Posts

Showing posts from July, 2012

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2

Image
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2 உங்கள் பிரிய “பிசாசு” சென்ற பகுதியில் : ராகவன் பொன்னேரியில் இருக்கும் சமயம் அவனது நண்பன்   வினோத் ஊருக்கு வருவதாக கூறுகிறான். வினோத் வெளிநாட்டில் வசிப்பவன் அவனது திடீர் வருகை ராகவனுக்கு ஆச்சர்யம் தருகிறது. அதே சமயத்தில் பஞ்செட்டியில் கோயில் குளக்கரை அருகே வசிக்கும் முகேஷ் தன் நண்பன் ரவியுடன் டீவி பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் ஆவிகளை பற்றி பேச்சு கிளம்புகிறது. ரவி ஆவி, பேய் எதுவும் இல்லை என்கிறான் முகேஷ் இருக்கிறது என்று விவாதிக்க மின்வெட்டில் கரண்ட் கட் ஆகிறது. திடீரென ரவி குரல் மாறி விகாரமாக பேச முகேஷ் பயப்படுகிறான். இனி.     எ.. என்னது உசுரு உன். உன்னோடதா? ஒண்னும் புரியலை?   ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்!   என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ!   அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்!    என்னது உன்னை அடிச்சி கொன்னுட்டாங்களா?   ஆமா! பிரண்ட்! ம்ம்ம்!

எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!

Image
பாராட்டுங்கள் பாராட்டப் பெறுவீர்கள்! இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது சந்திக்கிறது. மற்றவர்கள் பாராட்டுக்கு ஏங்கும் அது வசை கேட்கும் போது சுருங்கி விடுகிறது. எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தில் இருக்க மனிதன் மட்டுமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் ஏங்குகிறான். ஆறறிவு படைத்த மனிதனின் ஆசையே பாராட்டு.        ஒவ்வொரு சின்ன செயலையும் ஒருவித எதிர்பார்ப்புடனே செய்யும் மனிதன் அதற்கான விளைவுகளை எதிர்நோக்கியிருக்கிறான். அந்த விளைவு நேர்மறையாக இருப்பின் மிகவும் மகிழ்கிறான். எதிர்மறையாக இருப்பின் மனம் நோகிறான். ஆனால் பாராட்டோ எதிர்ப்போ அவன் விரும்புகிறான்.     தன்னுடைய ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கவனிக்கப்படுகிறது என்பதே அவனுக்கு ஒரு ஆர்வத்தை தருகிறது. ஒரு சிறுவன் அல்லது சிறுமி பள்ளியில் தேர்வில் முதலாவதாக வந்தால் பாராட்ட படுகிறார்கள்.அதே சமயம் தோல்வி அடையும்போது வசைபாடப்படுகிறார்கள்.    வாழ்க்கை என்பது வெற்றிகளை மட்டுமே கொண்டிருக்க கூடியது அல்ல! வெற்றிகளும் தோல்வ

வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...? தினமணி கட்டுரை!

Image
கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான் என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார். "துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்ட

அறிஞர்களின் பொன்மொழிகள்!

Image
அறிஞர்களின் பொன்மொழிகள்! நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.                                           நெப்போலியன். வீரன் தோல்வியைக் கண்டு ஓட மாட்டான்.                                                     நெப்போலியன். தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி!                                               பெர்னாட்ஷா. கற்றவரும் அறிஞரும் வீரர்களும் ஒரு நாளும் பணத்தை வாழ்வின் லட்சியமாக கொள்ள மாட்டார்கள்.                                                                ரஸ்கின். உழைக்காமல் வாழ்பவன் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவன்.                                                              ரஸ்கின். கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.                                                                              கன்பூஷியஸ். நன்மைக்கு நன்மை செய்! தீமைக்கு நீதி வழங்கு!                                                     

பூனையும் எலியும் ! பாப்பாமலர்!

Image
பூனையும் எலியும் அந்த வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் வீட்டின் எஜமானர் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தார்.     பூனை வந்த்ததும் எலிகளால் முன்பு போல தானியங்களை திருட முடிய வில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி அதை நண்பனாக்கி கொல்வதோ நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு சமம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாத காரியம் எனவே நாம் வேறு இடம் தேடிக்கொள்வதே உத்தமம் என்றது.       கிழட்டு எலியின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்த மற்ற எலிகள் வீட்டை காலி செய்துவெளியேற ஆரம்பித்தன. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் வெளியேற வில்லை.பூனைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுவதாவது. எப்படியாவது அதை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கி விட்டது.  தளிர்    ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் பிடிபட்ட எலி,அண்ணா பூனையாரே என்னை விட்டுவிடும் நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை வி

சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!

Image
சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்! சிராவண மாதம் (ஆடி அல்லது ஆவணி) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் வரலஷ்மி விரதம் ஆகும். சுமங்கலிகள் அன்றைய தினம் உபவாசமிருந்து பக்திசிரத்தையாக வீட்டை மெழுகி கோலமிட்டு ஒரு மண்டபம் அமைத்து அம்மண்டபத்தில் முதலில் ஒரு அடி சதுரமாக நெல்லைப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளி அல்லது செப்பு குடத்தை வைத்து அதை அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து கலசத்தில் அம்பாள் முகம் வரைந்து முடிந்தால் தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்து புஷ்பங்களால் அலங்கரித்து சந்தனம் அட்சதை புஷ்பங்களால் வரலஷ்மி தேவியை அர்ச்சித்து நோன்பு கயிறு சார்த்தி கொழுக்கட்டை, அப்பம், சுய்யம், வடை, பாயசம்,இட்லி, சாதம், பருப்பு நெய், தயிர், பழவகைகள் படைத்து வழிபட வேண்டும்.    இதன் பின்னர் அஷ்டலஷ்மிகளை வழிபாடு செய்து அர்சித்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நோன்பு கயிறு அணிந்து கொள்ள வேண்டும். இந்த நோன்புக் கயிறில் மஞ்சள் தடவி ஒன்பது முடிச்சிட்டு புஷ்பம் கட்டி கலசத்தில் வைத்து ப

திரி ரோஸஸ்! கடன் காரன் ஆன ரஜினி!

Image
 த்ரி ரோஸஸ்! கடன்காரன் ஆன ரஜினி!  மகசேசேவிருது பெறும் தமிழர்! உறுதியில்லா சீடன்! ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது: இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி. ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான். இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர். நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன்