இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போர்ப்ஸ்

புதுடில்லி : போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியல் உள்ளிட்ட பட்டியல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது, இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 5ம் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் நிலவிவரும் அசாதாரணபொருளாதார ஸ்திரத்தன்மை, ரூபாயின் மதிப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடத்திலேயே இருக்கிறார். இவரது சொத்து மதிப்பில் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழந்திருந்த போதிலும், அவர் 22.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவரது சகோதர் அனில் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 6.9 பில்லியன் டாலர்களை இழந்ததோடு மட்டுமல்லாமல், பட்டியலில், 10ம் இடத்தில் இருந்த அவர் 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போதைய இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் லட்சுமி மிட்டல் 19.2 பில்லியன் டாலர்களோடு, பட்டியலில் 2ம் இடத்தி<லும், விப்ரோ நிறுவனர் அஜிம் பிரேம்ஜி 3ம் இடத்திலும் உள்ளனர். 9.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை கொண்டுள்ள சாவித்ரி ஜிண்டால், 5ம் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாது, இந்தியாவின் பணக்கார பெண்மணியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ராகுல் பாட்டியா, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட 14 புதிய முகங்கள் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ளனர். ராகுல் பாட்டியா 51வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில், இப்பட்டியலில் முன்னணி இடங்கள் வகித்த வினோத் கோயங்கா மற்றும் சாஹித் பால்வா உள்ளிட்டோர் தற்போது இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாஷித் பால்வா, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்வர் என்பது நினைவிருக்கலாம்

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2