போபண்ணா போர்க்கோலம் * "பயசுடன் விளையாட முடியாது'

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு பிரச்னை இன்னும் முடியவில்லை. மகேஷ் பூபதியை அடுத்து இப்போது, ரோகன் போபண்ணாவும் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். 
லண்டன் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர்களை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடியை தேர்வு செய்தது. 
சமீபகாலமாக பயசை பிரிந்து, போபண்ணாவுடன் விளையாடி வரும் பூபதிக்கு இது பிடிக்கவில்லை. பயசுடன் சேர்ந்து விளையாட முடியாது என, வெளிப்படையாக அறிவித்த இவர், ஏ.ஐ.டி.ஏ.,க்கு கடிதம் எழுதினார். பூபதி இல்லையென்றால் போபண்ணாவுடன் விளையாடவும் தயார் என்று பயஸ் அறிவித்தார். 
இப்பிரச்னையில் திடீர் திருப்பமாக, இப்போது போபண்ணாவும் பயசுடன் விளையாட முடியாது என அறிவித்துள்ளார். ஏ.ஐ.டி.ஏ.,க்கு போபண்ணா எழுதிய கடிதம்:
2012ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, பூபதியுடன் இணைந்து விளையாடி வருகிறேன். இது லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று நினைத்தேன். சேர்ந்து விளையாடுவது என நாங்கள் எடுத்த முடிவு குறித்த ஒவ்வொரு நடவடிக்கையையும் ஏ.ஐ.டி.ஏ.,க்கும் தெரிவித்துள்ளோம். அப்போது, எல்லோரும் எங்களது முடிவை பாராட்டினர். 
உரிமை உண்டு:
பயசுடன் இதுவரை இரண்டு முறை தான், இரட்டையர் போட்டியில் பங்கேற்றுள்ளேன். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்காக திடீரென பயசுடன் தான் விளையாட வேண்டும் என்ற முடிவை ஏற்பது சரியல்ல. இதை ஏற்க முடியாத நிலையில் <<உள்ளேன். யாருடன் சேர்வது என்பதை தேர்வு செய்யும், <உரிமை எங்களுக்கு உள்ளது.
கடமை உள்ளது:
எனது இம்முடிவை ஏற்றுக்கொள்வது, கடினம் என்பது தெரியும். எனினும், இதை நான் ஏற்பது எனது தொழிலின் நேர்மைக்கு ஏற்றதல்ல. தற்போது பூபதியுடன் இணைந்து விளையாடி வரும் நான், எதிர்காலத்திலும் இதை தொடரவுள்ளேன். 
நட்பில் விரிசல்:
ஏனெனில் கடந்த அக்டோபர் 2011ல் எனது வெற்றிகரமான "பார்ட்னர்' அய்சம் அல் குரேஷியை பிரிந்தேன்.டென்னிஸ் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு இது. "நம்பர்-8'வது இடத்தில் இருந்த எங்கள் ஜோடி, அதிக வெற்றிகளை பெற்று வந்தது. இந்த முடிவால், குரேஷியின் நட்பும் பாதிக்கப்பட்டது. 
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவது தான் எனது முக்கிய லட்சியம். இதனால் தான் குரேஷியை விட்டு விலகி பூபதியுடன் இணைந்தேன். ஒலிம்பிக்கிற்கு முன் சேர்ந்து விளையாடினால், எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்படும் என்று விளையாடி வருகிறோம். தொடர்ந்து சிறப்பாக விளையாடி "டாப்-10' இடத்துக்குள் வர முயற்சிப்போம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மகேஷ் பூபதி கடிதம்
ஏ.ஐ.டி.ஏ., தேர்வு குறித்து மகேஷ் பூபதி, மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனுக்கு எழுதிய கடிதத்தில்," இரு ஜோடியை அனுப்ப முடியும் என, ஏ.ஐ.டி.ஏ., தெரிவித்துள்ளது. இந்நிலையில், தர வரிசையில் 7வது இடத்திலுள்ள எங்களை  பிரித்து  ஒரு ஜோடியை மட்டும் அனுப்புவது ஏன். இவ்விஷயத்தில் நீங்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் தலையீடு
டென்னிஸ் வீரர்கள் தேர்வு பிரச்னையில் மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தலையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்," இந்தியாவில் இருந்து இரு ஜோடியை அனுப்பமுடியும் என்ற நிலையில் ஒரு ஜோடியை மட்டும் தேர்வு செய்தது ஏன்? ஒலிம்பிக்கில் சானியாவுடன் சேர்ந்து விளையாடுவது யார் என்ற கேள்விக்கு பதிலில்லை. பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற பூபதி-சானியா ஜோடியை ஏன் பிரிக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார். 

டிஸ்கி} இந்திய டென்னிஸ் சங்கம் இது குறித்து முறையாக அணுக வேண்டும். விருப்பமில்லா ஜோடிகளை அனுப்பி பதக்க வாய்ப்பை கோட்டை விடக்கூடாது. எனவே நல்ல தீர்வை காணவேண்டும்.

தகவல் உதவி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!