புகார் உண்டு! திகார் இல்லை! நான்ரசித்தசிரிப்புகள் 14

     நான் ரசித்த சிரிப்புக்கள்!

இது பொய் செய்தியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!
 ஏன்?
மின்சாரம் தாக்கி இருவர் பலின்னு போட்டுருக்காங்களே!
                      ராஜபாளையம் பேச்சி.

தன்னை அரெஸ்ட் பண்ண போதுமான ஆதாரம் இல்லைன்னதும் தலைவர் என்ன சொன்னார்?
புகார் உண்டு... திகார் இல்லைன்னு பஞ்ச் அடிக்கிறார்!
                           வீ.விஷ்ணுகுமார்

தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!
 என்ன சொன்னார்?
நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!
                            வீ.விஷ்ணுகுமார்.

உன் புருஷனுக்கு இஷ்ட தெய்வம் எதுடி?
எங்களுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து அவர் கும்பிடாத தெய்வம் இல்லை!
                      ஆர்.சி முத்துக்கண்ணு.

கோர்ட்டுக்கு ஆகும் செலவைக் கூட தலைவர் எப்படி எழுதறார் பார்!
என்ன எழுதியிருக்கிறார்?
நீதிக்கு தலைவணங்கிய வகைக்குனு எழுதி இருக்கிறார்!
                            அம்பை தேவா.

மன்னரின் திறமையை ஒரே வார்த்தையில் புகழ்ந்ததற்காக மன்னர் புலவரை சவுக்கால் அடிக்கிறாரே புலவர் அப்படி என்ன வார்த்தை சொல்லி புகழ்ந்தாராம்?
   “ஓடுகாலி!”
                      அம்பை தேவா.

தலைவருக்கு மப்பு அதிகமாயிருச்சுன்னு நினைக்கிறேன்!
 எப்படி சொல்றே?
டெங்கு காய்ச்சலை பரப்புகிற கொசுக்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டும்னு பேசி இருக்காரே!
                           க.சரவணகுமார்.

இது அரசியல்வாதி நடத்துற நர்சரி ஸ்கூல்னு எப்படி கண்டுபிடிச்சே?
அவர் நேஷன் இஸ் டொனேஷன்னு எழுதி போட்டு இருக்காங்களே!
                      அ. பேச்சியப்பன்.

தலைவர் குஷியா இருக்காரே என்ன விஷயம்?
வருங்கால ஆதினமே வருக வருக னு ஃப்ளெக்ஸ் வச்சிருந்தாங்களாமே!
                            பெ. பாண்டியன்
.
தலைவரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே!
எப்படி?
அரும்பாடு பட்டு கட்சியை வளர்த்தேன்.. எல்லாம் புழலுக்கு இரைத்த நீராய் போச்சேன்னு!
                  கிணத்துக்கடவு ரவி.
ஹீரோயின் மரியாதை கொடுத்ததுக்கா ஹீரோ கோபப்பட்டார்?
அங்கிள்னு கூப்பிட்டாங்களாம்!
                          அ.ரியாஸ்

டாக்டர் ஏன் கோபமா இருக்கார்?
அவர் ரூமுக்கு வெளியே யாரோ பேஷண்டுகள் பிறப்பது இல்லை! உருவாக்கப்படுகிறார்கள்னு எழுதி வைச்சிருக்காங்களாம்!

                            வீ.விஷ்ணுகுமார்.
ஏன்யா நில அபகரிப்புக்குக்கூடவா ஸ்கூல் காலேஜ் எல்லாம் லீவ் விடுவாங்க?
தலைவரே அதே பீதியிலே இருக்காதீங்க! அது நில அபகரிப்பு இல்லே நில அதிர்வு!
                        எம்.தஞ்சை தரன்.

நம்ம தலைவரை அப்பாவின்னு ஏன் சொல்றே?
2012ல உலகம் அழியப் போவுதுன்னு சொன்னா அப்ப 234 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமான்னு கேக்கறாரே!
                       பர்வீன் யூனுஸ்.

விதிமுறையை மீறி கட்டினதுக்காக உங்க மேல யார் புகார் கொடுத்தது?
என் ரெண்டாவது பொண்டாட்டியோட முதல் புருஷன்!
                                 அ.ரியாஸ்.

நன்றி ஆனந்த விகடன்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!