Posts

Showing posts from August, 2011

அன்பை அருளும் ஆனைமுகத்தோன்

Image
விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர். எளிமையின் நாயகன் விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலி

கல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி

Image
கல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 27வது கிலோ மீட்டரில் காரனோடை பாலத்தை அடுத்திருப்பது பஞ்சேஷ்டி. பஞ்சேஷ்டிக்கு மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகு தலமான நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலம் குஸஸ்தலை நதிக்கும் ஆரண்ய நதிக்கும் இடையில் அமைந்த புண்யாரண்ய க்ஷேத்திரமாகும். முற்காலத்தில் நெல்லி மரங்கள் அடர்ந்து நெல்லிவனமாக இருந்த தலம் வாலி பூஜித்தமையால் வாலி வனம் என வழங்கப் பட்டது     இராஜராஜா சோழன் ஆட்சிக் காலத்தில் இது இகணைப்பாக்கம் என்று வழங்கப்பட்டது என்பது இவ்வூர் கிராம தேவதை கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் அறிகிறோம். இகணன் என்றால் பிரம்மன்.இவ்வாலயத்தில் உள்ள விநாயகரை பிரம்மன் வழிபட்டகாரணமாக இகணைப் பாக்கம் என்று பெயர் பெற்றது ஒரு ஊர் வளர்ச்சி அடையும் போது கிராம நத்தமாக அழைக்கப் படும் இடத்தில் குடியிருப்புகள் தோன்றும் அது அவ்வூரின் நத்தம் என்று வழங்கப்படும் அது போல இகணைப்பாக்கத்து வளர்ச்சியில் நத்தம் பெரும் பங்காற்றி மூலப் பெயரான இகணைப்பாக்கம் மறைந்து போனது.   தல வரலாறு| ஓம் எனும் பிரணவப்பொருள்   தெரியாததால் பி

நோன்புத் திருநாளின் பெருமைகள்

Image
ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஐவகை கடமைகள் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் இஸ்லாமியராக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(ரமலான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள். இறைதூதர் அளித்த நாள் முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை கேட்டபோது, பண்டைய காலம் தொட்டு விளையாடுவதற்காகவும். பொழுது போ

பேரறிவாளன், சாந்தன், முருகன் , கேஸ் ஒரு ஃபாலோஅப் ரிப்போர்ட்

Image
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர். வழக

ஃபால்ஸ் வாக்குறுதி! ஜோக்ஸ்

Image
“என் கணவருக்கு தொப்பை விழுந்துட்டுது..” “பார்த்தா அப்படித் தெரியலையே!” “ அதான் விழுந்துடுத்துன்னு சொல்றேனே எப்படித் தெரியும்?”            வி பார்த்தசாரதி நன்றி குமுதம் 3-12-98 “என்னங்க நம்ம பையன் வேலைக்காரியை இழுத்துகிட்டு ஓடிட்டான்” “அவனுக்காவது வாய்க்கு ருசியா சாப்பிடற பாக்கியம் கிடைக்கட்டும்!”                சந்தியூர் ஏ கோவிந்தன் நன்றி குமுதம் 7-1-99 “குற்றால அருவிகிட்ட கூட்டம் போட்டு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது தப்பா போச்சு!”   “ஏன்?” “ஃபால்ஸ் வாக்குறுதின்னு சொல்றாங்க!                    தஞ்சை தாமு நன்றி குமுதம் 7-1-99 “உங்க எதிர் வீட்டு கதவு மூடியே கிடக்கே!” “நான் தான் சொன்னேனே அந்த வீட்ல எல்லோரும் ‘மூடி டைப்’ னு!”                             இரா. ஆதி நன்றி குமுதம் 14-1-99 “நான் ‘எள்’ளுன்னா என் பையன் எண்ணையா நிப்பான்” “ அப்ப உங்க பையன் சொன்னபேச்சை கேக்க மாட்டான்னு சொல்லுங்க!” நன்றி குமுதம் 14-1-99 “லெட்டர் எழுதிட்டு பின்னால ஏன் கோடு போடுற?” “பின்கோடு போட்டாத்தான் லெட்டர் ஒழுங்கா போய் சேருமின்னாங்க!”                                பரத் “தலைவர் முதுகுல எதோ படை மாதிரி

பேரறிவாளன், சாந்தன், முருகன் மனுக்களை நாளையே விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்

Image
சென்னை: தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தமூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இதுதொடர்பான கடிதம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியது. அதில் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியிருந்தது. இதையடுத்து வேலூர் சிறை மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9ம் தேதி நாள் குறித்துள்ளது. மூவரையும் காக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்ங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில், மூன்று பேரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் மனுக்களை தாக்கல் செய்தார். அதில், எங்களது

மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர்,

Image
தேனி:மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி விட்ட சம்பவம், சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது.பயணிகள் படிப்பதற்காக அரசு பஸ்களில், உலக பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அவற்றை கண்டக்டர், டிரைவர்களும், படித்து அதன்படி நடக்க வேண்டும். பல நேரங்களில் பயணிகளிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறை மனதை காயப்படுத்துவதாக உள்ளது. கன்னியாகுமரி- குமுளி அரசு பஸ், திருநெல்வேலியில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணிக்கு,மதுரை மாவட்டம் டி.கள்ளிப்பட்டி வந்தடைந்தது. அங்கு ஏறிய பயணி ஒருவர், தேனிக்கு டிக்கெட் எடுத்தார். கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்த போது, அது தவறி வெளியே விழுந்துவிட்டது. கண்டக்டர் பயணியிடம் மீண்டும் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். வேறு பணம் இல்லாத அந்த பயணியோ, கொடுக்கும் போது தவறியதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்,என்றார். மனித நேயத்தை மறந்த அந்த கண்டக்டரோ, பயணியின் உடமைகளை எல்லாம் கீழே தூக்கி வீசிவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டார். டிஸ்கி   இப்படியும் சிலர் இருப்பதால் நல்ல ஊழியர்களும் கெட்டப் பெயர் வாங்க வேண்டி வருக

பன்னாட்டுப் பழமொழிகள்!

Image
பன்னாட்டுப் பழமொழிகள்! மனிதன் பதவியை அலங்கரிக்கிறான்.பதவி மனிதனை அலங்கரிப்பது இல்லை.           -இத்தாலி காரியங்கள் தாமாக நடப்பது இல்லை. நடக்கச் செய்ய வேண்டும்.                               -இங்கிலாந்து. தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் தேவையானதை நீ விற்பாய்.                               -செக்கோஸ்லாவாகியா வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சிலசமயம் இருட்டு சிலசமயம் முழுநிலவு.                      -போலந்து கடன் வாங்குவதின் அழகு அதை திருப்பிக் கொடுப்பதில் இருக்கிறது.                        -ரஷ்யா இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.                               -வேல்ஸ் உன் கவுரவம் உன்னுடைய நாக்கின் நுனியில் இருக்கிறது                                      ஹங்கேரி சுத்தமான காற்று வைத்தியனை ஏழை ஆக்குகிறது.                      -டென்மார்க் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களைபகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!  

ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர்

Image
ஈரோடு: நாடு முழுவதுமாக சில்லரை தட்டுப்பாட்டால், மக்கள் அவதியுறும் நிலையில், ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மாற்றித் தருவதன் மூலம், ஓரளவு சில்லரை தட்டுப்பாடு நீங்குகிறது. எனினும், வர்த்தக நிறுவனங்கள் முதல், பஸ், ரயில்கள் வரை, சில்லரை தட்டுப்பாடு பிரச்னை, பெரிய தகராறாக மாறி விடுகிறது. ஈரோடு கடைகளில், ஒரு ரூபாய் நாணயம் மொய் கவரின் உட்பகுதியில் ஒட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. திருமணம், காது குத்து, சீர் உள்ளிட்ட விசேஷங்களில் மொய் வைக்க, பணத்தை கவரில் வைத்து கொடுப்பது வழக்கம். பலரும், 101 ரூபாய், 201 ரூபாய், 501 ரூபாய்... என, எவ்வளவு தொகை வைத்தாலும், அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதுபோன்ற சமயங்களில், ஒரு ரூபாய் நாணயம் கிடைப்பது அரிதாகி விட்டதால், கவர் தயாரிப்பு நிறுவனங்களே, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, கவரை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளன. ஸ்டேஷனரி,பேன்சி, கிப்ட் விற்பனை கடைகளில், இத்தகைய கவர் விற்கப்படுகிறது. ஈரோடு கடைக்காரர் கூறியதாவது: பொதுமக்கள் வசத

வைரத்தால் ஆன புதிய கிரகம்! விஞ்சானிகள் கண்டு பிடிப்பு

Image
சிட்னி: வைரத்தால் ஆன ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மாபெரும் நட்சத்திரங்கள் தங்களது எரி சக்தி அனைத்தையும் இழந்து, சுருங்கும்போது பல்ஸார்கள் எனப்படும் ஒலியை வெளிப்படுத்தும் சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த பல்ஸார்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். சில நேரங்களில் கிரகங்களுடன் கூடிய சில பல்ஸார்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் விண்வெளி ஆய்வு மையத்தை் சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய பல்ஸார் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு PSR J1719-1438 என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த பல்ஸார் நட்சத்திரத்தைச் ஒரு கிரகமும் சுற்றி வருகிறது. இது போன்ற கிரகங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியத்தால் ஆனவையாக வெறும் வாயு கிரகங்களாக இருக்கும். ஆனால், இந்த கிரகம் கார்பன், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அழுத்தமும், நிறையும் நினைக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள கார்பன் இறுகி வைரம்

என் இனிய பொன் நிலாவே! பகுதி 1

Image
என் இனிய பொன் நிலாவே! “ப்ரியம்வதா” பகுதி 1 அந்த அதிகாலை வேலையில் குளித்து விட்டு தலையில் துண்டோடு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவளை அப்பொழுதுதான் படுக்கையில் இருந்து எழுந்த மதுமிதா, அம்மா காபி! என்று குரல் கொடுத்தாள்.     கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்மணி தலையை நிமிரவிம் கூடச் செய்யாமல் கோலத்தில் மும்முரமாக இருக்க அம்மா! காபி கேட்டேன் என்று இரண்டாவது முறையாக குரல் கொடுத்தாள் மதுமிதா.     ஏண்டி மணி என்ன இப்ப அஞ்சறை தான் ஆகுது! பல் கூட தேய்க்காம தலைவிரி கோலமா வந்து நின்னு காபி கேக்கறியா?பால் இன்னும் வரலை. வந்தப்புறம் தான் காபி கீபியெல்லாம் முதல்ல போய் பல்லை தேய்! என்றாள் மதுமிதாவின் தாய் அன்ன பூரணி.   “போம்மா காலம் கார்த்தால பல்ல தேச்சிகிட்டு! முதல்ல காபி அப்புறம் ஹாயா பேப்பர் படிச்சிட்டு நிதானமா குளிக்கிறப்ப பல்லு தேய்க்க கூடாதா?” சும்மா அதிகாரம் பண்ணாதம்மா! போ போய் காபி கலந்துவா இதோ பால் வந்துடுச்சு பார் என்றாள் வாசலில் வந்து நிற்கும் பால்காரணை காட்டிய மதுமிதா.     “எத்தனை நாளைக்கு நீ இன்னும் இப்படி பல் தேய்க்காத காபி குடிக்க போறேன்னு நானும் தான் பாக்கறேன்” என்று முகத்தை நொட

சரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்!

Image
ஊமைப் படமாக இருந்த காலத்திலும் சரி, பேசும் படமாக அது பரிணமித்த கட்டத்திலும் சரி... தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன. தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன. ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய்விட்டன. ஆனால் 2000-க்குப் பிறகு மீண்டும் சரித்திரப் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் பழைய காலத்தைப் போலல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் நம்பகத் தன்மை, பிரமாண்டம் அனைத்தும் கலந்த வகையில் இந்தப் படங்கள் வந்தன. இந்தி, தெலுங்கிலும் இந்த நிலைதான் நீடித்தது. தெலுங்கில் மகாதீரா வெற்றிக்குப் பிறகு பல படங்கள் அதே பாணியில் தயாராகின்றன. தெலுங்கில் ராமாயணம் ஸ்ரீராம ராஜ்யமாக பிரமாண்டமாகத் தயாராகிறது. தமிழில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பெற்ற வெற

விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு!

Image
டெல்லி: இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன. ஆனால் இவை அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மை கொண்டதாக உள்ளன. இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இந்த பாலிமர் (ப்ளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது. முதல் கட்டமாக சோதனை ரீதியில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை

ஓகோ! ஓமம்!

Image
ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது . இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும் . இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும் . நல்ல மணமாக இருக்கும் . இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது . மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது . இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது . ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் ஓமத்தில் , கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து , கரோட்டின் , தையாமின் , ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன . ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன . ஓமம் , குரோசாணி ஓமம் , அசம்தா ஓமம் ஆகும் . மருத்துவ குணம் கொண்ட ஒமம் இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது . வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது . கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது . கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது . ஜீரணத்தையும் வயிற்று உப்புச