இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்கும் ரிப்போர்ட்

உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.
கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்னம் ஆர் என்ற ரோமானிய எண் மற்றும் தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. இதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல இருக்கிறதாம். அது ரூபாயை வெட்டிச் செல்வது போல இருப்பதால் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறியுள்ளார் நிபுணர்.
இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே இதுபற்றி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறாராம். ஆனால் மத்திய அரசுதான் இதை கண்டு கொள்ளாமல் விட்டதாம்.
2009ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி நிலையிலும், இதுபோல் பல்வேறு சூழ்நிலைகளிலும் ரூபாயின் மதிப்பு சரிந்ததில்லை. ஆனால் 2010ம் ஆண்டு ரூபாய் சின்னம் அறிமுகமாக காலத்தில் இருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு கண்டபடி சரிய ஆரம்பித்து விட்டதாகவும் வாஸ்து நிபுணர் கூறியுள்ளார்.
இவரின் கருத்து பதில் கூறியுள்ள சில நிபுணர்கள் வாஸ்து என்பது ஒரு அறிவியல் கட்டிடங்களுக்கு வாஸ்துவின் வடிவம் பார்க்கப்படும். ஆனால் ரூபாய் சின்னத்திற்கு அப்படி கூறமுடியாது என்று கூறியுள்ளனர்.
அப்ப கிரீஸ் நாட்டு பொருளாதாரம் சரிய அந் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமில்லை, வாஸ்து தான் காரணமோ ஜான்ஹரி?

தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!