Posts

Showing posts from July, 2011

நித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்

Image
சென்னை : இந்து மதத்தையும் , தர்மத்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நித்தியானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அப்போது ஞானசம்பந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில் , இந்து மதத்தையும் , இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார் . குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார் . நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும் . இந்து மக்கள் கட்சிக்கும் , இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா . கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார் . நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும் . பெங்

ஜெயலலிதாவுடன் இணைந்து குரல் கொடுப்போம்! வைகோ!

Image
திருநெல்வேலி : மத்திய அரசின் புதிய அணை மசோதாவை எதிர்த்து அனைத்து கட்சிகளு்ம் போராட வேண்டும் . இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுப்பியுள்ள குரலுடன் இணைந்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார் . நெல்லையில் வரும் செப்டம்பர் 15 ம் தேதி மதிமுக தென்மண்டல மாநாடு நடக்க உள்ளது . இது தொடர்பாக நெல்லை புறநகர் , மாநகர் , விருதுநகர் , தூத்துக்குடி , குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை , நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது . கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது , சென்னை அல்லாத வெளியூரில் முதல் முறையாக நெல்லையில் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்ப்ட்டது . அப்போது திமுகவுக்கு புதிய உந்துதல் கிடைத்தது . அதுபோல் தென்மண்டல மாநாடு மதிமுகவுக்கு உந்துதல் தரும் . சூழ்நிலைக்கு தகுந்தவாறு வேஷம் போடும் பழக்கம் மதிமுகவுக்கு கிடையாது . மதிமுக , தமிழுக்கும் , தமிழக மக்களுக்கும் போராடி வருகிறது . ஆனால்