பொய் முகம்!

 பொய் முகம்! சிறுகதை

 விடிந்தால் தீபாவளி தெருவெங்கும் பட்டாசு சத்தங்கள் ஒரே ஆர்பாட்டங்கள் வளைகுடா போர் சத்தங்கள் போல பட்டாசுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. நானும் என் வீரத்தை காட்ட பட்டாசு கட்டுக்களோடு வெளியே வந்ததும் எதிர் வீட்டு வாசலில் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த அபிநயா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.
  அபிநயா! இன்றைய சினிமா நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அழகில் இருந்தாள் நல்ல வேளை இன்னும் எந்த டைரக்டரும் அவளைப் பார்க்க வில்லை பார்த்திருந்தால் தமிழக ரசிகர்கள் அவளுக்கு இந்நேரம் கோயில் கட்டியிருப்பார்கள்.
புத்தம் புது ஆஷிகா சாரியில் தனது உடலின் அழகான பிரதேசங்களை மறைத்திருந்தாள் அபிநயா இருந்தும் அவை கண்ணாமூச்சி காட்டின. அந்த அரையிருட்டிலும் அவள் முகம் முழுநிலவாய் பிரகாசித்தது.அவளைக் கண்டதும் என் உற்சாகம் கரை புரண்டது. அவள் என் வருங்கால மணைவியாகப் போகிறவள். என் வர்ணணையில் மயங்கி அவளுக்கு அப்ளிகேஷன் போட நினைத்தவர்கள் என்னை திட்டாதீர்கள்.
   அவள் எங்கள் எதிர் வீட்டில் இருப்பதால் எங்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வீட்டிற்கும் தெரிந்து விட்டது. அடுத்த மாதம் கல்யாணம் இந்த மாதமே அவளோடு தலை தீபாவளி கொண்டாட வேண்டியது ஆனால் நாள் சரியில்லை என்று தட்டிக் கழித்துவிட்டனர் பெரிசுகள். அதனால் தான் நான் இங்கும் அவள் அங்குமாய் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறோம்.
  அவள் கன்முன்னே என் ஹீரோத் தனத்தினை காட்ட சிறிய குருவி வெடி ஒன்றை கையால் கொளுத்திப் போட அவள் காதைப் பொத்திக்கொண்டு ரசிக்க என் உற்சாகம் அதிகமானதுபெரிய வெடி ஒன்றை கையால் கொளுத்த அவள் வேண்டாம் வேண்டாம் என சைகை காட்ட நான் மேலும் உற்சாகமாகி கொளுத்திப் போட்டேன்.
  உள்ளே ஓடியவள் ஒரு பெரிய புஸ்வானத்தோடு வந்தாள் அதை கொளுத்த முனைய நான் வெடிகளை வெடிக்க ஆரம்பித்தேன், அப்பொழுது ‘ஆ’ என்ற அலறல். கத்தியது அபிநயாதான். முகத்தை மூடிக்கொண்டு துடித்து கொண்டிருந்தாள் நான் ஓடினேன். ‘எ.. என்னாச்சு அபி? கையை விலக்கினேன். முகம் பூராவும் தீக்காயங்கள்!
  அவள் பெற்றோர் ஓடி வந்தனர். பாவி மகளே அடுத்த மாசம் கல்யாணம் இப்படி பண்ணி புட்டியே?
  முதல்ல ஆச்பிடலுக்கு கொண்டு போகலாம் நான் கூற ஆட்டோ ஒன்றில் ஏற்றினோம் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தோம்.இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. அபிநயாவின் முகத்தினைப் பார்த்து. முகம் முழுதும் பேண்டேஜ் கட்டுக்களோடு காட்சி அளித்தாள் அவள். ‘அபி’ குரல் கொடுத்தேன். அவளது கண்கள் கூட கட்டுக்களால் மறைக்கப்பட்டிருக்க ‘சதிஷ்..நான்’ அவளது குரல் அழுகையால் அடைபட்டது. ‘அழாதே அபி உனக்கு ஒண்ணும் ஆகலை. சின்ன காயம் தான் கவலைப்படாதே !’ மேலுக்குக் கூறினேன்.
   ‘இல்ல சதிஷ் என் முகம் பூரா புண்கள்,கண்கள் பயங்கரமா எரியுது.வலி உயிர் போகுது. புண் ஆறினாலும் நான் பழைய அபிநயாவா மாறுவனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு’
  அப்பொழுது டாக்டர் உள்ளே நுழைந்தார். ‘ஐயம் சதிஷ் அபிநயாவோட வருங்காலக் கணவன்’ என்றேன்.
‘கிளாட் டூ மீட் யூ மிஸ்டர் சதிஷ்’ அபிநயா இப்ப நீங்க தைரியமா இருக்கணும் கலங்க கூடாது. மிஸ்டர் சதிஷ் போகும் போது என்னை வந்து பாத்துட்டு போறீங்களா?”
  “வித்பிளஷர்”
டாக்டரை சந்தித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தார். ‘மிஸ்டர் சதீஷ் சொல்றதுக்கு எனக்கு சங்கடமாத்தான் இருக்கு பட் நான் டாக்டர் உண்மையை சொல்லிதான் ஆகனும்’
  ‘என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்’
‘நீங்க இதை எப்படி ஃபேஸ் பண்ணப்போறீங்கண்ணு தெரியலை. எனிவே நான் சொல்லிடறேன். அபிநயாவோட முகம் பழையபடி திரும்பாது. முகத்தில் ஆங்காங்கே சில தழும்புகள் தீப்புண்ணால ஏற்பட்டிருக்கு இதை மொத்தமா கியுர் பண்ண முடியாது. மொத்தத்துல அபிநயா இனி பழைய முகத்த அடைய வழி இல்லை. அந்த அளவுக்கு அவமுகம் பாதிப்பு அடைஞ்சிருக்கு!’
  ‘சார் அதிர்ச்சியானேன்!’
  “பிளாஸ்டிக் சர்ஜரி ஏதாவது பண்ணி அவ முகத்த பழைய படி சீராக்க முடியாதா டாக்டர்?”
  “ பண்ணலாம் மிஸ்டர் சதிஷ் ஆனா அப்பவும் பழைய முகம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அதெல்லாம் சினிமாவுல வேணா சாத்தியமாகும் நிஜத்தில இல்ல அதுக்கு நிறைய பணமும் காலமும் செலவாகும் ஒவ்வொரு பகுதியாத்தான் சீரமைக்க முடியும்”
  “நீங்க விரும்பினா அதை செய்யலாம் ஆனா அதுக்கு நீங்க ஏகப்பட்ட பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் நல்ல வேளை அவளோட கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல அதை நினைச்சு நாம சந்தோஷப்படனும்.”
   வேரற்ற மரமாய் வெளியே வந்தேன். நிலவு முகம் என்று வர்ணித்த என்னால் அவளின் தீத்தழும்பு கொண்ட முகத்தை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
  வீட்டிற்குள் நுழைந்தேன். அம்மா ஓடி வந்தாள். ‘எப்படிடா இருக்கா?’
சொன்னேன். டாக்டர் சொன்னது முழுவதையும். ‘நல்ல வேளைடா நீ தப்பிச்ச தாலி கட்டறதுக்கு முந்தி நடந்துடுச்சி இல்லேனா வாழ்நாள் முழுக்க அகோரியை கட்டிட்டு இல்ல அல்லாடனும்’ என்றாள்.
அப்பாவோ பாவம்டா அந்த பொண்ணு நல்ல அழகான முகம் நம்ம மருமகளா வருவான்னு நினைச்சேன் நமக்கு கொடுப்பினை இல்ல ம்... என்று இழுத்தார்.
  நான் யோசித்தேன். முகம் கறுத்துவிட்டதே என்று அவளை வெறுத்து ஒதுக்குவதா? இல்லை பெற்றோரை எதிர்த்து அவளை திருமணம் செய்து கொள்வதா? அப்படி திருமணம் செய்து கொண்டால் முக அழகு இல்லாத அவளுடன் எப்படி வெளியில் சென்று வர முடியும்? எத்தனை பேர் கேலி செய்வார்கள் ஆம் பெற்றோர் சொல்வதுதான் சரி அவளை மணக்க கூடாது நாசூக்காய் மறுத்து விட வேண்டும்.
  இரண்டு நாட்கள் மருத்துவமணை பக்கம் போகவில்லை. அன்று போனபோது அபிநயா முகத்தில் பேண்டேஜ் அவிழ்க்க பட்டு முகத்தில் ஆங்காங்கே தழும்புகளோடு வரவேற்றாள். ‘என்ன சதிஷ் ரெண்டு நாளாய் ஆளையே காணோம் என்ன விஷயம் ?’ என்றாள்.
   அ.. அது முகத்தை தாழ்த்திக் கொண்டேன்.
‘என்ன சதிஷ் என் தீப்பட்ட முகத்த பாக்க முடியலையா? தலைய குனிஞ்சுக்கிறீங்க?’
  ‘இ.. இல்ல..’
 ‘உண்மையை சொல்லுங்க சதிஷ் உங்க அப்பாவும் அம்மாவும் என்னை வருங்கால மருமகள் பதவியிலிருந்து தூக்கி எறிஞ்சிட்டாங்க தானே!’  திடுக்கிட்டேன்.
‘என்ன சதிஷ் பேச்சையே காணோம்?’
‘ எ.. என்னை ..!’
  ‘மன்னிச்சிடுன்னு சொல்ல போறிங்களா? இந்த டயலாக்க நான் நிறையதடவை சினிமாவுல கேட்டு அலுத்துட்டேன் வேற புதுசா ஏதாவது சொல்லுங்களேன்.’
‘அ.. அபிநயா! உனக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சிக் கூட பார்க்கல என்னால எதுவும் பண்ண முடியலை!.. எங்க அப்பா அம்மா பேச்சை மீறி என்னால நடக்க முடியாது!. அப்படியே மீறினாலும் உன் இந்த கோரமான முகம்! இந்த முகத்தோட நான் குடித்தனம் நடத்த விரும்பலை! ஐயம் சாரி அபிநயா!”

“அப்ப என்னோட முகத்த பாத்துதான் என்னை காதலிச்சிருக்கீங்க! மனசைபாக்கலை! இதுவே கல்யாணத்துக்கு அப்புறமா நடந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? விலக்கித் தானே வைப்பீங்க? இந்த விபத்து உங்களுக்கு நடந்திருந்தா கொஞ்சம் யோசிச்சு பாருங்க!” நான் விலக்கியிருந்தா என்னல்லாம் சொல்லியிருப்பீங்க எல்லாம் நல்லதுக்குத்தான். உங்கள் சுயரூபம் வெளிப்பட்டுடுச்சு கடவுளுக்கு நன்றி!
  “பை த பை மிஸ்டர் சதிஷ்! நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா? எனக்கு முகத்தில ஒரு புண்ணும் இல்ல தீக்காயமும் படலை! எல்லாம் ஒரு நடிப்பு தான் தீடிர்னு நீங்க பெண்கேட்டு வரவும் என் அழகையே புகழவும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்க எப்படி பட்டவர்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். அதுக்கு டாக்டரும் என்னோட அப்பா அம்மாவும் உதவி செஞ்சாங்க!”
‘நான் போட்டிட்டிருக்கறது சைலாஸ்டிக் ஜெல்லால் ஆன ஒரு பொய் முகம்! உங்களி போன்றவர்களோட உண்மையான முகத்தை பார்க்கிறதுக்கு எனக்கு இந்த பொய் முகம் தேவைப்பட்டது. என்றுஅவள் அந்த பொய் முகத்தை உருவ அவளது அழகிய முகத்தின் முன் இருளாகி நின்றேன் நான்.

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இட்டு செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!