ப்ளிஸ் சிரிச்சுடுங்க!

ப்ளிஸ் சிரிச்சுடுங்க!

முதலாளி: தோட்டத்து செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டியா?
வேலையாள்: ஐயா நல்லா மழை பெய்யுது!
முதலாளி: அதனாலென்ன குடை பிடிச்சிகிட்டு தண்ணி ஊத்துடா மடையா!

டிரைவர் இவ்வளவு வேகமா காரை ஓட்டாதே பயமாயிருக்கு!

பயப்படாதீங்க ஐயா, என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்!

ஒரு கடிதத்தின் கடைசி வரி: இந்த கடிதம் உனக்கு கிடைக்காவிட்டால் எனக்கு மடல் எழுது.

அதோ அவர் சாப்பிடறாரே மைசூர்பாகு அதைக் கொண்டா!
 
அவர் பாதி சாப்பிட்டுட்டாரே சார்!

என்னைத் தவிர எந்த கழுதையாவது உன்னை பெண் பார்க்க வந்ததுண்டா?

உங்களோட உங்கப்பா வந்தாரே மறந்துபோச்சா!

நம்ம கார் டிரைவரை உடனே வேலைய விட்டு நீக்குங்க!

ஏன் என்னாச்சு?

இதுவரைக்கும் ஒரு நாலுதடவையாவது எது மேலயாவது மோதி என்னைக் கொல்ல பார்த்தான்.
 
அவனுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தந்து பார்ப்போமே!

நான் அவமானப் படறதுக்காக இங்க வரலை!

வழக்கமா அதுக்கு எங்க போவிங்க?

இருட்டுல பல்பை போட்டா என்ன ஆகும்?

வெளிச்சம் வரும்.

இல்ல உடைஞ்சு கால்ல குத்திக்கும்

பல் வலிக்கிறது இது என்ன பெயரெச்சம்?
தெரியலையே
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்!

நம்ம தலைவர் விவரம் புரியாத அப்பாவியா இருக்காரே!
எப்படி?
செண்ட்ரல் கைவிட்டு போயிடுச்சுங்க சொன்னா போகட்டும் எக்மோரையாவது பத்திரமா பார்த்துக்குங்கனு சொல்றாரே!

ஸ்கூல் நடத்துறீங்கலாமே எப்படி நடக்குது!
ஃபீஸ்ஃபுல்லா இருக்கு!
  
பல்வேறு இதழ்களிலிருந்து தொகுப்பு
தங்கள் வருகைக்கு நன்றி!. பிடித்திருந்தால் கமெண்டலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே !

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!