Posts

Showing posts from October, 2011

சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

Image
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஏன் சீல்? முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத

என் இனிய பொன் நிலாவே! பகுதி 10

Image
என் இனிய பொன் நிலாவே!                    பகுதி 10                          ‘ப்ரியம்வதா’ முன்கதை சுருக்கம்} வேலைக்கு வந்த மதுமிதாவை விரும்புகிறான் அபிஷேக். ஆனால் அவனது முறைப்பெண் ஸ்வேதா அபிஷேக்கை மணம் புரிய ஆவலாக உள்ளாள். மதுமிதாவுடன் அவள் வாக்கு வாதம் செய்கையில் அங்கு வந்த அபிஷேக்கின் தாய் அவளை விரட்டுகிறாள். அதே சமயம் தான் யார் என்றும் கூறுகிறாள்.  என்னம்மா அப்படி முழிக்கிறே இந்த மனோ கம்ப்யூட்டர் சாப்ட் வேர்ஸின் உரிமையாளன் அபிஷேக்கின் அம்மாதான் நான்! இதுமட்டுமல்ல உன்னை என் மகன் விரும்புகிறான் அதில் எனக்கு எந்த தடையேதும் இல்லை என்பதாலும் தான் உன்னை மருமகள் என்று சொல்லாமல் என்னை மாமியார் என்று சொன்னேன். என்றார் அவர்.     இது என்ன சுத்த லூசு குடும்பமாக இருக்குமோ? என்று நினைத்து கொண்டாள் மதுமிதா! கல்யாணமே ஆகவில்லை! அட்லீஸ்ட் நிச்சயம் கூட ஆகவில்லை! மகன் விரும்புகிறான் அந்த பெண் விரும்புகிறாளா என்று கூடத் தெரியாது அப்படிப் பட்ட ஒரு பெண்ணிடம் நான் தான் உன் மாமியார் என்று ஜம்பம் அடிக்கிறார்களே இவர்களை என்ன வென்று சொல்வது? என்று அவள் நினைக்கையிலேயே அதை படித்தவள் போல பேசலானா

நான் ரசித்த சிரிப்புக்கள்! 5

Image
நான் ரசித்த சிரிப்புக்கள்! 5 1.சுப்பு நாங்க புது நாய் வாங்கி இருக்கோம் வந்து விளையாடி பார்க்கிறாயா?   கடிக்குமா?  அதை தெரிஞ்சுக்கத்தானே உன்னை கூப்பிடறேன்! 2.இந்தாங்க மருந்து சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு ஸ்பூன் சாப்பிடனும்!   எங்க வீட்டுல ரெண்டு ஸ்பூன் தான் இருக்கு டாக்டர்! 3.உன் சட்டையில ஓட்டை இருக்காடா?  ஊஹூம் கிடையவே கிடையாது!  அப்போ கழுத்து, கை எல்லாம் எப்படி நுழைக்கிறே? 4.அவன் மன்மதன் மாதிரி இருக்கான்னு சொன்னது தப்பா போச்சு!  ஏன்?  எப்போதும் கரும்பும் கையுமாவே அலைஞ்சுகிட்டு இருக்கான்! 5.எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?  நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!                         நன்றி சாவி வார இதழ்! 6.தீபாவளி கொண்டாடினதுக்கா உங்களை ஜெயில்ல போட்டுட்டாங்க எப்படி?   பட்டாசு கடைக்கு தீ வைச்சேன்!                           -சோனா 7.அவரு போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சாங்க? வயித்து வலிக்கு பாம்பு மாத்திரை கொடுத்தாராம்!                        -கார்வண்ணன் 8.சுவர் கடிகாரம் மேலேயிருந்து விழுந்ததுங்க எங்கம்மா மயிரிழையிலே உயிர் தப்பிச்சாங்க!    சனியன்

கேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்?: உண்மையை சொல்கிறார் பி.சி.சி.ஐ., செயலர்

Image
"வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டதால் தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை,''என, பி.சி.சி.ஐ., முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின். "பேட்டிங்கில்' எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், கேப்டனாக ஏமாற்றம் அளித்தார். கடந்த 1996ல் அணிக்கு தலைமையேற்ற இவர், 25 டெஸ்டில் 9 தோல்வியை சந்தித்தார். 73 ஒரு நாள் போட்டிகளில் 43ல் தோல்வியை தழுவினார். இதையடுத்து கேப்டன் பதவியை 2000ல் ராஜினாமா செய்தார். கேப்டனாக இவரது வீழ்ச்சிக்கான காரணம் குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜெயவந்த் லீயே கூறியிருப்பதாவது:  கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகிய போது, எனது கண்கள் குளமாகின. கேப்டனாக இருந்த காலத்தில், அவருடன் பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவரது பிரச்னையே யார் சொன்னாலும் கேட்பது தான். அமைதியான கு

தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!

Image
தனக்கு வந்தால் தெரியும்! கிருஷ்ணாவரம் என்ற சிற்றூரில் கோபு என்ற சிறுவன் வசித்து வந்தான். அந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்த அவனிடம் கெட்டபழக்கம் ஒன்று இருந்தது. நல்ல பழக்கங்கள் ஒருவனை உயர்த்திவைக்கும் மாறாக தீயபழக்கங்கள் ஒருவனிடம் குடி கொண்டால் அவனை வீழ்த்திவிடும் அல்லவா? ஆனால் நல்லவனான கோபுவிடம் எப்படியோ இந்த தீயபழக்கம் குடி கொண்டு விட்டது.     அந்த பழக்கம் எது என்று கேட்கிறீர்களா? மற்றவர்களின் உடைமைகளை ஒளித்து வைத்து அவர்கள் தேடும்போது மகிழ்ச்சி அடையும் குணம் தான் அந்த தீய குணம். மற்றவர்கள் பொருட்கள் காணாமல் தவிக்கும் போது துள்ளி குதிக்கும் அவனது உள்ளம். அவர்கள் படும் அவஸ்தைகளை ரசித்துவிட்டு சாவதானமாக பொருட்களை கண்டெடுப்பது போல நடித்து அவர்களிடம் ஒப்படைப்பான் கோபு. இது அவர்களுக்குத் தெரியாது பொருட்களை தேடித் தந்தமைக்கு பாராட்டிச் செல்வார்கள் பொருள் கிடைத்தவர்கள் உள்ளூர மகிழ்ந்துகொள்வான் அவன். இந்த விளையாட்டு விபரீதமானது என்று அவன் உணரவில்லை. அவனது நண்பன் மணி இந்த விளையாட்டை கண்டித்தான்.    அடப் போடா வாழ்க்கையில ஒரு த்ரில் வேணும்டா! நான் தான் பொருளை எடுத்துக்கிறது

தளிர் அண்ணா கவிதைகள்!

Image
உலகை வலம் வா பெண்ணே! பெண்ணே! உன்னைத் தெய்வமென்று சொன்னது தவறாகிவிட்டது! கல்லாக சமைந்து கிடக்கிறாயே? தெய்வமாக வாழ்ந்தது போதும் பெண்ணே! மனுஷியாக வாழக் கற்றுக்கொள்! மனதைத் திற! நீ நினைத்தால் நிழல்கூட சுடும்! நினைவில் வை! உன்னை நீ உணர்ந்துகொள்! உலகை வலம் வா! பெண்ணே! தடைகளைக் கண்டு தளராதே! எத்தனைதான் தடைகள் வந்தாலும் தளரவேண்டாம் தோழா! தட்டி தட்டி போகிறதே என வெட்டியாகத் திரியாதே! கட்டி கட்டிப் போடுகிறார்களே என்று கலங்கி நிற்காதே! முட்டி முட்டி மோதியே முட்டை குஞ்சு பொறிக்கிறது! கூட்டை விட்டு குளவி வர உடைத்து உடைத்து முயல்கிறது! உலகைக் காணும் ஆவலில் சிசுவும் உதைத்தே வெளியில் வருகிறது! தடையில்லா வாழ்வில்லை! தயங்கி நிற்காதே! தடைகளையே தடமாக்க கற்றுக்கொள்! தடைகள் நம்மை புடம் போடும் கலன்கள்! தடைக் கற்களை படிக்கற்களாக்கு! துடிப்போடு படி ஏறிவா! பாரதம் உன்னை வறவேற்கும்! பாரினுள் உன் புகழ் நிற்கும்! தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

சாதித்துக் காட்டினார் தோனி!:

Image
கோல்கட்டா: இந்திய கேப்டன் தோனி தொட்டதெல்லாம் மீண்டும் பொன்னாகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பட்டையை கிளப்பிய இவர், பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்தார். அணியை அருமையாக வழிநடத்திய இவர், இளம் வீரர்களுக்கு உரிய ஊக்கம் அளித்தார். இதன் காரணமாக சச்சின், சேவக், ஜாகிர் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி, தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது. சுழற்பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து அணியின் பலவீனம் மீண்டும் ஒருமுறை அம்பலமானது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதல் கட்டமாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று முன் தினம் கோல்கட்டாவில் நடந்த ஐந்தாவது போட்டியில் தோனியின்(75) அதிரடி கைகொடுக்க இந்திய அணி(271/8), இங்கிலாந்தை(176) மீண்டும் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர, இங்கிலாந்து மண்ணில் சமீபத்தில் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இம்முறை இந்திய அணியின் வெற்றிநடைக

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போர்ப்ஸ்

Image
புதுடில்லி : போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியல் உள்ளிட்ட பட்டியல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது, இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 5ம் இடம் பெற்றுள்ள சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் நிலவிவரும் அசாதாரணபொருளாதார ஸ்திரத்தன்மை, ரூபாயின் மதிப்பில் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட காரணங்களால், இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடத்திலேயே இருக்கிறார். இவரது சொத்து மதிப்பில் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழந்திருந்த போதிலும், அவர் 22.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அ

வயர்லெஸ் வசதியுன் புத்தம் புது இசட்டிஇ மொபைல்போன்

Image
இப்பொழுதெல்லாம் வெளியாகும் புதிய தொழில் நுட்பங்களை ஒவ்வொரு நிறுவனங்களும் விளக்கிக் கூறுகையில்தான் தெளிவாகப் புலப்படுகிறது. அந்த வசதிகள் அனைத்தும் அவ்வளவு நுணுக்கம் கொண்டதாக இருக்கின்றது. மெமோ என்ற மொபைலை இசட்டிஇ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மொபைலை 3ஜி வசதியுடன் பெற்றுக் கொள்ளலாம். இதனால் கிரிகெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏனென்றால் இதில் கிரிக்கெட் வயர்லெஸ் சேவையைப் பெறலாம். இது அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அதோடு இந்த மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதியினைப் பெற்றிருக்கிறது. இசட்டிஇ மெமோ மொபைல் குறைந்த விலை கொண்ட மொபைலாகும். ஆனால் இதனுடைய வடிவமைப்பைப் பார்த்தால் அதிக விலை கொண்ட மொபைல் என்றுதான் அனைவரையும் நினைக்க வைக்கும். 2.4 கியூவிஜிஏ கலர் திரை தொழில் நுட்பத்தைக் கொடுக்கும் இந்த மொபைல் 320 X 240 திரை துல்லியத்தையும் வழங்குகிறது. புகைப்படம் எடுக்கவும், வீடியோ ரெக்கார்டிங் போன்ற வசதிக்கும் இதில் 2 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கேம்கார்டர் வசதியினால் எம்பி3 ப்ளேயர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைப் பெற முடியும். இந்த மொபைல் மை

இன்று கொண்டாடுவோம் இனிதாய்...!

Image
இன்று கொண்டாடுவோம் இனிதாய்...! ஏற்றுவோம் தீபஒளியை!-பறை சாற்றுவோம் பாரதப்புகழை! கூற்றுவனாய்க் கலவரங்கள்! மாற்ற முடியா மனிதர்கள்! ஏற்றி விடப்படும் சா‘தீ’ தூற்றி விடப்படும் வதந்‘தீ’ அட்டையாய் ஒட்டிய லஞ்சப் பேய்! சட்டைக் கூட இல்லாத ஏழ்மை! பட்டங்கள் தராத வேலை! சட்டங்களில் உள்ள ஓட்டை! கற்க மறுக்கும் அறியாமை! நிற்க நிழலில்லா மனிதர்கள்! போகப் பொருளாய் பெண்மை! போக வழிதேடும் போதை! ஆண்டுக் கொருமுறை தேர்தல்! ஆண்டவன் பெயரால் சுரண்டல்! எங்கும் எதிலும் ஊழல்கள்! கங்குகரைக் காணா பூசல்கள்! இவைதான் இந்தியாவைப் பிடித்த இருள்கள்! பாரதத்தின் முதுகில் படிந்துவிட்ட கறைகள்! காலம் காலமாய் மறையாத் தழும்புகள்! விலகட்டும் இந்த இருள்கள்! பரவட்டும் புது ஒளிவெள்ளம்! இன்று கொண்டாடுவோம் இனிதாய் தீபாவளி! இந்த கவிதை 1998 தீபாவளியில் எழுதப்பட்டது எனது கையெழுத்துப் பத்திரிக்கையில். இன்றும் பொறுத்தமாக இருப்பதால் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்! நன்றி!

அத்திரிபாச்சா! அத்திரிபாச்சா!

Image
இந்த ஞாபகமறதி இருக்கே...அது மனுஷனை பாடாய் படுத்திடும்! ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று சொல்வதைப் போல. உலகத்திலேயே, தங்களை ஜாம்பவான்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் ஞாபக மறதிக்காரர்கள் தான். ஒரு மனுஷன் மாமியார் வீட்டுக்கு தலை தீபாவளிக்குப் போவதாக இருந்தான். கிளம்புகிற வேளையில், மனைவிக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம்... மருத்துவச்சியிடம் கூட்டிப் போனான். அவள் நாடி புடிச்சு பார்த்துட்டு, ""இது அது சாமியோவ்! புள்ளைய பத்திரமா பாத்துக்கோ! இப்போ பஸ்சுலே போகக் கூடாது!'' என்று எச்சரித்து அனுப்பினாள். மனைவி கர்ப்பமா இருக்கிறது ஒருபுறம் சந்தோஷம் தான் என்றாலும், தலை தீபாவளி சீர் வாங்குறதை விட முடியுமா என்ன! நான் மட்டும் போயிட்டு வரேன்னு அவன் கிளம்பிட்டான். மகள் கர்ப்பமாக இருக்கிற விபரத்தைக் கேட்டதும், அம்மாகாரிக்கு ஏக மகிழ்ச்சி. மருமகனுக்கு மோதிரம் போட்டா!! பலகாரங்களை அடுக்கித் தள்ளிட்டா! மாமியார் செஞ்ச ஸ்பெஷல் கொழுக்கட்டை ஒன்று இவன் மனதில் நின்று விட்டது. அவ்ளோ ருசி! ""என் மகள் என்னை விட, இதை நல்லா செய்வா,'' என்று சர்டிபிக

தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எது நல்ல நேரம்?

Image
சென்னை: நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எந்த நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்பது குறித்து ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் மிக முக்கியமானது. தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்வதற்கும் கூட நல்ல நேரம் பார்ப்பது அவசியம். வழக்கமாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நிறைய பார்க்க வேண்டும் என்பார்கள். இரவு நேரங்களில் குளிக்கக் கூடாது. சூரிய அஸ்தமனம், உதய காலங்கள், பிறப்பு நேரம், மரண நேரம் உள்ளிட்டவற்றிலும் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளக் கூடாது. சனி, புதன், திங்கள் ஆகிய கிழமைகளில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என பல சம்பிரதாயங்கள் உள்ளன. இருப்பினும் தீபாவளிக்கு இதிலிருந்து விதி விலக்கு உண்டு. காரணம், அன்றைய தினம் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது கங்கையில் குளிப்பதற்குச் சமம் என்பார்கள். அதனால்தான் இதற்கு கங்காஸ்னானம் என்று பெயர். இப்படிப்பட்ட தீபாவளிக் குளியலுக்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியம் இல்

நிலவே கலங்காதே!

Image
நிலவே கலங்காதே! விடிந்தாள் தீபாவளி. இது எனது தலை தீபாவளியாக இருந்திருக்க வேண்டும் ரத்னா மட்டும் சம்மதித்து இருந்தால். மனோகர் சற்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தான். அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை அந்த நினைவுகள் சற்றுக் கட்டிப் போட்டன.     ரத்னா அவனது அத்தை மகள் மனோகருக்கென்றே நிச்சயமானவள். அவளும் மனோகரை மிகவும் நேசித்தாள். எது வரை? வெளியூருக்கு கல்லூரி படிப்பிற்கு செல்லும் வரை! கல்லூரி படிப்பு அவளை மாற்ற்விட்டதா இல்லை மனோகரை அவளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை! இப்போதெல்லாம் அவள் மனோகரிடம் முகம் கொடுத்தும் பேசுவதில்லை!. மனோகரை மணக்கவும் மறுத்துவிட்டாள்.          சொல்லப் போனால் அவள் யாரையுமே மணக்க விரும்பவில்லை என்று கூறினாள். அவளின் கல்லூரி படிப்புக்கு அச்சாரம் போட்டதே மனோகர்தான்.அதுவே அவனுக்கு பாதகமாகிவிட்டது. மூன்று வருடங்கள் முன் அவளது அப்பா ஏன் மாப்ள? இந்த வருசத்தோட ஸ்கூல் படிப்பு முடியுது வர்ர ஆவணியில உனக்கும் ரத்னாவுக்கும் கல்லாணத்த முடிச்சிப் போடலாமுன்னு நினைக்கேன் நீ என்ன சொல்ற? என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். வெள்ளை மனதுக்காரர் அவர். சூது வாது தெரிய

ஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்

Image
மணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். வெட்பாலைப் பூக்கள் வெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும். புங்கைப்பூ நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன் மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடி செய்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு பசும்பால் குடிக்கவேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம். 48 நாட்கள் தொடர்ந்து அருந்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேக நோய் உள்ளவர்கள் புங்கைப்பூ பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும். சிற்றகத்திப்பூக்கள் சிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப

அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்!

Image
அறிந்ததும் அறியாததும்! பொது அறிவுத் தகவல்கள்! எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ. ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான  பத்திரிக்கை மும்பை சமாச்சார். இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர். ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட். உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள். உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அ