சுயநலமிக்க பூதம்! பாப்பா மலர்!



சுயநலமிக்க பூதம்!

மூலக்கதை! ஆஸ்கார் ஒயில்ட்
தழுவல்  தளிர் அண்ணா!






வெகு காலத்திற்கு முன்னே ஒரு கிராமத்தில் சுயநலம் மிக்க பூதம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு கண் மட்டுமே! அது யாரையும் கிட்டே நெருங்க விடாது. அதன் வேலையை மட்டுமே கவனிக்கும். பிறற்கு உதவி செய்யாது. அந்த பூதம் தன்னுடைய மந்திர சக்தியால் மிக பெரிய பங்களா ஒன்றை கட்டியது. விஸ்தாரமான நிலப்பரப்பில் அழகிய சோலை வனத்துடன் கூடிய அழகிய பங்களா அது.
    வசந்த காலத்தில் அந்த பங்களாவில் உள்ள செடிகள் அழகாக பூத்து குலுங்கும்! வண்டுகள் கீதம் பாடும்.தென்றல் வீச்சில் பூக்களின் நறுமணம் மூக்கை துளைக்கும்.அழகான பிரதேசமாக அந்த பங்களா இருந்தது. ஆனால் அந்த பங்களாவில் யாரையும் பூதம் அனுமதிக்காது. இதெல்லாம் தனக்கே சொந்தமென கருதி வந்தது.
   ஒருநாள் அந்த ஒற்றைக்கண் பூதம் தன் நண்பனை சந்திக்க பங்களாவை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றது. பூட்டிக் கிடந்த பங்களாவை அந்த ஊரில் உள்ள சிறுவர்கள் பார்த்தார்கள். பூதம் வெளியூர் போய்விட்டதை அறிந்தார்கள். அந்த அழகான பங்களா தோட்டத்தில் சிறுவர்கள் குடி கும்மாளமிட தொடங்கினார்கள்.
   பூக்களை பறித்தும் பழங்களை தின்றும் மரங்களில் ஏறியும் உல்லாசமாக உற்சாகமாக விளையாடி வர தொடங்கினார்கள். இதுவரை வெறிச்சோடி கிடந்த அந்த பங்களா இப்போது புதுப் பொலிவு பெற்றார் போல ஆனது.
நாட்கள் கடந்தன. தினமும் அந்த பங்களா தோட்டத்தில் விளையாடுவது சிறுவர்களின் பொழுது போக்கு ஆகிப் போனது.
   ஏறக்குறைய ஆறு மாதங்கள் கடந்த பின் அந்த பூதம் நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய பங்களாவிற்கு வந்தது. அப்போது பூதம் வருகையை அறியாத சிறுவர்கள் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர்.
  சிறுவர்களின் கோஷமும் விளையாட்டும் பூதத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது. தான் இடம் மாறி வந்து விட்டோமோ என்று நினைத்தது. பின்னர் தான் இல்லாததால் சிறுவர்கள் பயமின்றி வந்து விளையாடுகிறார்கள் போல இவர்களை என்ன செய்கிறேன் பார்! என்று கோபத்துடன் உள்ளே நுழைந்தது.
  ஒற்றைக்கண்ணுடம் ஒரு பிரம்மாண்ட உருவம் வருவதை பார்த்து சிறுவர்கள் மிரண்டார்கள். பூதம் கத்தியது! டேய் மடையர்களே! உங்களுக்கு இங்கு என்ன வேலை! இது என் பங்களா! இது என் தோட்டம்! இதில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மரியாதையாக போய்விடுங்கள் இல்லையேல் உங்களை முழுங்கி விடுவேன் என்று மிரட்டியது.
   பூதத்தின் மிரட்டலில் பயந்த சிறுவர்கள் ஓடிவிட்டார்கள்! அதன் பின் அவர்கள் அந்த பக்கம் வருவதே இல்லை!  பூதம் ஒரு பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்பி கதவை போட்டு மூடி வைத்துக் கொண்டது. அப்போது வசந்த காலம் போய் மழைக் காலம் வந்தது.
  சிறுவர்கள் அந்த பங்களாவை ஏக்கத்துடன் பார்த்து செல்வார்கள்! மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி மீண்டும் வசந்த காலம் வந்தது.எல்லா இடங்களிலும் செடிகள் பச்சை பசேல் என்று துளிர்த்து கிளைகளில் பூக்கள் பூத்தன.
   ஆனால் இம்முறை ஒற்றைக்கண் பூதத்தின் தோட்டத்தில் மட்டும் செடிகள் வாடிக் கிடந்தன. ஒன்றிலும் பூக்கள் இல்லை! தோட்டம் பொலிவிழந்து காணப்பட்டது. பூதம் இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டது. இது எப்படி எல்லா இடத்திலும் பூக்கள் பூத்துவிட்டது நமது தோட்டத்தில் மட்டும் பூக்கள் பூக்கவில்லையே என்று ஆலோசனை செய்தது.
   நாட்கள் சென்று கொண்டிருந்தது! ஆனால் பூதத்தின் பங்களா தோட்டத்தில் ஒரு செடி கூட பூக்கவில்லை! இதனால் மிகவும் வருத்தம் அடைந்தது பூதம். நம் வீட்டி செடிகள் ஏன் பூக்கவில்லை! என்று யோசிக்க ஆரம்பித்தது. தோட்டமே பொலிவிழந்து காணப்பட்டது.
   ஒரு நாள் அதிகாலை வேளையில் பூதம் கண்விழித்தது. ஜன்னலை திறந்தது. அதற்கு அதிசயமான ஒரு காட்சி தென்பட்டது. தென் கிழக்கில் ஒரே ஒரு மரம் மட்டும் அதிசயமாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அதன் கிளைகளில் சில சிறுவர்கள் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த மரத்தின் ஒரு கிளை மட்டும் பூக்காமல் இருந்தது.
  அதன் கீழே ஒரு குட்டி சிறுவன் அந்த கிளையை பற்றி மேலே ஏறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனால் ஏறமுடியவில்லை! சிறுவன் அழுது கொண்டிருந்தான் அவன் மேல் இரக்கப்பட்ட அந்தமரமும் காற்றின் உதவியோடு தன்னுடைய கிளையை தாழ்த்தி கொண்டிருந்தது. அப்படியும் அவனால் ஏறமுடியவில்லை! முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தான்.
   இந்த காட்சியை பார்த்த பூதத்திற்கு தன் தவறு புரிந்தது! இயற்கை அளித்த செல்வங்களை தனது என்று தான் மட்டுமே அனுபவிக்க நினைத்தது தவறு! மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் தான் இயற்கையும் இறைவனும் மகிழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டது.உடனே அது வெளியில் வந்தது.
    பூதம் வெளியே வருவதை கண்ட சிறுவர்கள் பயந்து ஓடினார்கள்! ஆனால் அந்த குட்டிப் பையன் மட்டும் அழுது கொண்டு இருந்தான். அவன் பூதத்தை கவனிக்கவில்லை! பூதம் அவன் அருகில் வந்தது அவனை தொட்டு தூக்கியது அந்த கிளையில் அமர்த்தியது. அந்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைத்தான். பூதத்தை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
   பூதம் மிகவும் மகிழ்ந்தது! இப்படியொரு அனுபவம் அது அடைந்ததே இல்லை! அன்புதான் உலகில் சிறந்தது என்பதை உணர்ந்த அது தன் கெட்ட குணங்களை விட்டொழித்து விட்டு அந்த சிறுவனை அன்போடு தழுவி உச்சி முகர்ந்து முத்தங்களை பறிமாறியது.
  அந்த மரமும் பூதத்தின் செய்கையினால் மகிழ்ந்து பூக்களை பூத்து மகிழ்ந்தது. இவை அனைத்தையும் வெளியே நின்று பார்த்த சிறுவர்கள் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். பூதம் அவர்களை அன்புடன் பார்த்தது. குட்டிபசங்களே இது இனிமேல் உங்கள் வீடு! நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து விளையாடுங்கள்! நான் ஒன்றும் செய்யமாட்டேன்! என்னையும் உங்களோடு விளையாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் என்றது.
  சிறுவர்கள் மகிழ்ந்தார்கள் பூதத்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டார்கள்! அந்த தோட்டம் மீண்டும் பூத்து குலுங்க புது பொலிவு பெற்றது. மறுநாளும் சிறுவர்கள் அங்கு வந்து ஆட்டம் போட்டார்கள்! பூதம் அந்த மரத்தில் ஏறமுடியாத அந்த குட்டிப் பையனை தேடியது. அவன் வரவில்லை! சரி நாளை வருவான் என்று எண்ணியது! மறுநாளும் வரவில்லை!
  இரண்டு நாட்கள் கழித்து சிறுவர்களிடம் அந்த குட்டிப்பையனை பற்றி விசாரித்தது! அவர்கள் அந்த பையனை பார்க்க வில்லை! அன்று பார்த்ததோடு சரி என்றார்கள்! பூதத்திற்கு அந்த பையன் மேல் மிகவும் பாசம் வைத்துவிட்டது. சிறுவர்களிடம் அவனை எங்காவது பார்த்தால் கூட்டிவரும்படி கூறியது.
   ஆனால் அதன் விருப்பம் நிறைவேறவில்லை! நாட்கள் ஓடி மாதங்கள் மாறி வருடங்கள் ஓடிவிட்டன! ஆனால் அந்த குட்டிபையன் மட்டும் வரவே இல்லை! பூதம் மிகவும் ஏங்கி போனது! அதற்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. கண்பார்வையும் மங்கி விட்டது. அதனால் சிறுவர்களோடு விளையாட முடிவதில்லை! வேடிக்கை பார்ப்பதோடு சரி! அதற்கு அந்த குட்டி பையன் நினைப்பாகவே இருந்தது, இறப்பதற்குள் ஒரு முறையாவது அந்த சிறுவனை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தது.
     ஒரு நாள் பனிக்கால மாலைப் பொழுது! சிறுவர்கள் விளையாடிவிட்டு போய்விட பங்களா வெறிச்சோடி கிடந்தது. பூதம் பழைய நினைவுகளில் ஆழ்ந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஆச்சர்யமாக அந்த குட்டி பையன் அதே பழைய மரத்தடியில் நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.
   பூதத்திற்கு தன் கண்களாலேயே நம்ப முடியவில்லை! தடுமாறியபடி விரைவாக அந்த சிறுவனிடம் சென்றது! வந்துவிட்டாயா என் அருமை குழந்தையே! நீதான் என் தவறை உணர வைத்தாய்! உன்னால் தான் நான் திருந்தினேன்! அப்புறம் உன்னை காணவில்லையே! உன்னை பார்க்க முடியாமல் இத்தனை நாளாய் ஏங்கி கிடந்தேன்! இன்று என் ஏக்கம் தீர்த்தாய்!
    யாரப்பா நீ! எங்கிருக்கிறாய்? இத்தனை நாளாய் ஏன் வரவில்லை! என்று கேட்டது.
   அந்த சிறுவன் புன்னகைத்தான்! உனக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதா? நீ என்னோடு வருகிறாயா? என்றான்.
   ஆம் குழந்தையே! உன்னை காணாது தவித்து போனேன்! நீ யார்? என்று கேட்டது பூதம்.
    குழந்தை சிரித்தது! அன்பு பூதமே! நீ அன்பின் மகிமையை உணர்ந்துவிட்டாய்! நீ என்னோடு வரும் தருணம் வந்து விட்டது! உன்னை திருத்தி நல்வழி படுத்தவே நான் குழந்தையாக வந்தேன்! நான் தான் இறைவன்! என்று காட்சி தந்தார் இறைவன்.
    நீ நல்லவனாகிவிட்டாய்! இனி உனக்கு என் வீட்டில் இடம் உண்டு என்னுடன் வருகிறாயா? என்று கேட்டார் இறைவன்.
பூதம் மகிழ்வுடன் இறைவா என் கண்களை திறந்து நல்வழி காட்டினாய்! உன் திருவடிகள் சரணம் உன்னுடன் வருவதில் எனக்கு மகிழ்ச்சியே என்றது அத்துடன் அதன் உயிர் பிரிந்து கடவுளிடம் சேர்ந்தது!

     அன்பே கடவுள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. பிரமாதம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கதை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கதை அருமையாக இருந்தது!

    ReplyDelete
  3. அருமை! அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  4. குழந்தைகதை... நானும் குழந்தைதானே விரும்பி படித்தேன்! நன்றி நண்பா பகிர்வுக்கு!

    ReplyDelete
  5. என் பிள்ளைகளுக்கு படித்து காட்ட வேண்டும் அருமை.

    ReplyDelete
  6. கதை அருமை அண்ணா

    ReplyDelete
  7. கல்லையும் கரைக்கும் குணம் குழந்தையிடம் மட்டுதான் இருக்கிறது..

    அழகிய சிறுகதை..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! அற்புதமான கதை- அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?
    நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  9. அருமையான சிறுவர்களின் கதை. ரொம்ப நாளைக்கு பின் சிறுவர் மலர் படித்த அனுபவம் பெற்றேன். அன்பாக வழங்கியமைக்கு நன்றி.தொடருங்கள்.

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல கதை சார்... நன்றி...

    (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
    Caution : Restore/Backup your HTML, before editing :

    (1) Edit html Remove Indli Vote button script

    (2) Remove Indli Follow Widget

    தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
  11. அன்பு பூதத்தை கூட மாற்றிவிட்டது... நல்ல கதை!

    ReplyDelete
  12. அன்பின் தம்பிக்கு,
    கதைய படிக்கலை ஆனா கருத்து மட்டும், நீ நன்பர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது கண்டு ரொம்ப மகிழ்சியடைந்தேன். அதில் நீ கககபோ.
    தனபால் அண்னா சொன்ன உடன் ஆக்‌ஷன் எடுத்திருக்கிறாய் பதிவுகள் பளிச் சென்று லோடாவுது.
    ”பாராட்டுங்களேன் ப்ளீஸ்” பதிவு படிக்க ஆவலாய் உள்ளேன் லிங்க் எப்போ தரப் போற ? அண்ணனுக்காக தனிவிளக்கப் பதிவெல்லாம் எதுக்குப்பா ? இந்த லிங்க் பத்தாதா ?

    வாழ்த்துக்களுடன்
    கொண்றைவானத்தம்பிரான்

    ReplyDelete
  13. மிக்க நன்றி நண்பரே! லிங்க் கொடுப்பது பற்றி தெரியவில்லை! ஆனால் url தருகிறேன்! இதோ! http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_30.html தம்பிக்கு கொஞ்சம் தொழில் நுட்பத்தில் கோளாறு. எனவே லிங்க் கொடுப்பது பற்றி தெரியவில்லை! நேரமும் மனமும் இருந்தால் சொல்லிக் கொடுத்து உதவலாமே அல்லது ஏதாவது தொழில் நுட்ப பதிவர்களின் முகவரி தந்து உதவலாமே! மேலும் தளிரில் விமரிசனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் தங்களின் தொடர்ந்த கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  14. பதிவை படித்து பாராட்டிய நண்பர்களுக்கும் ஆலோசனை தந்த நண்பர்களுக்கும் எனது மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  15. தம்பி,

    இது ரொம்ப சிம்பிளானது HTML Link Syntax கீழே தந்திருக்கிறேன் பார்த்துக் கொள்.

    Link text

    “url"- தங்கள் பதிவின் url. மற்றும் பதிவின் தலைப்பே Link text. இந்த மாதிரி கொடுத்தால் “பாராட்டுங்களேன் ப்ளீஸ்” பளு கலர் டெக்ஸ்ட்-ல் வரும். அதை க்ளிக்கினால் அங்கே செல்லும். இதில் ரொம்ப முக்கியம் <> இந்த குறிகள் மற்றும் /a இந்த குளோசிங் குறி அந்தந்த இடங்களில் இருப்பது.
    இன்னும் படிக்கவில்லை படித்ததும் கருத்து.

    அண்ணனும் டெக்னிக்கலா கைநாட்டு தான். எத்தனை வெறுபேத்தினாலும் நிதானமாய் இருப்பது பண்பு நிறைந்தவர் குணம். உன்னிடம் நிதானம் இருக்கு. வாழ்க.

    கொண்றைவானத்தம்பிரான்.

    ReplyDelete
  16. Link text

    நான் கொடுத்த சிண்டாக்ஸ் link ஆக மாறிவிட்டது. அதனால் < இந்த அடைப்புக்குறி வருகிற இடத்தை 1 என்றும் >இந்த அடைப்பு வருகிற இடத்தை 2 என்றும் குறிப்பிடுகிறேன்.

    1a href="url"2Link text1/a2

    ReplyDelete
  17. கட்டாயம் சொல்லவேண்டிய கதைதான்.வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
  18. இதோ லிங்க்
    <a href="http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_30.html>எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!</a>

    அடைப்புகுறிகள் இல்லாதது, இதில் அடைப்புக் குறிகள் சேர்க்க் லிங்க் ஆவும்
    a href="http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_30.htmlஎக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!/a

    ReplyDelete
  19. <a href="http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_30.html”>எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!</a>

    ReplyDelete
  20. <a href="http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_30.html”>எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! </a>

    கருணாஸ் அஜித் ஆட்டோ கதையாயில்ல இருக்கு எல்லாம் சரியாருக்கு ஆனா லிங்க் ஒர்க் ஆவலயே! ஒரு வேள இந்தப் பக்கம் வர்ற ஆட்டோ கண்ணாடிய திருகினா ஒர்க்காகுமா ?

    ReplyDelete
    Replies
    1. quotation நீக்கிவிட்டு ட்ரை பண்ணி பாருங்கள்.

      Delete
  21. கதை வாசிக்கும்போது நானும் குழந்தையானேன் !

    ReplyDelete
  22. யூரேகா யூரேகா,

    தம்பீ சிங்கிள் கொட்டேஷன் மார்க் போட்டதும் ஒர்க் ஆயிருச்சு.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.மொபைல் போனில் கருத்திடும் போது பூச்சிபூச்சியாய தெரிவதால் கொட்டேஷன் சிங்கிளா டபுளான்னு தெரியாது பூடுத்து.

    அண்ணன் கிட்ட ”கேட்டால் கிடைக்கும்” பணம் தவிர எதுன்னாலும் அண்ணாவிடம் கூச்சபடாமல் கேள்.

    கொண்றைவானத்தம்பிரான்.

    ReplyDelete
    Replies
    1. எனக்காக இவ்வளவு சிரமப்பட்டதற்கு மிக்க நன்றி நண்பரே! இரண்டு நாட்களாக மின் இணைப்பும் சொந்த அலுவல்கள் இருந்தமையால் நிறைய நேரம் ஒதுக்க முடியவில்லை! நேற்று உங்கள் கருத்துக்களை படித்து கருத்திடவும் முடியவில்லை! மன்னிக்கவும்! நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!