அணை
வரவே இல்லையே
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. arumai nanpaa!!

    idaiveli etharkku...!
    ungal pathivirkku...

    ReplyDelete
  2. அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே.!

    ReplyDelete
  3. மிக மிக அழகான கவிதைகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. ஹைகூக்கள் அருமை சுரேஷ் அவர்களே அதுவும் வானத்திற்கு யார் கட்டியது அருமையான கற்பனை
    தவறாக எண்ண வேண்டாம் . உங்களின் பல பதிவுகளைப் படிக்கும்போது உங்களின் கைவண்ணமே அருமையாக உள்ள போது அடுத்தவரின் கருத்துக்களை பகிர வேண்டாமே எனும் எண்ணம் எனக்கு தோன்றும். அப்புறம் உங்களின் அருமையான பதிவுகள் கூட புறக்கணிக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

    ReplyDelete
  5. அனைத்து ஹைக்கூக்களும் சூப்பர் அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!