Posts

Showing posts from August, 2012

ருத்திராட்சம்! சில தகவல்கள்!

Image
ருத்திராட்சம்! சில தகவல்கள்! சிவனடியார்களும் பிராமணர்களும் ருத்திராட்சம் அணிந்திருப்பர். அந்த ருத்திராட்சம் பற்றிய சில தகவல்களை எளிமையாக தந்துள்ளேன். பிழைகள் இருப்பின் பொறுத்து சுட்டிக்காட்டவும். ருத்திராட்சம் தோன்றிய கதை: முன்னொரு காலத்தில் திரிபுரர் என்ற அசுரர்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாக இருந்தனர். பிரம்மா விஷ்ணு, இந்திரன் போன்றவர்களுக்கும் தேவர்களுக்கும் தொல்லை தந்த திரிபுரர்களை அழிக்க முயன்று முடியாது போனதால் சிவனிடம் வந்து முறையிட்டனர். அப்போது சிவன் ஆயிரம் வருடங்கள் நிஷ்டையிலிருந்து அகோர ரூபமாய் அக்கினி சுடராய் இருந்தார். அவர் நிஷ்டையிலிருந்து விழித்ததும் அவரது கண்களில் இருந்து நீர் துளிகள் விழுந்தன. அதில் இருந்து ருத்திராட்ச விருட்சங்கள் தோன்றின. அந்த விருட்சங்களில் இருந்து சிவபெருமான் திருவுளப்படி முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் உண்டாகின. வலக்கண்ணாண சூரிய விழியில் இருந்து பன்னிரண்டு விதமான ருத்திராட்சங்களும் இடக்கண்ணான சந்திரவிழியிலிருந்து பதினாறு விதமான ருத்திராட்சங்களும் நெற்றிக்கண்ணான அக்னியிலிருந்து பத்துவிதமான ருத்திராட

குஷ்பாபிஷேகம்! ஓல்ட் ஜோக்ஸ்

Image
ஓல்ட் ஜோக்ஸ் டாக்டர் அந்த பேஷண்ட் தையலை பிரிக்கக்கூடாதுன்னு அடம்பிடிக்கிறாரு! ஏன் என்ன சொல்றாரு? ரெண்டாயிரம் செலவு பண்ணி போட்ட தையலை ஏன் பிரிக்கணும்னு கேக்கறாரு!                   அ.தெய்வசிகாமணி. ஏன் உங்க டிவியில ஒரே சண்டைக்காட்சியா வருது? டிஷ் ஆண்டெனாவுக்கு பதிலா தப்பா ‘டிஷ்யூம்’ ஆண்டெனானு எதையோ போட்டுட்டு போயிட்டானுங்க!                              பாஸ்கி. இன்ஸ்பெக்டர்! நேத்து எங்க வீட்டுல ஒரு நகையை காணோம்னு ரிப்போர்ட் கொடுத்தேன்.. ரொம்ப சாரி! அந்த நகை கிடைச்சிடுச்சி!   இப்ப நாங்க என்னம்மா பண்றது? நாங்க திருடனை பிடிச்சிட்டோமே!                              கார்த்திக். ஒரு லாரி நிறைய பழைய பாய்   தலையணைகளா ஏத்திகிட்டு போறாங்களே?!   ஏதாவது ஆபிஸ்ல ரெய்டு பண்ணியிருப்பாங்க!                        கே.ஏ.கே விவேக்குமார். என்னதான் உங்களுக்கு ஞாபக மறதின்னாலும் வெள்ளப்பகுதியை பார்க்கப் போன இடத்தில், ‘மேலும் தண்ணீர் விட ஆவண செய்வேன்’னு பேசியிருக்க கூடாது!                    எஸ். மஞ்சு பிரியன். ஹலோ டாக்டர்! நான் தான் ராமசாமி.. போன வருஷம் உங்க

கழுதை! கௌரவம் கிடைக்கலன்னா!

Image
பதவிக்கு மரியாதை! கடவுள் உருவம் செதுக்கப்பட்டிருந்த கல் ஒன்றை ஓர் ஊரிலிருந்து இன்னோரு ஊருக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அதை ஒரு கழுதையின் மேல் ஏற்றினார்கள். கழுதையின் சொந்தக்காரன் அதை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.   வழியில் மக்கள் பலர் கழுதையின் மேலிருந்த கடவுள் சிலையை கண்டார்கள். எல்லோரும் வணங்கினார்கள்.    இதைப்பார்த்த கழுதை தன்னைத்தான் மனிதர்கள் வணங்குகிறார்கள் என்று நினைத்தது. அதற்கு பெருமை பிடிபடவில்லை. மனிதர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டதுபோல தலையை ஆட்டிக்கொண்டு கம்பீரமாக நின்றது.   அதன் உள்ளக் கருத்தை புரிந்து கொண்ட சொந்தக்காரன், ‘ஏ கழுதையே! உனக்கு இவ்வளவு திமிரா? கழுதையை மனிதர்கள் வணங்கும் காலம் எப்போதும் வராது. நட” எண்று அதை அடித்து விரட்டினான்.     *******************************************************************************************    இந்த கதையை சமீபத்தில் புத்தகம் ஒன்றில் படித்ததும் பிடித்து போனது. மனிதர்கள் நாமும் இந்த கழுதையைப் போலத்தான் நடந்து கொள்கிறோம். உருவத்திற்கு ஏது கவுரவம். நம் பண்புக்குத்தான் கவுரவம் உண்டு.    சிலர் இப்படித்தான்!

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 6

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 6  முந்தைய பகுதிகள் படிக்க லிங்க்: http://thalirssb.blogspot.in/2012/06/blog-post_3637.html பகுதி 1 http://thalirssb.blogspot.in/2012/07/2.html பகுதி 2 http://thalirssb.blogspot.in/2012/08/3.html பகுதி 3 http://thalirssb.blogspot.in/2012/08/4.html  பகுதி 4   http://thalirssb.blogspot.in/2012/08/5.html பகுதி 5 உங்கள் ப்ரிய “பிசாசு” முன்கதை: பஞ்செட்டியில் வசிக்கும் முகேஷ் டி வியில் ஆவிகள் சீரியல் பார்க்கும் வரும் அவனது நண்பன் ரவி கிண்டல் செய்கிறான். அப்போது கரண்ட் ஆப் ஆக ரவியை பேய் பிடித்துக் கொள்கிறது. அவன் ஓட ஆரம்பிக்கிறான். இரண்டு கி.மீ தொலைவில் வீரபத்திரர் கோயில் அருகில் அவனை பிடித்து உடன் ஒரு பெரியவரையும் துணைக்கு அழைத்து வருகிறான் முகேஷ். அவனது வீடு வந்த பின் அந்த பெரியவர் மாயமாய் மறைகிறார். அதே சமயம் ராகவனின் நண்பன் வினோத் ஒரு பெண்ணை அழைத்து வருகிறான். அந்த பெண்ணும் பேய் பீடித்தார் போல வித்தியாசமாக நடந்து கொள்ள ஊரே ராகவனை துக்கம் விசாரிக்கையில் அவனது நண்பர் தனது பேத்திக்கு நடந்த சம்பவம் பற்றி கூறுகிறார். இனி.    முகேஷ

நினைவுகள்!

Image
நினைவுகள்! நடக்கும்போது கூட வரும் முழுநிலவு போன்று உன் நினைவுகள் என்னுடன் வருகின்றன. வெப்பத்தில்வாடும் பயிர்களை திடீர் மழை குளிர்விப்பதுபோல நீ நுழைந்தால் குளிர்கிறது மனசு. ஜன்னலோர சீட்டில் பஸ்ஸில் பயணிக்கும் போது முகம் வருடும் தென்றலாய் நீ! தூரத்தில் கேட்கும் பறவைகளின்சப்தத்தில் உன் கொலுசொலி கேட்கின்றேன்! யாரோ கடந்து செல்கையில் வீசும் சந்தனவாசம் உன் அருகாமையை நினைவு படுத்துகிறது. என் வீட்டு ஒற்றைரோஜா பூத்து உன் கூந்தலை ஞாபகப்படுத்துகிறது!   கடலலைகள் போல மன அலைகள் எழும்பி உன்னை தேடுகிறது! என் அன்பே! நீ விலகி சென்றாலும் விலக மறுக்கின்றன உன் நினைவுகள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

சபாஷ் இளம் இந்தியா! மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்று சாதனை!

Image
டவுன்ஸ்வில்லே: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சந்த், பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தட்டுத் தடுமாறி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தது. 38 ரன்களில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் வில்லியம் அதிரடியாக ஆடினார். அவர் 87 ரன்களை எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் கை கொடுத்தார். டிராவிஸ் 37 ரன்களை எடுத்தார். 200 ரன்களைக் கூட எடுக்காது என்று நினைத்திருந்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்ட

பாட்டிவைத்தியம்! எளிய சித்த மருத்துவ குறிப்புகள்!

Image
பாட்டிவைத்தியம்!                    எளிய சித்த மருத்துவ குறிப்புகள்!  குப்பை மேனி புண் சிரங்கு குணமாக நுனா இலையை அரைத்து பற்றுப் போட குணமாகும் தேமல் குணமாக ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்துவர தேமல் குணமாகும். கோரைக்கிழங்கு கஷாயம் வைத்து சாப்பிட எவ்வித காய்ச்சலும் குணமாகும். ஆடாதொடை  சளிக்காய்ச்சல் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் வைத்து குடிக்க  குணமாகும். ஜலதோஷம் நீங்க துளசிச் சாறு இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம். இருமல் குணமாக வெந்தயக்கீரை சமைத்து உண்டு வந்தால் குணமாகும். வெட்டுக்காயம் குணமாக இலந்தை மர இலையை அரைத்து காயத்தின் மீது பூசி வர குணமாகும். வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய்திக்கல் குணமாகும்.  வில்வம் வாத நோய் தீர ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.  அகத்திக்கீரை அகத்திக் கீரை வாரம் ஒருநாள்  சமைத்து உண்டுவர  மலச்சிக்கல் குணமாகும். துத்திக்கீரை  கற்றாழை துத்திக்கீரை பொரியல் செய்து சோற்றுடன் 120 நாட்கள் தொடர்ந்து சாப்பிட மூல நோய்