மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர்,

தேனி:மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி விட்ட சம்பவம், சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது.பயணிகள் படிப்பதற்காக அரசு பஸ்களில், உலக பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அவற்றை கண்டக்டர், டிரைவர்களும், படித்து அதன்படி நடக்க வேண்டும். பல நேரங்களில் பயணிகளிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறை மனதை காயப்படுத்துவதாக உள்ளது.

கன்னியாகுமரி- குமுளி அரசு பஸ், திருநெல்வேலியில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணிக்கு,மதுரை மாவட்டம் டி.கள்ளிப்பட்டி வந்தடைந்தது. அங்கு ஏறிய பயணி ஒருவர், தேனிக்கு டிக்கெட் எடுத்தார். கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்த போது, அது தவறி வெளியே விழுந்துவிட்டது.

கண்டக்டர் பயணியிடம் மீண்டும் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். வேறு பணம் இல்லாத அந்த பயணியோ, கொடுக்கும் போது தவறியதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்,என்றார். மனித நேயத்தை மறந்த அந்த கண்டக்டரோ, பயணியின் உடமைகளை எல்லாம் கீழே தூக்கி வீசிவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டார்.

டிஸ்கி   இப்படியும் சிலர் இருப்பதால் நல்ல ஊழியர்களும் கெட்டப் பெயர் வாங்க வேண்டி வருகிறது   இதை படித்ததும் எனக்கு ஏஜி கார்டினர் எழுதிய ஒரு சிறுகதை பழைய 11ம் வகுப்பு பாடநூலில் படித்தது ஞாபகத்திற்கு வந்தது அதிலும் இப்படித்தான் மனித நேயமில்லா நடத்துனர் ஒருவர் பயணிகளை இம்சிப்பார். விரைவில் அந்த கதையை எழுதுகிறேன்.

  நன்றி தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்கிட்டு பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2