கோவில்களில்கொள்ளையும்! பக்தர்கள் வேதனையும்!


அறநிலையத் துறை: முதல்வர் கவனிப்பாரா? ஆர்.ரங்கராஜன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "ராமேஸ்வரம் கோவிலில் மோசடி' என்ற தலைப்பில், மதுரை அன்பர் ஒருவர், இப்பகுதியில், எழுதியிருந்த கடிதம் படித்தேன். தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற கோவில்கள் அனைத்திலுமே, அர்ச்சனைத் தட்டில் துவங்கி, ஆராதனை வரை, இதுபோன்ற மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், கேரளக் கோவில்களில், இப்படிப்பட்ட நிலை இல்லை. அண்மையில், என் பேத்திக்கு அன்னப்பிராஸனம் செய்யவும், துலாபாரம் அளிக்கவும், குடும்பத்துடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றோம். கோவிலுக்குரிய ஆசார அனுஷ்டானங்களை, பூஜா நியமங்களை ஒன்றுவிடாமல் அங்கு அனுசரிக்கின்றனர். பக்தர்களுக்கு, எந்த அசவுகரியமும் இல்லாத அளவுக்கு, போதுமான ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அருமை. கோவிலுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி, எவரும் எங்களை ஏமாற்றவில்லை. ஆட்டோ டிரைவர்கள் கூட, நம்பமுடியாத அளவுக்கு, நியாயமான வாடகையே வசூலித்தனர்; பண்பாகவும் பேசுகின்றனர். பால் பாயசப் பிரசாதம் குருவாயூர் கோவிலில் மிகப் பிரசித்தம்; சுட சுட, கெட்டியாகத் தருகின்றனர்; மிக சுவையாக உள்ளது. தேவஸ்தானத்திற்கு சொந்தமான பசுக்களிடமிருந்து கறக்கும் பாலில், பொட்டுத் தண்ணீர் கூட கலக்காமல், இந்தப் பாயசத்தைப் தயாரிப்பதால், படு சுவையாக இருக்கிறது. இதற்குக் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். "கவுன்டரில்' அதற்கு, கம்ப்யூட்டர் ரசீதும் கொடுக்கின்றனர். துலாபாரத்திற்கும் அதே போல தான். சுருக்கமாகச் சொன்னால், அந்தக் கோவிலில், எல்லாமே, "சிஸ்டமேட்டிக்'காக நடக்கிறது... அன்னதானம் உட்பட. ஒரு விஷயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். சுவாமி தரிசனத்திற்காக, மூலஸ்தானத்திற்கு, வெளிப் பிரகாரத்தில் நாங்கள் வரிசையில் காத்திருந்த போது, கசகசப்பு காரணமாக, என் ஏழு மாதப் பேத்தி, திடீரென்று அழத் தொடங்கினாள். இதைக் கவனித்த கோவில் பணியாளர் ஒருவர், கூட்டத்திலிருந்து எங்கள் குடும்பத்தைப் பிரித்து, தனி வழியாக உள்ளே அனுப்பி, சுவாமியை தரிசிக்க வைத்தார்; வியந்து போனோம். இத்தனைக்கும், நாங்கள் சாதாரண மக்கள் தான். "ஸ்ட்ரிக்ட்' ஆக இருந்தாலும், மனிதாபிமானத்தோடும் நடந்து கொண்டதைப் பார்க்க, மகிழ்ச்சியாக இருந்தது. மனநிறைவுடன், குருவாயூரை விட்டு கிளம்பி வந்தோம். இரண்டொரு நாளில், ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதர் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். இந்தக் கோவிலில் கிடைக்கும் பால் பாயசமும், குருவாயூர் கோவில் பால் பாயசத்திற்கு நிகராக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. மருந்துக்குக் கூட அதில் பால் இல்லை. சுவையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. சிறிது நேரத்தில் புளித்தும் போய் விட்டது. இதற்கு, அதிகக் கட்டணம் வசூலித்தாலும், ரசீது தரவில்லை. பாயசம் தான் இப்படி இருக்கிறது என்றால், அன்னதான சாப்பாட்டை, வாயிலேயே வைக்க முடியவில்லை. நல்லவேளை, திருப்பதி கோவில் நம் வசமில்லாததால் தப்பித்தது. முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... நமது கோவில் பணியாளர்களையும், அறநிலையத்துறை அதிகாரிகளையும், ஒவ்வொரு குழுவாக, கேரள கோவிலுக்கு அனுப்பி வைத்து, அங்கு, எப்படி, எல்லாம் முறைப்படி, நியமம் தவறாமல் நடக்கின்றன என்பதைப் பார்த்து வரச் செய்து, இங்கும் அதை செயல்படுத்த, அறநிலையத்துறையை அவர் முடுக்கிவிட வேண்டும். இல்லையேல், "இருப்பிடமே வேங்கடம்' என்று, மக்கள் இருந்து விட வேண்டியது தான்.

 தினமலரில் கடந்த வாரம் படித்த கடிதம் இது. நமது கோயில்களின் நிலையை பட்டவர்த்தனமாக விளக்கியுள்ளது இந்த கடிதம்.தமிழக கோயில்களில்தான் இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை அடிக்கப்படுகிறது.கூட்டம் குவியும் கோயில்களில் சிறப்புதரிசனம், கட்டணதரிசனம். தர்ம தரிசனம், வி.ஐ.பிக்களுக்கு தனி தரிசனமென்று பல்வேறு வகைகளில் கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள்.ஆனால் பக்தர்களுக்கு எந்த வித வசதியும் செய்து தருவது கிடையாது. முக்கியமாக குடிநீர் கழிப்பிட வசதிகள் கூட பெரிய கோயில்களில் இல்லை. அது வேறுஇல்லாமல் பிச்சைக்காரர்களின் தொல்லை, வியாபாரிகளின் தொல்லை, மலைமேலுள்ளகோயில்கள் எனில் குரங்குகளின் தொல்லை என்று பல்வேறு தொல்லைகளைபக்தர்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.
   பத்து ஆண்டுகளுக்கு முன்  சிறியதாக எந்தவிதசிரமும் இன்றி இருந்த கோயில்கள் கூட இன்று பிரபலகோவில்களாக மாறி தரிசனத்திற்கு பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. எந்த கடவுள் ஸ்பெஷல், விஐபி, என்று பிரிவு பிரிக்கிறார் என்று தெரியவில்லை!
   பெரும்பாலான கோயில்களில் ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறையும் அர்ச்சகர்கள் நடந்து கொள்ளும் முறையும் சரியில்லை! இவர்களின் விரட்டலில் ஏன் சாமி கும்பிட வந்தோம் என்றநிலைக்கு ஆளாகின்றனர் பக்தர்கள். எங்கள் ஊர் அருகில் இருக்கும் பெரிய பாளையம் பவானிஅம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து நம் கையில் தந்து விடுகின்றனர். சாமிக்கு படைப்பதே இல்லை! காசு போடுபவர்களுக்கு மட்டும் பிரசாதம் கிடைக்கிறது. அர்ச்சனை சீட்டு வாங்குகிறார்களே தவிர அர்ச்சனை செய்வதே இல்லை! ஒருமணி நேரத்திற்கும் மேல் வரிசையில் நின்று வந்தவர்களை சாமியை பார்க்க விடாமல் துரத்தி அடிக்கின்றனர். இதுதான் இன்றைய பிரபலமான கோயில்களின் நிலை.
  சிறுவாபுரியில் விஐபிகள் என்றொரு கும்பல் அர்த்த மண்டபத்தில் நின்று கொண்டு சுவாமியை மறைத்துக் கொள்கிறது. வரிசையில் வருபவர்கள் சாமியை பார்க்க முடிவதில்லை.இவர்களின் பிருஷ்டத்தை தான் பார்க்க வேண்டியுள்ளது.  ஆனாலும் பக்தர்கள் கூட்டத்திற்கு இந்த கோவில்களில் குறைவில்லை.
  திருப்பதியில் இன்னும் மோசம். குவியும் கூட்டத்தை சிறையில் அடைப்பது போல கூண்டில் அடைத்து இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வைக்கின்றனர். ஆனாலும் அங்கு மக்கள் விரும்பி செல்கின்றனர்.
   இறைவனருளை எளிதில் பெற முடியாதுதான்! கஷ்டப்பட வேண்டும் தான்! ஆனால் இப்படி கஷ்டப்பட வேண்டுமா? ஆங்காங்கே எத்தனையோ கவனிப்பாரற்ற கோவில்கள் புராதனமானவைகள் விளக்கேற்ற கூட வழியின்றி கிடக்கின்றன. இதே பெரிய பாளையத்தில் ஐமுக்தீஸ்வரரையும், சிறுவாபுரியில் அகத்தீஸ்வரரையும் தரிசிக்க ஆள் இல்லை!
   இதேபோன்ற பழமையான ஆலயங்களை தேடி அதற்கு ஒரு வேளை பூஜைக்கோ ஒருவேளை விளக்கேற்றவோ வழி செய்தால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் அல்லவா? தெய்வம் ஒன்றுதானே! அதன் அருள் கிடைக்காமலா போய்விடும்.
  அறநிலையத்துறையும் அதிக வருமானம் உள்ள ஆலயங்களைத்தான் கவனிக்கின்றன! இது போன்ற சிறிய ஆலயங்களை கவனிப்பது கிடையாது. வறுமையில் இருக்கும் ஆலயங்களை வருமானம் உள்ள ஆலயங்களின் நிதியிலிருந்து புணரமைப்பு செய்து நித்திய பூஜைக்கு வழி செய்யலாம் அல்லவா?இது போன்ற தொரு முறை பக்கத்து மாநிலமான ஆந்திராவில் சிறப்பாகச் செய்யப்படுகிறது.
   பக்தர்களேகொஞ்சம் யோசியுங்கள்! பிரபலமான கோவில் செல்லுங்கள்! வழிபடுங்கள்! அதே சமயம் உங்கள்  உள்ளூர் ஆலயங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. தமிழ்நாட்டு கோயில்களின் நடக்கும் அட்டூழியங்கள் சகிக்க முடியாத ஒன்றுதான், கேரளா கோயில்கள் சுத்தமாக இருக்கின்றன. எதுவும் ஒழுங்கு முறைப்படி நடக்கிறது. என்ன செய்யா பூனைக்கு யார் மணி கட்டுவது. அறநிலையத்துறை அமைச்சர் எல்லாம் காசு புழங்குமிடத்தை நன்றாக கவனிப்பார்கள்.

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  3. ...ம்... இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ...?

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  4. நிதர்சன உண்மைகள் தமிழக முதல்வரின் பார்வைக்கு செல்வதில்லை! எடுத்துச் சொல்வாரும் இல்லை! பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற நிலையில் உள்ளது இன்றைய நிலை!

    ReplyDelete
  5. கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  6. நிதர்சனம்!..பதிலில்லாக் கேள்விகள்!

    ReplyDelete
  7. கூட்டம் குவியும் கோயில்களில் சிறப்புதரிசனம், கட்டணதரிசனம். தர்ம தரிசனம், வி.ஐ.பிக்களுக்கு தனி தரிசனமென்று பல்வேறு வகைகளில் கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள்.
    இது நூற்றுக்கு நூறுவீதம் உண்மை .இவை உணர்ந்து
    திருந்தப்பட வேண்டிய ஒன்று சகோ .மிக்க நன்றி சிறப்பான
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. ....ம். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்

    ReplyDelete
  9. இந்த நிலை அவ்வளவு சீக்கிரம் மாறாது!

    ReplyDelete
  10. பகிர்விற்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  11. இறைவனை காண்பதற்கு எதற்கு கட்டணமும் வசூலும்... முதலில் இத்தகைய கட்டணத்தை தடை செய்ய வேண்டும்.
    பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

    "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
    என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

    ReplyDelete
  12. நல்ல பதிவு. நிறைய தகவல்களை அறிய முடிந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!