Posts

Showing posts from April, 2011

சிவவழிபாடு.

Image
சிவவழிபாடு. கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும் தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலைவைத்து வணங்க வேண்டும். கால் நீட்டும் பின்புறத்தில் எந்த சன்னதியும் இருக்க கூடாது. கொடிமரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எந்த தெய்வ சன்னதியும் இருக்காது அதனால்தான் இங்கு மட்டுமே விழுந்து வண்ங்க வேண்டும் என்று முன்னோர்கள் விதித்துள்ளனர். அபிஷேக காலத்தில் கோயில் உட் பிரகாரத்தில் வலம் வரக்க்கூடாது ஆலய ஆகம விதிப்படி சிவன்கோயிலில் மூலவருக்கும் எதிரில் உள்ள நந்திக்கும் இடையே உள்ள இடத்தில் விழுந்து வணங்க கூடாது. நந்தி மூக்கினால் வரும் சுவாசக்காற்று மூலவருக்குப்போய் அவருக்கு நிலை தருவதாக ஐதீகம். இதனால் குறுக்கே செல்வதும் வணங்குவதும் கூடாது என்பார்கள். சிவன் கோயிலிக்கு செல்பவர்கள் கோயிலிலிருந்து வெளியே வரும்போது கோயில் வாயிலில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டுதான் வர வேண்டும். அதே போல் வீட்டிற்கு வந்தவுடன் கால் அலம்பக்கூடாது. சிறிது நேரம் கழித்துதான் கை கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நைவேத்தியம் செய்யும்போது தரிசனம் செய்தல் கூடாது. அவ்வாறு செய்த

நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர்.

Image
நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் அம்பிகை ஆனந்த வல்லியை (ராகு) சர்ப்ப வடிவில் தீண்டியதால் ஏற்பட்ட விஷத்தை ஏற்றுக்கொண்டதால் சிவலிங்கம் கருமையாக உள்ளது. மேலும் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமும் கருமை நிறம் கொண்ட லிங்கம் எனவும் கொள்ளலாம்.      வானர அரசன் வாலியின் ப்ரம்மஹஸ்தி தோஷம் இச்சிவனை வழிபட்டதால் நீங்கியது. ஒரு சமயம் வாலி இலங்கை வேந்தன் இராவணனோடு போரிட்டு வென்றான் பின்பு அவனை தம் வாலில் கட்டி காடு மேடு மலைகளில் இழுத்து சமுத்திரத்தில் மூழ்கடித்து பலவாறு துன்புறுத்தினான். இராவணன் அரக்கன் ஆனாலும் விஸ்ரவசு என்னும் ரிஷியின் புத்திரன். மேலும் பிரம்மனின் பேரன். எனவே அவனைதுன்புறுத்திய வாலிக்கு பிரம்மஹஸ்தி தோஷம் பிடிக்கிறது. வாலி ப்ரம்மாவை நாடி தோஷம் நீங்க உபாயம் கேட்கிறான். பிரம்மன் வாலியை புண்யாரண்ய நெல்லி வனத்தில் உறையும் அகோர (கருமைநிற) சிவனை வழிபட்டால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும் என்று அனுப்பி வைக்கிறார்.            வாலி நெல்லி வனம் வந்து வற்றாத கங்கைநீர் சுனையில் நீராடி செவ்வல்லி தாமரை தடாகத்தில் தீர்த்தமெடுத்துஈஸ்வரனை அபிஷேகித்து தாமரை அல்லி மலர்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசன் வ

சிரிக்க வைத்த சிரிப்புகள்!

Image
சிரிக்க வைத்த சிரிப்புகள்! # தலைவரே பசுமை புரட்சிக்கு எதிரா அரசு செயல்படுது!     சும்மா இருப்பா கஞ்சா தோட்டம் போட்டா கவர்மெண்ட் சும்மா இருக்குமா?        சி.பி செந்தில் குமார் சென்னிமலை. # அப்பா நான் ஒருத்தரை காதலிக்கிறேன்!    பையன் என்ன பண்றான்?   வயித்துல எட்டி எட்டி உதைக்கிறான்பா!                      ஜே.வடிவேல் # FM ரேடியோவில வேலைக்கு சேர்ந்தது தப்புன்னு நினைக்கிறேன்.   ஏண்டா?   சம்பள பாக்கிய கேட்டா கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு சொல்றாங்க!             எம்.பி கருணாகரன். # டேய் நான் ஒருபொண்ண காதலிச்சேன் அவளுக்காக                உயிரையே கொடுத்தேண்டா!   அப்புறம்!   அப்புறமென்ன... கலைச்சிட்டா!                 ஜே.வடிவேல் # வாய் ரொம்ப நாறுது டாக்டர்!    எவ்வளவு நாளா? உங்க வாய் பத்தி உங்களுக்குத்தானே தெரியும் டாக்டர்?              சாயம் வெ. ராஜாராமன். # சக்கரை வியாதி வந்ததுலேர்ந்து வீட்டுல என்னை தெய்வமா மதிக்கிறாங்க! அடடே எப்படி! ஸ்வீட் செஞ்சா எனக்கு சும்மா காமிச்சுட்டு மத்தவங்களே சாப்பிடறாங்க!       வி.சாரதி டேச்சு

உடல் நலம்

Image
ஆமாம் நீங்க நலமா?                    மருத்துவ குறிப்புகள் @ பற்களில் இரத்தக்கசிவா? இதற்கு சீரகம்,கடுக்காய், உப்பு மூன்றையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை இடித்து தூளாக்கி தினமும் இரண்டுவேளை பல் துலக்கி வந்தால் இரத்த கசிவு நிற்கும். @ உங்களுக்கு வயிற்றுப்புண்ணா? அப்படியெனில் காப்பி டீ குடிப்பதை நிறுத்துங்கள். நுரை வரும் பாணங்கள் உணவுக்குழாயில் சுழற்சியை நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது எனவே காப்பி டீ கோலா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. @ தலைக்கு அதிக உயரமான தலையணைகள் வைத்துப்படுப்பதால் நீண்டகால சளித்தொல்லைக்கு ஆளாக நேரிடும்.மேலும் தலைச்சுற்றல் பிடரிவலி போன்றவையும் ஏற்படலாம். சமதரையில் தலைவைத்துப்படுப்பதே நல்லது. @ தொண்டைப்புண்ணா? மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவைத்த நீரை வாயில் ஊற்றிக்கொண்டு தொண்டையில் படும்படி சற்று நேரம் வைத்திருந்து பிறகு கொப்பளித்து விடவும் சில வேளைகள் செய்து வர தொண்டைப்புண் பொயே பொயிந்தி! @ நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைசாற்றுடன்    இஞ்சிச்சாறு கலந்து கொடுக்கலாம். @ ஜலதோஷம் உள்ளவர்கள் எலுமிச்சைச் சாறு அருந்தலாமா? தாராளமாக! சாப்பி

அறிந்து கொள்வோம்!

Image
கண்ணதாசனுக்கு பிடித்த மதம் சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவிஞர் கண்ண தாசனை அழைத்திருந்தார்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரம் ஆகியும் கவிஞர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழ்ந்து சலசலத்தது.அந்நிலையில் கவிஞர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்.சிலருக்கு கிறிஸ்துவமதம் பிடிக்கும் எனக்கோ தாமதம் பிடிக்கும் என்று சொல்லி நிறுத்தினார். மக்கள் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.     வந்தது எப்படி? ஐரோப்பாவில் உள்ளது செங்கடல் இந்த பெயர் வந்தது எப்படி? செங்கடல் நீர் சிவப்பாக இருக்காது. “எடாம்” என்ற மலையின் நிழல் இந்த கடல் நீரில் தெரிகிறது.ஹீப்ரு மொழியில் “எடாம்” என்றால் சிவப்பு என்று அர்த்தம் ஆகவே இக்கடல் செங்கடல் என அழைக்கப்படுகிறது. ஆச்சர்யம் ஆனால் உண்மை மனிதன் சிந்திக்கும் வேகம் னிமிடத்திற்கு 500 சொற்கள். பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் நமக்கு நன்கு தெரியும் பாட்டி வடை சுடும் கதைக்கு மூல ஆசிரியர் ரஷ்யாவைச் சேர்ந்த ஐவன் கிரைலாவ் மர குதிரை! முதன் முதலில் சைக்கிள் 1818ல

மறைவாக ஒரு காரியம்!

Image
மறைவாக ஒரு காரியம் நான் “அந்த” காரியம் செய்யப்போகிறேன் என்றதும் எனது இதயம் 60கிமீ வேகத்தில் “படபட”வென்று அடித்துக்கொண்டிருந்தது. எனக்கு பயம்தான் நான் இதுவரை அதெல்லாம் செய்ததும் இல்லை.ஆனால் நண்பன் சிவாதான் கட்டாயப்படுத்தினான்.     “டேய் குமார் வாழ்க்கையில் ஒரு ‘த்ரில்’ வேணும்டா எங்களைப்பாரு நாங்க என்ன கெட்டாப் போயிடும். இதுக்கூட கத்துக்கலன்னா அப்புறம் நீ என்னடா ஆம்பள போ போயி புடவை கட்டிக்கோ போ என்று உசுப்பேத்திவிட என் ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது.       என்னையா பொட்டைன்னு சொல்ற நான் ஆம்பளடா நீ என்னா சொன்னாலும் சரிடா நான் ரெடிடா! என்றேன்.     அப்படி போடு மச்சி சாயாங்காலம் குளக்கரைக்கு வந்துடு அங்கதான் வசதியா இருக்கும் என்றவன் போய்விட்டான்.     நான் அக்கம் பக்கம் யாராவது பார்த்துவிடப்போகிறார்கள் என்று பயந்தபடியே இப்போது குளக்கரையில் அமர்ந்திருக்க எனது இதயம் படபடத்தது.எனக்கு வேணும் மனசுக்குள் முனகினேன். “டேய் குமார் வந்துட்டியா ?” முதல்ல சட்டைய கழட்டு” சிவா குரல் விடுத்தான். “டேய் வேண்டாம்டா! பயம்மாயிருக்குடா” “ஏய் ஆரம்பிச்சுட்டியா புராணத்தை கழட்டுடா மரியாதையா!”. சட்டையை கழட்ட “ம் லுங்க

PM Sonia pay homage to Sri sathya sai baba | சாய்பாபாவுக்கு பிரதமர், சோனியா அஞ்சலி: இன்று காலை 9.30க்கு பாபா உடல் அடக்கம் Dinamalar

PM Sonia pay homage to Sri sathya sai baba | சாய்பாபாவுக்கு பிரதமர், சோனியா அஞ்சலி: இன்று காலை 9.30க்கு பாபா உடல் அடக்கம் Dinamalar

கவிதைத் தேன்!

Image
வாழைமரம் கற்றதா? கனி கொடுக்க மறந்ததா? சோலைவனம் கற்றதா? நிழல் கொடுக்க மறந்ததா? பசுவும் கன்றும் கற்றதா? பால் கொடுக்க மறந்ததா? நந்தவனம் கற்றதா? நறுமலர் தர மறந்ததா? விளைநிலம் தான் கற்றதா? விளைச்சல் தர மறந்ததா? தென்னை மரம் கற்றதா? தேன்சுவைநீர் தர மறந்ததா? கழுதைக் கூட்டம் கற்றதா? பொதிசுமக்க மறுத்ததா? ஊற்று நீர் கற்றதா? நீர் சுரக்க மறந்ததா? பெற்ற மக்கள் கற்றதேன்? பெற்றோரை வீதியில் விட்டதேன்? மனிதகூட்டம் கற்றதேன்? மனிதம் மறந்து போனதேன்?

சத்ய சாய் பாபா ஆல்பம்

Image

பாபாவுக்கு கவிதாஞ்சலி!

Image
பாபாவுக்கு கவிதாஞ்சலி!   சத்ய சாயி! நீதான் உன் பக்தர்களுக்கெல்லாம் ஆயி! நீ செய்வாய் சித்து பக்தர்களுக்கெல்லாம் உன்மேல் பித்து! நீ சேர்த்திருக்கலாம் பல கோடி சொத்து ஆனால் உன் அமுத மொழிகளே எங்கள் முத்து! புட்டபர்த்தி எனும் சிறு மெழுகுவர்த்தி உன்னால் ஆனது பெரும் காட்டுத்தீ!   பிரசாந்தியில் நீ ஆற்றும் உரை! இனி எப்பொழுது சேர்வோம் கரை! பக்தியொடு தேவை மக்கள் சேவை! அன்போடு உணர்த்தினாய் இதை! தந்திரம் என பழித்தோரும் உன்னிடம் பெற்றனர் மோதிரம்! சென்னையின் தாகம் தணித்த இறை மன்னவனே! ஆயிரம் கல்விமையம் உன் பாயிரம் பாட உன் மருத்துவ சேவைமையங்கள் மகத்துவம் பேச நீ சென்றாய் உன் உடலை விட்டு! தகிக்கும் வெயிலில் தவிக்கும் தளிர்களைப்போல தவிக்கும் பக்தர்களைவிட்டு! உன்னுயிர் உன்னைவிட்டுச் சென்றாலும் உன்னருள் என்றும் எமை காக்கும்! உன் புகழ் என்றும் உலகினில் நிலைத்து நிற்கும்!

Sathya Sai Baba solve the drinking water problem in chennai | சென்னையின் தாகம் தீர்த்த சத்யசாய் பாபா Dinamalar

Sathya Sai Baba solve the drinking water problem in chennai | சென்னையின் தாகம் தீர்த்த சத்யசாய் பாபா Dinamalar

அறிந்து கொள்வோம்!

Image
அறிந்து கொள்வோம்! உலகிலேயே மூன்று இடங்களில்தான் வைரம் கிடைக்கிறது.அதில் இந்தியாவும் ஒன்று. ஆயிரம் கிலோ மண்ணைத் தோண்டி அலசினால் 1மில்லிகிராம் வைரம் மட்டுமே கிடைக்கும். பெருவா எனும் ஒரு செடியின் வேரிலிருந்து வடியும் திரவம் உலர்ந்து பெருங்காயமாக நமக்கு கிடைக்கிறது.பெருவா எனும் செடி வளைகுடா நாடுகளில் மட்டுமே உள்ளது. மைக்கா ஒரு தாதுப்பொருள் இது பூமியிலிருந்து தகடுகளாக வெட்டி எடுக்கப் படுகிறது.ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்திருக்கும் பல நிறங்களில் கிடைக்கிறது. மைக்காவினால் மின்சார கருவிகளும் தீயணைப்புக் கருவிகளும் செய்யப்படுகின்றன. எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூவின் பெயர் கர்வி.மழைக்காலங்களில் மட்டும் பூக்கும் இப்பூ மஹாராஷ்டிரா குஜராத் ம.பி யின் காடுகளில் காணப்படுகிறது. எலிகள் எப்போதும் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கும்.ஏனெனில் அதன் பற்கள் வளர விடாமல் தடுக்க இவ்வாறு செய்கின்றன. எலிகள் தங்கள் பற்களை வளர விட்டால் இரண்டரை செ.மீ நீளம் வளர்ந்து வாய் கிழிந்து இறந்து போகும். பூமியில் உள்ள கடல்களில் மிகப்பெரியது பசிபிக் கடல்.இதன்பரப்பளவு 16கோடி சதுர கீ.மீ பூமியின்

புதுக்குறள்!

Image
புதுக்குறள்! வருக வளைதளத்திற்கு வந்தபின் தவறாமல் தருக தங்கள் ஓட்டு எஃப்ளாக்கை ஃபாலோ செய்யினும் ஹிட்டுண்டாம் ஹிட்டில்லை அன்ஃபாலோ செய்பவர்க்கு   தேடுசொல் தேடி தேர்ந்து எடுத்து தேடித் தரும் கூகுள் ஃபேஸ்புக் லாகிருக்க ஆர்குட் செல்லல் வேஸ்ட் டைம் மச்சி

அடி!

Image
அடி! பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே முளைத்த காளான்களாய் மக்கள் நின்று கொண்டிருக்க எதிரே இருந்த டீ ஸ்டாலில் சூடாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. பிச்சைக்காரன் ஒருவனும் தருமம் கேட்டுக்கொண்டிருக்க நான் பஸ் வராத எரிச்சலில் நின்றுகொண்டிருந்தேன்.        அப்பொழுது ‘சார்’ என்ற குரல் கேட்டு திரும்பினேன். இரண்டு மாணவர்கள். ‘சார் நாங்க குஜராத் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யறோம் உங்களாலே முடிஞ்சதை ஹெல்ப் பண்ணுங்க சார்.நம்ம சகோதர மக்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றனர்.        பஸ் வராத எரிச்சலில் நின்றிருந்த நான், ‘ஏம்பா ஒழுங்கா ஸ்கூல்ல படிக்கிற வேலைய மட்டும் பாருங்க படிக்க மட்டும் மாட்டிங்க இந்த மாதிரி நிவாரணம் நிதின்னு உண்டிய தூக்கிகிட்டு கிளம்பிடுறிங்க’. உங்க அப்பாஅம்மா புள்ள படிக்க போயிருப்பானுங்கன்னு நினைக்க நீங்க ரோட்டுல பிச்சை எடுத்திட்டு திரியறீங்க’. நீங்க வசூல் பண்ணிதான் குஜராத் மக்களுக்கு பணம் கிடைக்க போவுதா? போங்க போங்க என்று எரிந்து விழுந்தேன்.          அவர்கள் முகம் பொலிவை இழக்க மவுனமாக அகன்றனர். அப்பொழுது அந்த பிச்சைக்காரன் அவர்களை கூப்பிட்டான்.தம்பிகளா கொஞ்சம் நில்லுங்க! அவர்கள் காதில் வ

ஹை! ஹைக்கூ!

Image
ஹை ஹைக்கு! வான வீதியில் வர்ணஜாலம்! கந்தகமில்லா பட்டாசு! இடி! பேனா மனதின் மக்களை ஏட்டுச் சுவடியில் பிரசவிக்கும் தாய் தினம் தினம் இளைக்கிறாயே காரணம்தான் என்ன? நாட்காட்டி அட வான வீதியில் வட்ட விளக்கு பவுர்ணமி “சில்” லென்று தழுவும் முகம் காட்டா மோகினி காற்று. ரொம்ப நேரமாய் சிணுங்கியும் எடுப்பாரில்லை மேஜையில் தொலைபேசி தலையை சீவினாலும் தயங்காமல்தருகிறது தண்ணீர்! இளநீர்! காணவில்லையே காணவில்லையே என்று தவித்தவர்கள் கண்டதும் ஒடுவதுஏன்? மழை! இயற்கை அளித்த நிழல் கு(கொ)டை மரம் அஹிம்சையை போதித்த காந்திக்கு ஹிம்சை தபால் தலையில் காந்தி

Dinamalar Sports - Cricket,கிரிக்கெட்

Dinamalar Sports - Cricket,கிரிக்கெட்

பொன்மொழிகள்

Image
ஆன்றோர் மொழிகள் தூசியைக்கண்டதும் இமைகள் மூடுவது போல தீமையை கண்டதும் விலகி விட வேண்டும்.         புலவர் கீரன் தோலிவியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே! தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.                   -லெனின் பழகிய மனைவி,பழகியநாய், தயாராக இருக்கும் பணம் ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய நண்பர்கள்.               பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் தான் சிறந்த அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள் மட்டுமல்ல துன்பம் தருபவனும்கூட.               -டைரர் முயற்சியும் தன்னம்பிக்கையும் ந்றைந்தவனுக்கு நேரம் இரு கைகளையும் தூக்குகிறது.                                             -மண்ட் உண்மை எங்கே இழுத்து செல்லினும் பின் தொடருங்கள்.கோழையாகவும் வேடதாரியாகவும் ஆகாதீர்கள்.                          -விவேகானந்தர். ஒருவனைக் கண்டிக்க நேர்ந்தால் தனிமையில் கண்டியுங்கள்! ஒருவனை பாராட்ட நேர்ந்தால் பலர் அறிய பாராட்டுங்கள்.                      -பப்ளீயஸ் சைரஸ் நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி இன்பமான பொழுது இழ்ந்துவிடுகிறீர்கள்                        -எமர்சன் வெட்கம் மனிதனைவிட்டு விலகினால்

beware of SMS forgery | உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி "வலை' விரிக்கும் கும்பல் Dinamalar

beware of SMS forgery | உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி "வலை' விரிக்கும் கும்பல் Dinamalar

2011 election cartoon | election 2011 cartoon | Political Cartoons | Tamil Nadu Political Cartoons

2011 election cartoon | election 2011 cartoon | Political Cartoons | Tamil Nadu Political Cartoons

கவிப்ரியாவின் கவிதைகள்

Image
நண்பனுக்கு! உயர்ந்த எண்ணங்களை உனதுலட்சியமாக்கிக்கொள் நண்பா! நீ உயர்ந்து நிற்பாய்! தாழ்ந்து விடுவோம் என்ற தயக்கத்தை தள்ளி எறி! துள்ளி ஓடும் புள்ளிமானாய் உன் துயரங்களை தூரவிரட்டு! பள்ளத்தை நாடும் நதிபோல உன் உள்ளத்தை ஒருமுகமாய் லட்சியத்தில் செலுத்து! உன் எண்ணத்தில் உறுதிகாட்டு இறுதிவரைகாலம் கருதி செயல்படு!உன் செயல்கள் உன்னை உயரத்தில் வைக்கும் உலகம் உன்னை போற்றும். உலகம் உன் வசப்படும்! கனவுகளை நினைவுகளாக புனை நண்பா! பனையளவு சோதனைகள் வேதனைகள் அளித்தாலும் சலிக்காதே! வலிக்கிறது என்று அலுக்காதே உன்லட்சியத்தில் உறுதி கொண்டு தொண்டாற்று! தோல்விகளை வேள்விகளாக்கி வெற்றி எனும் சாற்றினை அருந்து கற்பனைகளை விற்பனை செய்! எண்ணன்களை வண்ணங்களாக்கு! சோம்பலை சாம்பலாக்கு! பயம் எனும் பாறையை மோதி உடை! தாழ்வோம் என்று வீழ்ந்து கிடாமல் வாழ்வோம் என்று உயர்வாய் நினை! உலகம் உன் வசப்படும் நண்பா! தாக்காதே! தாயகத்தை தாங்க வேண்டாம் தோழா தாக்காதே! நாம் பிறந்த மண்ணை மதிக்காவிடினும் மிதிக்காதே! நாட்டை வீட்டைபோல் காக்கவேண்டாம் காசுக்காக விற்காமல் இரு! நம் பாரத பழமைகளை புகழ வேண்டாம் இகழாதிரு! நம் பாரம்பரியத்தை போற்ற