தாலியை தின்ற நாய்! கேரளாவில் அதிசயம்!

தாலியை கடித்து தின்ற நாய்குட்டி! 

கேரளாவில் கொல்லம் மாநிலத்தின் மைய நாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லத்தி. இவர் செல்லமாக பாமரேனியன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த செல்ல நாய் இவருடன் படுக்கையிலேயே படுத்து தூங்குமாம். லத்தி மாடர்ன் பெண்மணி போலும். புருஷன் கட்டிய தாலியை இரவில் படுக்கும் போது தலையணை அடியில் வைத்துவிட்டு தூங்குவாராம். வழக்கம் போல அன்றும் அப்படி கழட்டி வைத்து விட்டுத் தூங்கியவருக்கு விடிந்ததும் அதிர்ச்சியோ அதிர்ச்சி தாலியைக் காணோம்.
        அதிர்ச்சியில் உறைந்து போனாலும் வீடு முழுக்க தேடிய அவர் இறுதியில் நாயின் வாயில் சில தங்க துணுக்குகள் ஒட்டியிருப்பதை கவனித்து உள்ளார். ஆகா பயல் சிக்கிட்டான் என்று விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார். நாய் ஆய் போனதில் சில பாகங்களே கிடைத்துள்ளது. விஷயம் ஊர்ஜிதமானது. விஷமக்கார நாய் தான் தாலியை  பிஸ்கெட்டாக நினைத்து மென்று முழுங்கி விட்டது என்று.
   இரண்டரை பவுன் தங்கத்தை சுவாகா செய்த நாயை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று தாலி முழுங்கியதை கூறினார்கள். அங்கு வாந்தி வரவழைத்து தாலியின் சில பகுதிகளை மீட்டனர். ஆனாலும் இன்னும் சில பகுதிகள் நாயின் இரைப்பையில் இருப்பதை கண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
   ஒரு வழியாக நாய்க்கு வயிற்றில் ஆபரேஷன் முடித்து  தாலியை மீட்டனர். தாலி பாக்கியம் பெற்ற நாய் இப்போது ரெஸ்டில் இருந்து வருகிறது. இந்த நாய் ஏற்கனவே  லத்தியின் செல் போன் உள்ளிட்ட சில பொருள்களை மென்று தின்றுள்ளதாம். இருந்தாலும் தாலியை முழுங்கியது கொஞ்சம் அதிகம்தான் இல்லை!

தாலியை கழட்டி வைக்கும் அம்மணிகள் இனி பக்கத்தில் நாயை சேர்க்காதீர்கள்! நான் உங்கள் புருஷனை!? சொல்ல வில்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!